Tuesday, 16 October 2018

ஜம்புத் தீவு பிரகடனம்

ஜம்புத் தீவு பிரகடனம் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கிழக்கிந்தியக் கம்பெனி வரிவசூலை ஆற்காட்டு நவாப்பிடமிருந்து பெற்று நேரடியாக வரி வசூலை நடத்திய காலத்தில், தமிழக சிற்றரசர்கள் பரவலாக எதிர்ப்பு தெரிவித்து அங்காங்கே ஆங்கிலேயரை எதிர்த்து போர் நடத்தினர்.

மதுரை நாயக்கர்கள் 72 பாளையங்களாக பிரித்து ஆட்சி செய்த பகுதியில் சிவகங்கைப் பாளையத்தின் பாளையக்காரர் முத்துவடுகநாதர் கொல்லப்பட்ட பின் அவரின் தளபதிகள் மருதிருவர் ஆட்சிப் பொறுப்பேற்றனர்.

அக் காலம், ஆங்கிலேயரின் படைத்தளபதி கர்னல் அக்னியூ விட்ட அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து திருச்சியில் சின்ன மருது வெளியிட்ட மறுப்பு அறிப்புதான் ஜம்புத் தீவு பிரகடனம்.

இந்த அறிக்கை, 1801 ஆம் ஆண்டு சூன் மாதம் 12 ஆம் தேதி திருச்சிக் கோட்டையில் ஒட்டப்பட்டுப் பின், சூன் மாதம் 16 ஆம் தேதி ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டது.

ஜம்புத் தீவு பிரகடனம்ஜம்பு தீபகற்பத்திலுள்ள ஜம்புத் தீவில் வாழும் அந்தணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள், முசல்மான்கள் முதலான அனைத்துச் சாதியார்க்கும் தெரியப்படுத்தும் அறிவிப்பு என்னவென்றால், மேன்மை தாங்கிய நவாபு முகமது அலி அவர்கள் முட்டாள்தனமாக ஐரோப்பியர்களுக்கு நம்மிடையே இடங்கொடுத்து விட்டதன் காரணமாக இப்போது அவர் ஒரு விதவைபோல் ஆகிவிட்டார். ஐரோப்பியர்களோ தங்களுடைய வாக்குறுதிகளை மீறி அவருடைய அரசாங்கத்தையே தங்களுடையதாக ஆக்கிக் கொண்டு நாட்டு மக்கள் அனைவரையும் நாய்களாகக் கருதி ஆட்சியதிகாரம் செய்து வருகிறார்கள். உங்களிடையே ஒற்றுமையும் நட்பும் இல்லாத காரணத்தினால், ஐரோப்பியரின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ள இயலாமல், உங்களுக்குள் ஒருவரை யொருவர் பழிதூற்றிக் கொண்டது மட்டுமின்றி, நாட்டையும் அந்நியரி டம் ஒப்படைத்து விட்டீர்கள். இந்த ஈனர்களால் இப்போது ஆளப்படும் பகுதிகளிலெல்லாம், மக்கள் பெரிதும் ஏழ்மையில் உழல்கிறார்கள்; சோற்றுக்குப் பதில் நீராகாரம்தான் உணவு என்று ஆகிவிட்டது. இப்படித் துன்பப்படுவது தெரிந்த போதிலும் எக்காரணங்களினால் இத்துன்பங்கள் ஏற்பட்டன என்பதைப் பகுத்தா ராயவும் புரிந்துகொள்ளவும் இயலாத நிலையில் மக்கள் இருக்கின்றனர். ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதாக இருந்தாலும் மனிதன் கடைசியில் செத்துத்தான் ஆகவேண்டும்… ஆதலால் பாளையங்களில் உள்ள ஒவ்வொருவரும் போர்க்கோலம் பூண்டு ஒன்றுபட வேண்டும். இந்த ஈனர்களின் பெயர்கள் கூட நாட்டில் மிஞ்சியிருக்காமல் செய்யவேண்டும். அப்போதுதான் ஏழைகளும் இல்லாக் கொடுமையால் அல்லல் படுவோரும் வாழ முடியும். அதே நேரத்தில் இந்த ஈனர்களுக்கு தொண்டூழியம் செய்து நாயைப் போல சுகவாழ்வு வாழ விரும்புகிறவன் எவனாவது இருந்தால் அத்தகைய பிறவிகள் ஒழித்துக் கட்டப்பட வேண்டும்… ஆதலால்….. மீசை வைத்துக் கொண்டிருக்கும் நீங்கள் எல்லோரும், அதாவது இராணுவம் அல்லது மற்ற தொழில்களில் ஈடுபட்டிருக்கும் நீங்கள் அனைவரும் மற்றும் ஈனமான அந்நியன் கீழ்த் தொண்டு புரியும் சுபேதார்கள், அவில்தார்கள், நாயக்கர்கள், சிப்பாய்கள் மற்றும் போர்க் கருவிகளைப் பயன்படுத்தும் அனைவரும் உங்களுக்கு வீரமிருந்தால் அதைக் கீழ்க்கண்டவாறு நீங்கள் வெளிப்படுத்த வேண்டும். ஐரோப்பியர்களாகிய இந்த ஈனர்களை எவ்விடத்தில் கண்டாலும் கண்ட இடத்தில் அவர்களை அழித்து விடவேண்டும்… இந்த ஈனர்களுக்கு எவனொருவன் தொண்டூழியம் செய்கிறானோ அவனுக்கு இறந்தபின் மோட்சம் கிடையாது என்பதை நான் உறுதியாகக் கூறுவேன்… இதை ஏற்றுக் கொள்ளாதவன் வைத்திருக்கும் மீசை என்பது என்னுடைய அடி மயிருக்குச் சமமானது… இதனை ஏற்றுக் கொள்ளாதவனுடைய பிள்ளைகள் ஐரோப்பிய ஈனப்பிறவிகளுக்குத் தன்னுடைய மனைவியைக் கூட்டிக் கொடுத்தவன் பெற்ற பிள்ளைகள் ஆவார்கள். எனவே, உடம்பில் ஐரோப்பியனின் ரத்தம் ஓடாத அனைவரும் ஒன்று சேருங்கள்!…. இதைப் படிப்பவர்களோ கேட்பவர்களோ இதில் கூறியிருப்பதைப் பரப்புங்கள்… எவனொருவன் இந்த அறிவிப்பை ஒட்டப்பட்ட சுவரிலிருந்து எடுக்கிறானோ அவன் பஞ்சமா பாதகங்களைச் செய்தவனாகக் கருதப்படுவான்…

