Tuesday, 16 October 2018

மருதுபாண்டியர் வரலாறு




மருதுபாண்டியர்   வரலாறு

புலவர்தேவரம்பூர் மாணிக்கம்




விடுதலைக்காக தங்கள் இன்னுயிர்களையே காணிக்கையாக்கிய இந்திய 



சுதந்திரப் போராட்ட மாவீரர்கள் மருது பாண்டியர்களை நாம் மறக்க இயலாது. 200 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவை விட்டு பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற முறைப்படி பிரகடனம் (ஜூன் 1801) யவியிட்டு, தென்னிந்தியாவில் அனைத்து பிரிடிஷ் எதிர்ப்பு ஆயிதப் போராட்டங்களை தலைமை தாங்கி நடத்தியவர்கள் சிவகங்கைச் சீமையின் மருதுபாண்டியர் சகோதரர்கள். அன்று நம் நாட்டை ஆட்சி செய்த மன்னர்கள் ‡ பாளையங்களின் தலைவர்களிடையே உள்ள ஒற்றுமையின்மையைப் பயன்படுத்தி வெள்ளையர்கள் நயவஞ்சகமாக சூழ்ச்சிகள்மூலம் நம் நாட்டைப் பகுதி, பகுதியாய் ஆக்கிரமிப்பு செய்து நம் மன்னர்களையும் மக்களையும் மிகக் கேவலமாய் நடத்தினர். வாணிபம் செய்து பிழைக்க வந்த இந்த வெள்ளையார்கள் ஆக்கிரமிப்பில், ஆட்சியில் நம் மக்களின் இழிவான, அடிமை வாழ்வைக் கண்டு கொதித்தெழுந்தனர் மருதுபாண்டியர்.
வெள்ளையர்களை இந்நாட்டை விட்டே வெளியேற்றுவதன்மூலம் நம் மக்கள் சக்தியைத் திரட்ட அந்தக் காலத்திலேயே அமெரிக்க சுதந்திரப் போராட்டத்தினர் வெளியிட்டது போல வரலாற்றுப் புகழ் மிக்க பிரகடனம் வெளியிட்டனர். அதன்மூலம் பிராமணர்கள். இஸ்லாமிய மக்கள், சத்திரியர்கள், ஆதிதிராவிட மக்கள் கிறிஸ்துவர்களை பிரிட்டிஷ் ஏதாகதிப்பதியத்தை எதிர்த்து ஐக்கியமாய்ப் போராட நேர்த்தாஜிவாக். பலபாரைச் சேர்ந்த வர்மா, கன்னத்தின் கிருஷ்ணப்ப நாயக்க, கோயம்புத்தூரைச் சேர்ந்த கான்‡இ‡கான் மற்றும் திண்டுக்கல் போபால் நாயக்கர் போன்ற தீவிர புரட்சியாளர்கள் ஒருங்கிணைந்து தீரமுடன் ஆவேச உணர்ச்சிகளுடன் பிரிட்டிஷ் எதிர்ப்பு ஆயுதப் போராட்டங்களுக்கு தலைமை ஏற்று நடத்தியவர்கள் மருதுபாண்டியர்கள். ஆனால் வெள்ளையார்களின் வெள்ளிக் காசுகளுக்கும், காடு நில குத்தைகளுக்கும்,  கைக்கூலி பரிசுகளுக்கும் ஆசைப்பட்டு நம் நாட்டு மன்னர்கள், மக்கள் துரோகிகள் சிலர் கொடுத்த  சிலர் கொடுத்த துப்புகள், தகவல்கள்மூலம் ஆங்கிலப் படைகளுக்கு  சிலர் கொடுத்த வாய்ப்புகள், தகவல்கள்மூலம் ஆங்கிலப் படைகள் மருதுபாண்டியர்களை கைது செய்தது.

லெப்டினன்ட் கர்னல் அக்னியுவின் மரண தண்டனை உத்தரவின்பேரில் பெரிய (வெள்ளை) மருது, சின்ன மருது அவர்களிருவரின் ஆண் மக்கள், சந்ததிகள் அனைவரையும் திருப்புத்தூர் கோட்டையில் ஒரே சங்கிலியால் இணைத்து 1801 ம் ஆண்டு அக்டோபர் 4ம் நாள் தூக்கிலிடப்பட்டு வீரமரணம் அடைந்தார்கள். இதன்மூலம் இந்திய சுதந்திரப் போராட்டங்களுக்கு 1801ம் ஆண்டிலேயே வழிவகுத்திட்ட முன்னோடிகள் மருதுபாண்டிய சகோதரர்கள் ஆவர்.

மருதுபாண்டியர் திருப்புத்தூரில் அடக்கம்:

மருது சகோதரர்கள் உடல்களை அவர்களின் அடுத்த வாரிசுதாரரான நரிக்குடி பெருமாள் சேர்வை கர்னல் அக்னியூவிடமிருந்து பெற்று, திருப்புத்தூர் சிங்காரத் தோப்பு என்ற இடத்தில் அடக்கம் செய்து அங்கேயே குடும்பத்துடன் தங்கி, அடக்கம் செய்யப்பட்ட இடத்தைப் பாதுகாத்து, பொங்கலிட்டு வழிபட்டு வந்தனர். வழிவழியாய் பரம்பரையாக மருபாண்டியர்கள் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டவிபரங்களை விசாரணை நடத்தி விபரங்களை அறிவிக்குமாறு தமிழ்நாடு அரிசின் தலைமை செயலர் உத்திரவின்படி 1977ல் இராமநாதபுரம் மாவட்டம் கலெக்டர் திருப்புத்தூர் தாசில்தார் அவர்களுடன் இடத்தைப் பார்வையிட்டு விசாரணைகள் செய்து மருதுபாண்டிய சகோதரர்கள் உடல்கள்  திருப்புத்தூரில் அடக்கம் செய்யப்பட்டது.

இதற்கான அறிக்கை அரசுக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையின்படி தமிழக அரசின் அன்றைய முதல்வர் மு.கருணாநிதி அவர்கள் மருது சகோதரர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சிவகங்கை மன்னர்கள் மருதுபாண்டியர்களுக்கு நினைவு மண்டபம் எழுப்பவும், அந்த மண்டபத்தில் மதுபாண்டியர் உருவச்சிலைகளை அமைத்திடம் 1990 ஜூன் 16ல் அரசாணை பிறப்பித்தார். அதன் பிரகாரம் அதிழக அரசு திருப்புத்தூரில் நினைவு மண்டபம் கட்டி மருதிருவர் சிலைகளையும் நிறுவியது. 24.10.1997ல் அரசு சார்பில் முதன் முறையாக மாலைகள் அணிவிக்கப்பட்டது.

போர்பயிற்சி பாண்டியர் நாட்டம்

இன்றைய சிவகங்கை மாவட்டத்தில் அருப்புக்கோட்டை அருகில் உள்ள நரிக்குடி முக்குளம் என்ற கிராமத்தில் வாழ்ந்த மொக்க பழநி என்ற உடையார் சேர்வை தம் மக்களுக்கு முறையே போர்ப் பயிற்சிகளை கற்றுக் கொடுத்து அவர்களை தீரமிக்க வீரர்களாக்கினர். மருதிருவரின் துணிச்சலான செயல்களைப் பாராட்டி முத்து விஜய ரெகுநாத சேதுபதி பாண்டியன் என்ற சிறப்பு பட்டத்தை அவர்களுக்குச் சூட்டினார்.

தமிழ்ச்சங்கம் அமைத்த மருதுபாண்டியர்

மருதுபாண்டியர் குறுகிய கால ஆட்சியில் அவர்கள் அரசவையில் 21 தமிழ்ப்புலவர்கள் இருந்ததாகவும், மருதரசரசர்கள் புகழ்பாடும் மயூரகிரிக் கோவை ஆசிரியர் காந்தமுத்துப் புலவர், முத்து வேலுக் கவிராயர் போன்ற பல தமிழ் வித்துவான்கள் இருந்தார்கள் என்பதையும், அவர்களுக்கு மருதரசன் வழங்கிய பல கிராமங்களை நிலக் கொடைகள் போன்ற விபரங்களை வரலாற்று தூண்களில் காணமுடிகிறது.

ஆன்மீகப் பற்று ஆலயத் திருப்பணிகள்

பெரிய மருதுபாண்டியர் தெய்வ பக்தி உடையவர். தம் ஆட்சிக்கு உட்பட்ட ஆலயங்களில் மட்டுமல்ல ‡ மதுரை, இராமநாதபுர மாவட்டங்களில் உள்ள பல ஆலயங்களின் திருப்பணிகளையும், சிறப்புறச் செய்து அக்கோயில்களின் நிர்வாக அன்றாட பூஜைகள், திருவிளக்குகள் எரிய எண்ணைக்கான மற்றும் கோயில் பராமரிப்பு செலவுக்கான மேற்படி ஆலயங்களுக்கு ராஜமான்யமாகப் பல கிராமங்களை மருதுபாண்டியர் நலக்கோடையாகத் தாமிர பட்டயங்கள்மூலம் அளித்துள்ளார்கள். குன்றக்குடி, திருப்புத்தூர், காளையார்கோவில், சிவகங்கை, மானாமதுரை, மதுரை, திருமோகூர், திருப்பாசேத்தி, திருப்புல்லாணி, திருக்கோஷ்டியூர் ஆகிய ஊர்களில் உள்ள கோயில்கள் மருதுபாண்டியர் செய்த திருப்பணிகளுக்கு ஓர் எடுத்துக் காட்டு.


மருதுபாண்டியரின் ஆட்சிகாலத்திலேயே தேசிய ஒருமைப்பாட்டையும் மதச்சார்பின்மையும் கடைபிடித்து செயல்படுத்தினார்.
பசும்பொன் மாவட்டம் சருகணி புதிய மேரி மாதா சர்ச் மற்றும் இஸ்லாமிய நரிக்குடி பள்ளிவாசல், பெரிய கோட்டை பள்ளிவாசல் பாசிப்பட்டினர் தர்கா, திருப்புத்தூர் காசியா ஒளி தர்க்கா போன்றவற்றை நிறுவியதன்மூலம் இவர்களின் மதச்சார்பின்மை வெளிப்படுகிறது.