இப்படிக்கு,
மருது பாண்டியன்
பேரரசர்களின் ஊழியன், ஐரோப்பிய ஈனர்களின் ஜென்ம விரோதி.

நாராயண யோகீசுவர்

தமிழ்நாடு சிவகங்கை அருகே உள்ள காளையார்கோயில் பாண்டி நாட்டு சிவத்தலங்களுள் ஒன்று. மேலும் 18ம் நூற்றாண்டு ஆங்கிலேய எதிர்ப்புப் புரட்சிகளுக்கு மையமாக அமைந்த ஊர். சிவன் கோவிலில் 3 சிவலிங்கங்கள் உண்டு. பண்டைத் தமிழ் இலக்கியங்களில் இவ்வூர் திருக்கானப்பேர் என அறியப்ப்டும் சிறப்பை தன்னகத்தே கொண்டிருந்தது.

பொருளடக்கம்

  • 1 சித்தபுருஷர் நாராயண யோகீஸ்வரர்
    • 1.1 கருவறைக்குள் மாமிச பண்டங்கள்
    • 1.2 ஓற்றரை நியமித்தார்
    • 1.3 சிவலிங்கத்திற்கு நிணம் கொண்டு பூஜை
  • 2 மண்ணுக்குள் புதைக்கப்பட்டார்
  • 3 மருதிருவர்களுக்கு சாபம்
  • 4 ஜீவ சமாதி

சித்தபுருஷர் நாராயண யோகீஸ்வரர்

இவ்வூரில் 2000 ஆண்டு காலமாக சித்த நிலை அடைந்த ஒரு யோக புருஷர் ஜீவ சமாதியில் இருந்து வந்தார். அவர் பெயர் நாராயண யோகீஸ்வர் என்பர். 1801ம் ஆண்டு ஜூலை வாக்கில் சிவன் கோயில் அர்ச்சகர்கள் ஒரு புதிரான சம்பவத்தைக் கண்டனர். நள்ளீரவு அர்த்த ஜாம பூஜை முடிந்து கதவுகள் மூடப்படும். வெளியிலிருந்து ஒருவரும் கோவிலிக்குள் செல்ல இயலாது.

கருவறைக்குள் மாமிச பண்டங்கள்

மறு நாள் காலையில் கதவுகள் திறந்ததும் சுவர்ண காளீஸ்வரர் கருவறைக்குள் மாமிசத் துண்டுகள் மற்றும் எலும்புத் துண்டுகள் இறைந்து கிடக்கும். பல நாட்கள் இவ்வாறு நடக்கவே அர்ச்சகர்கள் ஆச்சர்யம், அதிர்ச்சி அடைந்து இதனை ஆட்சி அதிகாரத்திலுள்ள மருது இருவரிடம் தெரிவித்து ஆகம விதிகளுக்குப் புறம்பான கருவறைக்குள் மாமிச பண்டங்கள் சிதறுதலைத் தடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

ஓற்றரை நியமித்தார்

மருதிருவர் ஆச்சரியம் அடைந்தவராக சுவர்ண காளீஸ்வரர் கருவறைக்குள் அர்த்த ஜாம காலத்திற்குப் பின்னர் இருந்து நிகழ்வுகளை ஆராய ஓர் ஓற்றரை நியமித்தார்.

சிவலிங்கத்திற்கு நிணம் கொண்டு பூஜை

மருதிருவரின் ஆணைப்படி கருவறைக்குளிருந்த ஓர் ஓற்றர் கதவுகள் அடைக்கப்பட்டபின்னும் கருவறைக்குள் ஒரு சுரங்கப்பாதை வழியே முதியவர் ஒருவர் வந்து சிவலிங்கத்திற்கு நிணம் கொண்டு பூஜை செய்வதை அந்த ஒற்றர் கண்டு அப்பெரியவைக் கைது செய்து மருதிருவர் முன் நிறுத்தினர். மருதிருவர் அப்பெரியவரின் செயல் பற்றி வினவ அப்பெரியவர் தான் ஒரு சித்தபுருஷர் என்றும் கடந்த 2000 ஆண்டு காலமாக நிண பூஜை செய்து வருவதாகவும் இன்னிண பூஜை முறை சித்தர் சாத்திரப்படி சரியானது என்றும் பதிலளித்தார். அப்பெரியவரின் கூற்றில் சந்தேகமடைந்த அர்ச்சகர்கள் அவர் ஒரு சித்தபுருஷர் என்பதை முறைப்படி நிறுவும்படி கோரவே அப்பெரியவர் அர்ச்சகர்களின் சவாலினை ஏற்றார்.

மண்ணுக்குள் புதைக்கப்பட்டார்

அதன்படி அப்பெரியவர் மண்ணுக்குள் ஆழப்புதைக்கப்படுவார். அதன் பின்னர் அப்பெரியவர் வேறு எங்காவது தோன்றவேண்டும். இதன்படி ஓர் ஒற்றர் ராமேஸ்வரம் அனுப்பப்பட்டார். அப்பெரியவர் மண்ணுக்குள் புதைக்கப்பட்டார். அப்பெரியவரின் கூற்றில் மீண்டும் மீண்டும் சந்தேகமடைந்த அர்ச்சகர்கள் மருதிருவரைக் கொண்டு அப்பெரியவர் புதையுண்ட இடத்தினைத் தோண்டச் செய்தனர். அவ்விடம் தோண்டப்பட்டவுடன் அக்குழிக்குள் அப்பெரியவர் இன்னும் தவ நிலையிலிருந்ததையும் ராமேஸ்வரத்திற்கு அனுப்பட்ட ஒற்றனிடமிருந்து அப்பெரியவர் தற்சமயம் ராமேஸ்வரத்தில் தான் உள்ளார் என்ற செய்தி வந்ததையும் கண்டு திகைப்படைந்த அர்ச்சகர்கள் பின் வாங்கினர்.

மருதிருவர்களுக்கு சாபம்

தவ நிலை கலைந்த அப்பெரியவர் சித்தர் நாராயண யோகீஸ்வரர் தன் கூற்றினை நம்பாத அர்ச்சர்களை நம்பிய மருதிருவர்களுக்கு ஒரு சாபம் இட்டார். அதன்படி அன்றிலிருந்து 90 நாட்கள் கழித்து மருதிருவரின் முடிவு அமையும் என்பது யோகீஸ்வரரின் சாபமாகும். யோகீஸ்வரரின் சாபத்திற்குள்ளான மருதிருவர் மிகச்சரியாக 90 கழித்து 24-10-1801 அதிகாலை ஆங்கிலேயர்களால் திருப்புத்தூரில் தூக்கு மேடையில் வீர மரணம் எய்தினர்.