காளையார் கோவில் ரதம்:

நாம் சொல்வதைக்  குப்பமுத்தாசாரி தட்டிக் கழிப்பார்? நான் அப்படி நினைக்கவில்லை. தம்பி பெரிய மருதுபாண்டியர் தன்னம்பிக்கையுடன் கூறினார்.
அண்ணாவின் சொல்லைக் கேட்டு அரும்பிய புன்னகையுடன் அமர்ந்திருந்திருந்தார் சின்னமருது பாண்டியர். அவருக்கென்னமோ சிற்பி குப்பமுத்தாசாரி, காளையார் கோவில் ரதத்தை உருவாக்க ஒப்புக் கொள்வார் என்ற நம்பிக்கை எள்ளளவும் இல்லை.

குப்ப முத்தாசாரி அந்நாளில் கைதேர்ந்த சிற்பி. உண்மை ஊர் அறியும். சிற்பக் கலையின் மாணிக்கமாய் விளங்கிய மரபில் வந்தவர். தந்தையைவிட மிக அற்புதமான கலைஞர். நாடே கூறும். இவையயல்லாம் ஒரு பத்தாண்டுகளுக்கு முன்னே.

இப்போது? அடங்கி ஒடுங்கி தம்மகத்தே ஆமைபோல் அமைதி தேடிக் கொண்டிருந்தார் அவர். அவருக்குக் கலைவாழ்வு வெறுத்துவிட்டது. தம் தந்தையின் இறப்புக்குப் பின்னர். எனவே, குடிவழியில் தொடர்ந்து வந்த மற்றொரு தொழிலான சோதிடக் கலையைப் பிழைப்பாக மேற்கொள்ளலானார் குப்பமுத்தாசாரி.
அவர் சிற்பக்கலையில் வெறுப்படைந்ததற்குக் முதல் காரணம் இதுதான். படைத்து வைக்கும் கலைப்  பொருட்கள் அனைத்தையுமே பாவிகள், வெள்ளைப் பரங்கியர்களால் பாழாய் போகின்றன. அப்படி இருக்க ஏன் படைக்க வேண்டும்? எதற்காகப் படைக்க வேண்டும்?
படைத் தலைவன் நயினப்ப சேர்வை அரண்மனைக்கூடத்துக்குள் நுழைந்தான். கடைசியாகக் குப்ப முத்தாசாரியிடம் அவனைத்தான் தூது அனுப்பி இருந்தனர்.

பாண்டிய நாட்டுப் பூபதிகளுக்கு என வணக்கும். குப்பமுத்தாசாரியாரை ஒப்புக் கொள்ளச் செய்துவிட்டேன். இதோ அவரையும் அழைத்து வந்திருக்கிறேன் என்றான் சேர்வை.
அகமும் முகமும் மலர மருதுபாண்டியர்கள் இருவரும் எழுந்து சென்று வரவேற்றனர். இவர்கள் நாட்டுக்குக் காவலர்கள். அந்நாட்டை நாகரிகம் பெறச் செய்து வாழவைக்கும் காலையின் காவலாயிற்றே குப்பமுத்தாசாரி
ஆசாரியவர்களே! காளையார் கோவிலின் கோபுரத்தைக் கட்டி முடித்த மருதுவின் புகழ் ஒரு புகழல்ல இதோ மருதமரத்தால் காளீநுவரருக்குப் பெரிய ரதம் உருவாக்கப் போகும் தங்களுடைய கபழைத்தான் பெரும்புகழ் என்பேன்! என்னால், என்னுடைய ஆயுள் மிகச் சொற்பம் தாங்கள் படைக்கும் கலையின் ஆயுள் ஆயிரமாயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கும். எனவே, பாறைசாச்சியபடி பல சிற்பிகள் வந்திருக்கின்றனர். மருதமரங்களும் ஏராளமாகக் குவிந்துவிட்டன. இனி தாங்கள் தலைமை தாங்கி உருவாக்க வேண்டியதுதான். என வேண்டுகோளை மறுக்காமல் ஒப்புக் கொண்டதற்கு மகிழ்ச்சி.

நன்றி மன்னவா ஆனால் என்று தயங்கினார் குப்பமுத்தாசராரி

சின்ன மருது முன்வந்து செற்றியைச் சுளித்தார். சொல்லுங்கள் சிற்பியாரே!  மேலும் மேலும் சிந்தனை ஒருவாறு முடிவைக் கண்டது. எப்படியும் ரதத்தை உருவாக்கியே தீரவேண்டும் கொடுத்த வாக்கை இதுவரை அவரது மரபினர் மீறியதே கிடையாது. மேலும் நாடி சொன்ன செய்தியை அரசரிடம் கூறுவதும் தகாத ஒன்று. அப்படிக் கூறினாலும் நம்புவோர் போக நம்பாதவர்கள். செயல்பட ஒப்புக் கொள்ளாமைக்காகச் செப்படி வித்தை செய்திறான் இந்த சிற்ப ஆசாரி என்று ஊரறிய ஓலமிடுவார்கள். ஆகவே, ரதத்தை உருவாக்கியே தீரவேண்டும்.


               தலை வாழட்டும்!

காளையார் கோவில் ரதம் மிகமிக அற்புதமான முறையில் உருவானது. மருதமரத்தின் மஞ்சள் நிறம். தங்கத்தால் ஆக்கப்பட்ட ரதமோ என வியக்கத்தக்க அளவுக்கு விளங்கியது. சிவகங்கை சீமை மக்கள் ஒருமுகமாகக் குப்ப முத்தாசாரியின் திறமைக்குப் புகழ் மாலை சூட்டினார்.
சீமையின் சீமான்களான மருதுபாண்டியர்கள் ரதத்தைப் பார்வையிட்டனர். அவர்களுடைய மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. காளீசுவரர்தான் பாக்கியம் செய்தாரா, அன்றிக் காளீசுவரர் அருளால் குப்பமுத்தாசாரிதான் பாக்கியம் பெறப்போகிறாரா? என்று மருது சகோதரர்கள் மனத்துள் வியந்து பாராட்டிக் கொண்டனர்.
வெள்ளோட்டத்திற்கு நாளும் குறிப்பிட்டாகிவிட்டது.
குறிப்பிட்ட நாளும் நெருங்கியது. குணதிசையில் கதிர்ச் செல்வனும் கனகனக்க எழுந்தான். மக்கள் கூட்டம் காளையார் கோயிலை நாடிக் கடல்போலத் திரண்டது.
மருதுபாண்டியர்களும் அவர்களுடைய பரிவாரங்களும் அரச தோரணையில் மெய்சிலிர்க்க வைத்தது.

காளீசுவரர் கம்பீரமாக ரதத்தில் அமர்ந்தார். அடுத்து மருதுசகோததர்கள் ரதத்தில் ஏறிநின்றனர். பூசனைகள் முடிந்தன.
சிற்பியாரே! ரதத்தைச் செலுத்தலாமல்லவா?
பெரிய மருதுவின் மலர்ந்த ரதத்தை இழுத்தது. அப்போது பெருத்த எழுச்சிக் குரல் கிளம்பி வானை அதிரச் செய்தது. அந்தக் குரலில், மருதுய்யா காளீசுவரா என்ற புகழ்ச்சொற்கள் மிதந்தன.
பலம் கொண்ட மட்டும் ரதத்தை இழுத்துப்பார்த்த மக்களுக்கு வியப்போ பெரிதும் மேலிட்டது. எவ்வளவு பலம் கொண்டு இழுத்தாலும் ரதம் ஓர் அங்குலம்கூட அசைந்தபாடில்லை, அதற்கு காரணம்?
ரதம் இப்படி நகராமல் அடம் செய்வதைக் கண்ட பெரிய மருது ஆசாரியை வியந்த கண்களுடன் நோக்கிக் காரணம் கேட்டார். ஆசாரியும் அந்தச் சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியவர் போல கூறினார்.
அரசே! சிற்பிக்கு செலுத்த வேண்டிய காணிக்கையை முதலில் கேட்கிறது ரதம்!

மருதுபாண்டியர்கள் தம்மை மறந்து கம்பமாயினர்.
பெரிய மருது சற்றுத் திடம்பொண்டு, மலர்ந்த முகத்துடன் கேளும் சிற்பியரே, கேளும்! எதைக் கேட்டாலும் உம்முடைய கலைத் திறனுக்காக இக்கணமே தருவதற்குச் சித்தமாயிருக்கிறேன். நான் ஏற்கெனவே வாக்களித்தபடி! இது காளையார் அறிய நான் தரும் வாக்கு!  என்று கூறி முடித்தார்.
கூட்டமெங்கும் ஒரே அமைதி.

அரசே! என்னுடைய வேண்டுதலை மன்னித்து, பிறகே கேட்பதை அளிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ரதம் பவனி வந்து கோயிலை அடையும் வரை, நான் இந்நாட்டு அரசனாக வேண்டும் இதுவே என் ஆசை. தங்களிடம்கோரும் காணிக்கை!
மக்கள் ஆசாரியின் கோராசையைக் கண்டு ஆகாரமிட்டனர். ஆனால், அரசர் மட்டும் அமைதியாகவே கையமர்தி, ரதத்தை விட்டிறங்கினார். தொடர்ந்து சின்ன மருது இறங்கினார்.

கலையரசன் நீர்! எனவே, ரதப் பவனிவரை, நீரே அரசனாக இருக்கலாம் ஆசாரியாரே! இதோ மணிமுடி, மோதிரம், செங்கோல்! என்று மனநிறைவோடு குப்பமுத்தாசரிக்கு மகுடம் சூட்டினார் பெரிய மருது.
குப்பமுத்தாசாரி அல்ல குப்பமுத்துப் பாண்டியர் வீறு கொண்ட தோரணையில் ரதத்தை நாடிச் சென்றார். சப்பரத்தின் பேரில் தயாராக இருந்த கொட்டாப்புளியை எடுத்தார். அச்சின் நடுப்பாகத்தில் ஏதோ முளையயான்றை ஓங்கியடித்தார். ஒரு புள் தெறித்துக் கீழே விழுந்தது. அடுத்த ரதம் சற்றே அசைந்து கொடுத்தது. அனைவரும் அகன்ற கண்களுடன் குப்பமுத்துப் பாண்டியரை விழுங்கும் மெய்ப்பாட்டில் கவனித்தனர்.