மருதுபாண்டியர் குடும்பத்து நகைகள்

மருதுபாண்டியர் குடும்பத்து நகைகள் 24, அக்டோபர் 1801இல் ஆங்கிலேயரால் மருதுபாண்டியர் தூக்கிலிடப்பட்ட பின்னர் அவரின் மனைவி வீராயி, மருதுபாண்டியரின் மகன் சிவஞானத்தின் மனைவி மீனாம்பாள் இவர்களது 6600 நட்சத்திர பகோடாப் பெறுமானமுள்ள நகைகள் சிவகங்கை ஜமீந்தாரால் பறித்துக்கொள்ளப்பட்டன.

அவ்விரு பெண்களும் 1803ல் நகைகளைக்கோரி நீதி மன்றத்தில் வழக்குத்தொடுத்தனர். நகைகளை அவர்களிடம் வசம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் ஆணையிட்டது. கீழ்க் கோர்ட் தீர்ப்புக்கு எதிராக ஜமீந்தார் திருச்சியிலுள்ள சதர்ன் பிரொவின்சியல் கோர்ட் ஆஃப் அப்பீல் (Southern Provincial Court of Appeal) இல் மேல் முறையீடு செய்தார்.

 3 மார்ச், 1806இல் அப்பீல் கோர்ட் ஸ்மிருதி சந்திரிகா எனும் இந்து நூலை ஆதாரமாகக் கொண்டு, மருதுபாண்டியர் சிவகங்கைச் சீமைக்கு அடிமைகள் ஆகவே அவர்களின் மனைவியரும் அடிமைகள். அடிமைகளுக்குச் சொத்து உரிமை கிடையாது. எனவே ஜமீந்தார் கைப்பற்றிய நகைகளைக் கோரிட உரிமை கிடையாது என ஜமீந்தாருக்கு ஆதரவாகத் தீர்ப்பு உரைத்தது.

உசாத்துணை


    1. 1. Sessional Papers Printed By Order of the House Of Lords 1841 அதில் குறிப்பிட்டுள்ள தீர்ப்பு judgment 363 of Southern Provincial Court of Appeal Trichinopoly dated 17 March 1806
    3.) No 363 Southern Provincial Court of Appeal Trichinopoly dated 17 March 1806.......... as the property appears to have been taken by the Zemindar during the operation of military law in the district........

    சின்ன மருது மகன் துரைச்சாமி

    சின்ன மருது மகன் துரைச்சாமி

    துரைச்சாமி என்பவர் சிவகங்கைச் சீமையில் ஆங்கிலக் கிழக்கந்தியக் கம்பெனியர்க்கு எதிராக 1785 முதல் 1801 வரை போராடிய சின்ன மருதுவின் மகன்.

    பொருளடக்கம்

    • 1 வாழ்க்கைச் சுருக்கம்
    • 2 பினாங்கில் துரைச்சாமி
    • 3 துரைச்சாமியின் இறுதி நாட்கள்

    வாழ்க்கைச் சுருக்கம்

    சின்ன மருது மகன் துரைச்சாமியின் இயற்பெயர் முத்து வடுக நாத துரை. பின்னர் அந்தப் பெயர் துரைச்சாமி என மருவியது என்று சிவகங்கை அம்மானை எனும் நூல் மூலம் அறிய முடிகிறது.

    துரைச்சாமி உட்பட 11 பேரைப் பிடித்துக் கொடுத்தால் 1000 கூலிச் சக்கரங்கள் ( 18ம் நூற்றாண்டு நாணயம்) பரிசாக வழங்கப் படும் என்று ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனித் தளபதி கர்னல் அக்னியூ 1801, அக்டோபர் 1 இல் சிவகங்கை குடிமக்களுக்கு ஒரு பொது அறிவிப்பைப் பிரகடனப் படுத்தினார்.

    மருது சகோதரர்கள் 1801, அக்டோபர் 24 இல் தூக்கிலிடப்பட்டனர். அதன் பின்னர் 15 வயதே ஆன துரைச்சாமி உட்பட 73 பேர் மலேயாவின் பிரின்ஸ் ஆப் வேல்ஸ் தீவிற்கு (இன்றைய பினாங்கு) 1802, பெப்ரவரி 11 இல் நாடு கடத்தப் பட்டனர்.