குப்பமுத்து பாண்டியர் காளீசுவரரை வணங்கி, ரதத்தில் ஏறினார். ரதமும் புறப்பட்டது.

சிவகங்கைத் தெருக்களில் பவனி வந்து கொண்டிந்தது. பொழுது சாயும் நேரம் ரதம் கோயிலை நாடித் திரும்பிக் பொண்டிருந்தது.
அப்போது வீதி இறக்ககமாக இருந்ததால் ரதம் சற்றே வேகமாக ஓடிவந்தது கோயிலண்டை நிறுத்தவேண்டி சில முட்டுக்கட்டைகளைச் சக்கரங்களில் பொருத்த முயன்றனர்.

அப்படிப் பொருத்தவந்தற்கு அமைந்த இரண்டு முட்டுக்கட்டைகளில் ஒன்று வழுக்கி மற்றொன்றில் நிற்க நேர்ந்ததால் ரதம் திடுக்கிடும்படி அசைந்து நின்றது. அச்சமயம் பலர் பலவிதமான பீதிக்குரலெழுப்பி அலறினர். அதற்கேற்றார் போல் ரதத்தின் மேலிருந்து பலர் தரையில் விழுந்து உருண்டனர். அப்படி விழுந்தவர்களுள் குப்பமுத்துப் பாண்டியரும் ஒருவர்.
எங்கே? எங்கே? அவர்? இரண்டாவது முட்டிக்கட்டையைப் பொருத்தியதில் இடறிவிட்ட சக்கரத்தில் சிக்கிக் கொண்டு குருதித் திருமுழுக்கில் ஆழ்ந்திருந்தார். கூட்டம் சூழ்ந்து கொண்டது. மீட்க முடியும் அவரை? குற்றுயிரும் குலை உயிருமாக கிடந்த ஈடு இணையற்ற கலைஞர் குப்பமுத்துப் பாண்டியரை மீட்கமுடியும் அவர்களால்?

கூட்டம் ஒரே நெருக்கமாக கூடிவிட்டது. மருது சகோதரர்கள் பதறியடித்துக் கொண்டு ஓடிவந்தனர். அவர்களைக் கண்ட குப்பமுத்துப் பாண்டியர் மோதிரத்தைக் கழற்றிக் கொள்ளுமாறு கண்களால் சைகை காட்டினார்.
முத்திரை மோதிரம் கழற்றப்பட்டது. சிதறியோடியிருந்த மணி முடியையும் செங்கோலையும் கொண்டு வந்து பெரிய மருதுவிடம் நீட்டினான் படைத்த தலைவன் நயினப்ப சேர்வை. பெரிய மருவும்  கண்கலங்க அவற்றைப் பெற்றுக் கொண்டார்.

குப்பமுத்தாசாரியின் முகத்தில் தெய்வங்களை தாண்டவமாடியது. திணறி நெளிந்து மடியிலிருந்த கடிதத்தை எடுத்து அரசரிடம் நீட்டினார். அடுத்த இருகரம் கூப்பி வணங்க முயன்றார். முடியவில்லை. காளீசுவரர் அவரை தம்முடன் ஐக்கியமாக்கிக் கொண்டார்.
பெரிய மருது கண்களைத் துடைத்துக் கொண்டு, கடிதத்தைப் பிரித்தார். அதில் குப்பமுத்தாசாரியின் இறுதிக் குரல் ஒலித்தது.

அரசே! என்னை மன்னியுங்கள். தங்களிடம் காணிக்கை கேட்கும் எண்ணம் எனக்கு கொஞ்சம் கூடக் கிடையாது. தங்கள் நலமே, என் நலம். மக்கள் நலம்!
ரதத்தைத் தொடங்கினேன். தொடங்கியதும் முதலில் விநாயகர் சிலை உடைந்தது. அபசகுணம் கண்டு மனமுடைந்து போனேன். பிறகு நாடி போட்டுப் பார்த்தேன் அது கூறியதோ மிகவும் பயங்கரம்!
இது பற்றித் தங்களிடம் கூற அஞ்சினேன். ஆகவே, ரதத்தை ஓடாமல் செய்து, பிறகு காணிக்கையின் பேரில் ஒரு பொழுது அரசனானேன். ரதத்தில் ஏறினேன். காளையார் திருவுள்ளம் எப்படி என்றுதுVன் பார்ப்போமோ? காத்து விட்டால் அவர் கருணைதான்! ஆனால் நாடி?