    பினாங்கில் துரைச்சாமி

    1818 ஆம் ஆண்டு தளபதி வெல்ஸ் (Colonel Welsh) பினாங்கிற்குச் சென்ற போது உடல் நலம் குன்றிய தோற்றத்துடன் காணப் பட்ட துரைச்சாமியைக் காண நேர்ந்தது. துரைச்சாமியின் அந்தத் தோற்றத்தைக் கவனித்த தளபதி வெல்ஸ் தன்னுடைய இதயத்தில் கத்தி பாய்ந்தது போல இருந்தது என குறிப்பிடுகின்றார்

    துரைச்சாமியின் இறுதி நாட்கள்

    1891, மே 18 ஆம் நாள், துரைச்சாமியின் மகன் மருது சேர்வைகாரன் என்பவர் மதுரைக் கலெக்டரிடம் ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்த மனுவில் துரைச்சாமியின் இறுதி நாட்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

    துரைச்சாமி பினாங்கில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப் பட்டார். அவர் ஆங்கில அரசிடம் பாதுகாப்புக் கோரி மதுரையில் தங்கியிருக்க அனுமதி கேட்டு இருந்தார். ஆனால் திடீரென துரைச்சாமி நோய்வாய்ப் பட்டு சிவகங்கைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு அவர் காலமானார் என்று அவருடைய மகன் குறிப்பிடுகின்றார்.

    மருது சகோதரர்களின் நினைவுகள்

    குன்றக்குடியில் அரண்மனை ஒன்ற¨ கட்டியுள்ளனர். மருது பாண்டியர் அவையில் புலவர் குழு ஒன்றை அமைத்து, தமிழ்ச்சங்கம் மூலம் தமிழ் வளர்த்ததாகவும் கூறப்படுகிறது. மயூரி கோவை என்ற கவிதை நூல் அரங்கேற்றப்பட்டுள்ளது. பெரிய மருது பிறந்த நரிக்குடியில் அவர்கள் தாய் பொன்னாத்தாளுக்கு சத்திரம் கட்டப்பட்டுள்ளது. 

    சகோதரர்கள் கலைகளை வளர்த்தனர். நாடகக் கலை வளர்ச்சி பெற்றுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு தேர் வழங்கியுள்ளார்கள். காளையார் கோவில் அருகே உள்ள சருகனியில் தேர் செய்து கொடுத்திருக்கிறார்கள்.

    1799ஆம் ஆண்டு கயத்தாரில் அக்டோபர் 17ஆம் நாள் கட்டபொம்மன் ஆங்கிலேயரால் தூக்கிலப்படுகிறார். அதற்குப் பிறகு, வீரபாண்டிய கட்டபொம்மன் தம்பி ஊமத்துரைக்கு சின்ன மருது அடைக்கலம் தருகிறார். அதற்காகவே 1801 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள், சிவகங்கை மீது தாக்குதல்களை தொடுக்கின்றனர்.

    முதலில் ஆங்கிலேயர்களிடமிருந்து போராடி 3 மாவட்டங்களை மருது சகோதரர்கள் மீட்கின்றனர். மருது பாண்டியர்களுடைய போர் திறமையை அடக்குவதற்காக, ஆங்கிலேயர்கள் இங்கிலாந்திலிருந்து அதிகமான படை பலத்தைப் பெற்று வந்ததாக ஒரு வரலாற்று செய்தி உண்டு. காளையார் கோவிலில் ஆங்கிலேயர்களுடைய படை மருது பாண்டியர்களுடைய படையை சுற்றி வளைத்ததாகவும், ஆனால் மருது சகோதரர்கள் தப்பிவிட்டதாகவும் கூறுகிறார்கள். 
     
    விருப்பாச்சியில் ஆங்கிலேயர் படையுடன் மோதி, சகோதரர்கள் வென்றிருக்கிறார்கள் என்றும் சரித்திரம் இருக்கிறது. போர் வீரர்களாக மட்டுமில்லாமல், நிர்வாகத் திறமையையும் மருது சகோதரர்கள் நிரூபித்திருக்கிறார்கள். 1753லிருந்து 1801 வரை மக்களுக்கான நல்வாழ்வு திட்டங்களை செயல்படுத்தியிருக்கிறார்கள். பல்வேறு ஊரணிகளையும், குளங்¨யும் கட்டியிருக்கிறார்கள். இன்றும் கூட அவை ஆதாரமாக அங்கே இருக்கின்றன.
    ஆனால், இன்றைய நிர்வாகத்தினர், அவற்றை சரியாகப் பராமரிக்காத காரணத்தினாலும், தூர்வாரி ஆழப்படுத்தாத காரணங்களினாலும், அவை நீரை தேக்கி நிறுத்தி, வறட்சிக் காலங்களில் விவசாயிகளுக்கு பயன்படுத்துவதற்கு ஏதுவாக இல்லாமல் ஆகிவிட்டன. மருது சகோதரர்கள் காலங்களில் சிவகங்கை வட்டாரம், பசுமையாக இருந்தது என்று கூறுகிறார்கள். மருது சகோதரர்களும், அவர்களது குடும்ப உறுப்பினர்களும் சோழபுரத்தில் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு, 

    1801 ஆம் ஆண்டில் அக்டோபர் 24ஆம் தேதி தூக்கிலிடப்படுகிறார்கள்.
    அவர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து நடத்திய போர் களங்களை, மனலூர் போர், திருப்புவனம் போர், முத்தனேந்தல் போர், காளையார் கோவில் போர், சிவகங்கை போர், மங்களலம் போர், மானாமதுரை போர், மானாமதுரை போர், திருப்பத்தூர் போர், பார்த்திபனூர் போர், காரான்மலை போர் என்று பட்டியல் போட்டு கூறுகிறார்கள்.

    அக்டோபர் 24ஆம் தேதி தூக்கிலிடப்பட்ட மருது சகோதரர்கள், அவர்களது விருப்பப்படி காளையார் கோவில் கோபுரத்திற்கு எதிரே அடக்கம் செய்யப்பட்டனர்.
    நாட்டிற்காக இன்னுயிர் ஈந்த மன்னர்கள் என்பதாக அவர்கள் வழங்கப்படுகிறார்கள். 2004 ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் நாள் மருது சகோதரர்களின் படம் கொண்ட அஞ்சல் தலை இந்திய அரசால் வெளியிடப்பட்டது.

    1857ஆம் ஆண்டைத்தான் வட இந்தியாவில், சிப்பாய் கலகம் நடந்ததையொட்டி, இந்திய முதல் சுதந்திரப் போர் என்பதாக பதிவு செய்யப்பட்டது.
    ஆனால், அதற்கு 56 ஆண்டுகளுக்கு முன்பே 1801 ஆம் ஆண்டில் ஜூன் மாதம் 10ஆம் தேதி திருச்சியிலுள்ள ஸ்ரீரங்கம் கோவிலில் நின்றுகொண்டு, ஆங்கிலேயர்களுடைய ஆட்சிக்கு எதிராக சுதந்திரப் பிரகடனத்தை, மருது பாண்டியர்கள் அறிவித்தார்கள் என்ற செய்தி முக்கியமான ஒரு நிகழ்வு.

    மேற்கண்ட நினைவு தினம், மருது சகோதரர்களை கதாநாயகர்ளாக்குவதற்கோ, அவர்களை வீரர்களாக்கிவிட்டு, நாம் கோழைகளாக நிற்பதற்கோ எடுத்துக்கொள்வது நியாயமான நினைவேந்தலாக இருக்காது. 
     
    மாறாக, நமது மூதாதையர்கள், தமிழ்நாட்டில் இந்த மண்ணை நேசித்தவர்கள், ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்டு மடிந்த கதைகள், நமக்கு இன்றும் கூட அந்நிய ஏகாதிபத்தியங்களின் ஊடுருவல்களும், ஆதிக்கங்களும் இருக்கின்ற சூழ்நிலையில், மீண்டும் மீண்டும் நினைவேந்தி தொடர்ந்து போராட உணர்வுகளை கூர்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே.
    விவசாயத்தில், நிதி மூலதனத்தில், ராணுவத்தில் நுழைகின்ற அந்நிய கரங்களை, மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்ட உணர்வுகளுடன் கணக்கு பார்க்கத் தயாராக இருக்கிறோமா என்று அந்த நினைவு நாள் நம்மைக் கேட்கிறது.

    திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில்

    வணக்கம்.
    நீண்ட காலப் பழமையும் வரலாறும் கொண்ட ஒரு கோயில் மதுரையில் திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில். சங்ககால தொண்மைச் சிறப்புக்கள் அமைந்த ஒரு கோயில் இது. 
     