அது ஒருபோதும் பொய்க்காது என்பது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை. ஒருவேளை, அப்படி நேருமானால், என்னை மன்னித்து, இறப்பிலே நான் அமைதி பெற என்னை வாழ்த்துங்கள் ‡ குப்பமுத்தாசாரி
    பெரியமருது குழந்தைபோல் கேவிக் கேவியழுதார்.
                மருதுவந்தாலும் தேரோடாது ‡ அவன்
                மச்சினன் வந்தாலும் ஓடாது
                தேருக்குடையவன் குப்பமுத்தாசாரி
                தேர்வடம் தொட்டாலே தேரோடும்!
இந்திய சுதந்திரப் போரில் மாமன்னர் மருதுபாண்டியர்களுக்கென தனி இடமுண்டு. அடைக்கலம் தேடிவந்த நண்பர்களுக்காக (ஊமைத்துரை) ஆங்கிலேயர்களை பகைத்தது மட்டுமில்லாமல், இறுதியில் நாடு மக்களை இழந்தது தங்களையும் விலை கொடுத்தவர்கள்.
சுதந்திர காலத்திலேயே இந்து, முஸ்லீம் சமுதாய மக்களை ஒருங்கிணைத்து ஆங்கிலேயருக்கு எதிராகத் திருப்பி, மதசார்பற்ற மன்னர்களாகத் திகழந்தனர்.

இன்றைய விருதுநகர் மாவட்டம் அழகாபுரி முக்குளத்தில் உடையான் சேர்வை என்ற மொக்கப்பப் பழனியப்பன் சேர்வைக்கும், ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள் தம்பதியினருக்கும் பிறந்தவர் பெரியமருது.

இராமநாதபுரத்தை 1736ல் ஆட்சி செய்த சிவகுமார முத்து விஜயரகுநாத சேதுபதியிடம் தளபதியாக இருந்தார் வெள்ளையன் சேர்வை என்பவர். அவரிடம் சாதாரண சிப்பாய்யாக பணிபுரிந்து வந்தார் மொக்கப் பழனியப்பன் சேர்வை.

தன் தளபதி வெள்ளையன் நினைவாகவும், சிவகங்கை அருகே கீழ வாணியங்குடியில் உள்ள தங்கள் குலதெய்வம் மருதப்ப சுவாமி நினைவாகவும் மூத்த மகனுக்கு வெள்ளை மருது எனப் பெயர் சூட்டினார் மொக்க பழனியப்பன்.

தலைமகன் பிறந்து ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு 1753ல் பிறந்தார் சின்ன மருது. இருவரும் ஒரே தோற்றத்துடன் திகழ்ததால், காலப்போக்கில் அவர்கள் பெரிய மருது, சின்ன மருது என அழைக்கப்படலாயினர். படிப்பை பாதியில் நிறுத்திய மருது சகோதரர்கள் , படைகலன்களை கையாள்வதில் ஆவர்வம் செலுத்தினர்.

சிவகங்கை சீமை ஜனவரி 22இ 1730ல்  உதயமாகி சசிவர்ணதேவர் என்பவர் ஆட்சி செய்து வந்தார். அவருக்கு அடுத்தபடியாக அவரது புதல்வர் முத்துவடுக நாத பெரிய உடையண தேவர் 1750‡1772 வரை ஆட்சி செய்து வந்தார். அவரிடம் பெரிய மருதுவும், சின்ன மருதுவும் அரண்மனை பணியாளர்களாக சேர்ந்தனர். ஒரு சமயம் மன்னர் வேட்டைக்கு சென்ற சமயத்தில் வேங்கை புல ஒன்று அவர்மீது பாய்ந்தது. மன்னருடன் சென்றவர்கள் அலறியடித்து ஓட, துணிவுடன் வேங்கைப் புலியுடன் போராடிக் கொன்று மன்னரைக் காப்பாற்றினர் மருது சகோதரர்கள்.
அகம் மகிழ்ந்த மன்னர் அவர்களை சேனை தளகர்த்தகர்களாக பதவி நியமனம் செய்தார்.

நவாப் ஆட்சியினருக்கு கப்பம் கட் ட மறுத்ததற்காக ஜீன் 23.1772 ஏற்பட்ட போரில் கொல்லலப்பட்டார் முத்துவடுகநாதர். இதை அடுத்து முத்துவடுநாதருடைய மனைவியான ராணி வேலுநாச்சியார் மருது சகோதரர்கள் தளவாய் பரதாணி தாண்டவராயன் பிள்ளையுடன் திண்டுக்கல் மாவட்டம் விருப்பாட்சிக்கு தப்பிச் சென்றார்.

அங்கு எட்டு ஆண்டுகள் தங்கியிருந்து ஆங்கிலேயருக்கு எதிரான சக்திகளை ஒன்றுதிரட்டி 1980ல் மருதுசகோதரர்கள் உதவியுடன் சிவகங்கையை கைப்பற்றினார் வேலுநாச்சியார் ராணி மறைந்த ஓரிரு ஆண்டுகள் சென்றதும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றனர் மருதுசகோதரர்கள்.

அப்போது தென் பகுதியில் பாஞ்சாலக் குறிச்சியை ஆட்சி செய்த கட்டபொம்மனுக்கும், ஆங்கிலேயருக்கும் போர் மூண்டது. அக்டோபர் 16, 1799ல் கட்டபொம்மனை கயத்தாறில் தூக்கில் போட்டனர் ஆங்கிலேயர்.

ஆனால் ஆங்கிலேயரிடமிருந்து தப்பிய கட்டபொம்மனின் தம்பியான ஊமைத்துரை அவரது ஆதரவாளர்களுடன் மே 22இ 1801ல் சிவகங்கைக்கு தப்பி வந்தார். ஊமைத்துரையை அரண்மனை சிறுவயலுக்கு அழைத்து சென்று ஆதரவு கொடுத்தார் சின்னமருது.

இதையறிந்த, ஆங்கிலேய, கம்பெனிபடையினர் சின்னமருவுடன் தொடர்பு கொள்ளக்கூடாது என பிரகடனப்படுத்தினார். அத்துடன் மருது சகோதரர்களுக்கு எதிராக முஸ்லீம் மக்களை தூண்டி விட்டனர்.

புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டைமானும் தன் பங்குக்கு மருது சகோதரர்களைப் பற்றி போட்டுக் கொடுத்தார். திருமயம், நத்தம், மேலூர் பகுதிகளில் ஆங்கிலேயருக்கு எதிரான பகுதிகளை மருது சகோதரர்கள் கைப்பற்றி வருவதாக தூபம் போட்டார்.

இதனால், கிளர்ந்தெழுந்த ஆங்கிலேயர் உள்நாட்டில் பிரிவினை சக்திகளை தூண்டிவிட்டனர். ஆனாலும், மனம் தளராத மன்னர் மருது சகோதரர்கள் அதை முறியடித்தனர்.

சின்ன மருது மே 16. 1801ல் ஸ்ரீரங்கம் கோவிலும், ஆற்காடு நவாப் இடங்களிலும், நும்பு தீ ஹப்பிரதட்சனம் என்று (பிரகடனம்) அறைகூவல் விடுத்தார். ஆங்கிலேயருக்கு எதிராக ஒன்றாகத் திரளும்படி இந்து, முஸ்லீம்களுக்கு வேண்டுகோளும் விடுத்தார்.

மருது சகோதரர்களை இனியும் விட்டுவைத்தால் தாங்காது எனக் கருதிய ஆங்கிலேயர், புதுக்கோட்டை மன்னர் போன்றவர்களின் ஆதரவுடன் போர் தொடுத்தனர்.

அக்டோபர் 1801ல் நடந்த கடும் போருக்குப் பிறகு சிவகங்கை சோழபுரம் அருகே  சின்னமருதுவை சுட்டு வீழ்த்தினர். சிங்கம்புணரி காட்டில் பெரி மருதுவையும், மற்றவர்களையும் கைது செய்தனர். கைதான மருது சகோதரர்களையும், மற்றவர்களையும் திருப்புத்தூரில் அக்டோபர் 24. 1801ல் தூக்கிலிட்டனர்.

நாட்டிற்காகவும், நண்பர்களுக்காகவும் உயிர் துறந்த மருது சகோதரர்கள் வரலாற்றில் நீங்காத இடத்தையும் பிடித்துக் கொண்டனர். மன்னர்கள் மறைந்தாலும் அவர்கள் எழுப்பிய காளையார் கோவில் கோபுரம், அரண்மனைகள் மக்கள் மனங்களில் இன்றும் நிலைத்து நிற்கின்றன.

மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட திருப்புத்தூரில் அவர்களது நினைவாக தமிழக அரசால் 200வது நூற்றாண்டை முன்னிட்டுதான் சுவிடீஸ் மருத்துமனையயில் நினைவு மண்டபம் எழுப்பப்பட்டுள்ளது.

மருது சகோதரர்களை மக்கள் மறக்கவில்லை என்பதற்கு காளையார் கோவில் மற்றும் மணிமண்டபத்திற்கு வருபவர்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


குணக்குன்றேறிய மருதுமன்னர்கள்

அன்புடைய நண்பர்களே, வணக்கம்,

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று ஒரு பழமொழி சொல்வதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இது உணவுக்கு மட்டுமல்ல. உயர்ந்தவர்களை நாம் உற்றுநோக்கும்போது அவர்களின் உன்னதமான செயல்களில் அவர்களை நாம் மதிப்பிட முடியும்.

      குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள்ள
                மிகை நாடி மிக்க கோளல் என்றும்
                நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
                தன்மையால் ஆளப்படும்

என்றும் வள்ளுவம் பேசும். சிவகங்கைச் சீமையை ஆண்ட மாவீரன் மருது பாண்டியர்கள் செய்த கொடைகள் அவர்களின் சீரிய சிந்தைக்கும் தாயாள குணத்தையும் இன்றுவரை பறைசாற்றிக் கொண்டிருக்கிற அவர்களின் வாழ்வில் நிகழ்ந்த இரண்டு சம்பவங்களை இந்த நினைவு நாளில் சிந்தை செய்வோம்.