    சங்ககாலத்தில் பழையன் என்று சுட்டப்படும்  குறுநில மன்னன் ஒருவன் திருமோகூரை ஆண்டு வந்துள்ள செய்தியை மதுரைக்காஞ்சி வரிகள் இப்படிப் பாடுகின்றன.
     
    பழையன் மோகூர் அவையகம் விளங்க
    நான்மொழிக்கோசர் தோன்றியன்ன
     
    இந்த வரிகளில் குறிப்பிடப்படும் நான்மொழிக்கோசர், குறுந்தொகையில் குறிப்பிடப்படும் நாலூர்க்கோசரே எனக்கருதப்படுகின்றது.  வம்ப மோரியர் தென்னாட்டின் மீது படையெடுத்து வந்த போது பழையன் கோசரின் துணையால், வம்ப மோரியரை வென்றதாக அகநானூறு(261) குறிப்பிடுகின்றது. இச்செய்திகளின் அடிப்படையில் காணும் போது பழையரால் ஆட்சி செய்யப்பட்ட கோகூர், மௌரியர் காலத்துக்கு முந்திய பழமை வாய்ந்த ஓர் ஊர் எனத் தெரிகின்றது.
     
    சங்ககாலம் தொடங்கி மாயோன் வழிவாட்டில் புகழ்பெற்றிருந்த இக்கோயில் ஏறக்குறைய எட்டு, ஒன்பதாம் நூற்றாண்டு வாக்கில் கற்கோயிலாக எழுப்பப்பட்டு வழிபாட்டில் இருந்து வந்துள்ளது. திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம்  செய்யப்பட்டுள்ளார் இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் காளமேகப்பெருமாள் சாமி. மணவாளமாமுனிகளும் காளமேகப்பெருமாளைப் பணிந்து பாடியுள்ளார்.
     
    இக்கோயிலின் முன் வாசலில் மருது மண்டபம் என அழைக்கப்படும் கம்பத்தடி மண்டபத்தைக் காணலாம். இங்கு சின்னமருது, பெரியமருது சிற்பங்கள் தூண்களில் செதுக்கப்பட்டுள்ளன. இப்பகுதியை மருது சகோதரகள் கட்டி விரிவு செய்துள்ளனர். 
     
    இதற்கு அடுத்து வரும் மகாமண்டபம் விஜயநகர கலைப்பாணி கட்டுமானம் கொண்டது. 
    இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் தாயாருக்கு மோகனவல்லி, திருமோகூர் வல்லி நாச்சியார், மேகவல்லி நாச்சியார் என்ற பெயர்கள் வழக்கில் உள்ளன.
     
    இக்கோயிலிலுள்ள சுதர்சனர் சிற்பம் 4 அடி உயரத்தில் அமைந்தது. இங்குள்ள பாண்டியன் சடையவர்மன் சுந்தரபாண்டியனின் கல்வெட்டில், காங்கேயன் என்பவரால் இக்கோயிலில் வைக்கப்பட்டுள்ள திருவாழி ஆழ்வாருக்கு வழங்கப்பட்ட நிலக்கொடை குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும் திருவாழி ஆழ்வாராகச் சக்கரத்தாழ்வாரை அதாவது சுதர்சனரை குறிப்பிடலாம். 
    காளமேகப் புலவரும் காளமேகப் பெருமாள் மீது ஒரு தனிப்பாடல் பாடியிருப்பதாக அறியமுடிகின்றது.
     
    இக்கோயிலின் திருச்சுற்றுச்சுவர் கி.பி.1699-1700 வாக்கில் மதுரை மங்கம்மாள் அரசியின் தளவாயாக விளங்கிய நரசப்பையரின் அனுமதியின் பேரில் வெங்கப்பையர் என்பவரால் கட்டப்பட்டுள்ளமையை இக்கோயிலின் கல்வெட்டிலிருந்து அறிய முடிகின்றது.
    ஏராளமான நீண்ட வாசகங்களில் தமிழ் எழுத்து கல்வெட்டுக்கள் இக்கோயிலில் நிறைந்திருக்கின்றன. ஒரு வரலாற்றுச் சின்னமாக  இந்தத் திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் திகழ்கின்றது.
     
    துணை நூல்:
    மாமதுரை,பொ.இராசேந்திரன், சொ.சாந்தலிங்கம், –  பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் வெளியீடு.