கானப்போர் எயில் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர் இன்றைய காளையார் கோவில். இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் காளீஸ்வரப் பெருமானுக்குச் சிறப்பான தேர் செய்யவேண்டும் என்ற பெருவிருப்பம் நீண்ட நாளாக மனதில் குடிகொண்டிருந்தது. மருதுசகோதரர்கள் அதற்காக சிறந்த தேர் விற்பன்னரான குப்பமுத்து ஆசாரியை அழைத்து தம் விருப்பத்தை வெளியிட்டு தேர் செய்யப் பணித்தனர். ஆனால் குப்பமுத்து ஆசாரி தயக்கத்துடனேயே அந்தப் பணியைத் துவங்கினார்.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக தேர் பணி நிறைவுற்று வெள்ளோட்டம் காணும் நாள் வந்தது. மருதுசகோதரர்களும், மக்களும் ஆலயத்தின் எதிரே குழுமியிருந்தனர்.பலர் தேரை வடம் பிடித்து இழுத்தபோதும்தேர் சிறிதும் நகரவில்லை. மருதுபாண்டியர்களுக்கு மனிதிலே கலக்கம். குப்பமுத்து ஆசாரியை அழைத்து காரணம் கேட்டார் பெரியமருது தேர் செய்ததற்கு தட்சணை தரவேண்டும்  அல்லவா? அதனால்தான் நகர மறுக்கிறது தேர் என்றார் குப்பமுத்தாசாரி. சிறப்பான தேர் செய்த குப்பமுத்தாசாரியே என்ன வேண்டும் கேளுங்கள் தருகிறேன் என்கிறார் பெரிய மருது. மன்னா இன்று ஒருநாள் நான் மன்னனாக இருக்கவேண்டும். இதுதான் நான் கேட்கும் கூலி என்று குப்பமுத்து ஆசாரி கேட்கிறார். மிகுந்த மகிழ்ச்சியோடு தன் செங்கோலையும் மன்னர் தம் பதவியையும் தருகிறார். மருதுபாண்டியர் (இது கதையல்ல , உண்மை சம்பவம்) தேரின் உச்சியில் மன்னராக வீற்றிருக்க தேர் வெள்ளோட்டம் காண்கிறது. தேர் நிலை குத்தும் சமயம் அந்த விபரீதம் நிகழ்கிறது. ஒரே நேரத்தில் அனைவரும் கடை போட, நிலை தடுமாறி குப்பமுத்துப் பாண்டிய மன்னர் தேர் சக்கரத்தில் விழ, அது அவர்மேல் ஏறிச் செல்கிறது. ஓடோடி வந்த மருதுசகோதரர்கள் ஆசாரியின் உயிரைக் காக்க முனையும்போது குப்பமுத்து ஆசாரி பேசுகிறார். மன்னா உங்கள் இராசிப்படி செய்யும் அதிகாரம் உங்களுக்கு இல்லை அப்படியே செய்தாலும் வெள்ளோடத்தன்று மன்னன் இறப்பான் என்று சோதிடம் சொன்னது. அதற்காகவே இன்று ஒருநாள் மன்னர் பதவியை கூலியாகக் கேட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் என்று குப்பமுத்து ஆசாரி சொல்லிக் கொண்டே இறந்துபோகிறார்.
இதிலே குப்பமுத்து ஆசாரியின் தியாகம் மட்டுமல்ல மக்களுக்கா தன் ஆட்சியை (பதவியை) தந்த மருதுபாண்டியரின் தியாகமும் தெரிகிறது. இன்னொரு சம்பவம்.

நம் திருப்புத்தூரில் தற்போது நான்கு ரோட்டில் உள்ள பெருமாள் கோவிலின் இடது புறத்தில் உள்ள ஒரு வீட்டில் (தற்போது அந்த இடம் லாட்ஜாக உள்ளது) நடந்த உண்மைச்; சம்பவம். இது என் எள்ளுப் பாட்டனாருக்கும் மருதுபாண்டியர்களுகு;கும் நடந்தது என்பதை பெருமையோடு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

திருக்கோஷ்டியூர் தரிசனம் செய்துவிட்டு சாதாரண மனிதரைப் போல சத்திரத்திலே உறங்கிக் கொண்டிருந்த பெரிய மருதுவை ஒருவன் அவசரமாக எழுப்பினான்.

மன்னா தாங்கள் இங்கு இருப்பதை அறிந்த கூலிப்படையினர் நூறுபேர் தங்களைக் கொல்ல வந்து கொண்டிருக்கின்றனர். அதனால் தாங்கள் தயவு செய்து தப்பிச்செல்ல வேண்டும். என்று கூறுகிறார். அப்போது தப்பிச் செல்ல நான் கோழையல்ல என்று கூறி அத்தனைபேருடன் தனி ஒருவராக இரவு 12 மணி வரை ஒரே கையாலே போராடுகிறார் பெரிய மருது (ஒரு கையிலே சிலந்தி புற்படப்டிருந்தது) அத்தனை பேரையும் வீழ்த்திவிட்டு குதிரையில் பயணப்பட, அது ஒரு இல்லத்தின் வாசலிலே சின்றது.

இரவின் விழிப்பும், பசியும், களைப்பும் மிகுதியாய் இருக்க அந்த வீட்டிலுள்ள வயதான பெண்மணியிடம், உணவு இருக்கிறதா என்று கேட்கிறார். (அது என் முப்பாட்டனின் வீடு) எங்கள் இல்லங்களில் எப்போதும் அவசர காலம் கருதி பழைய சாதமும், பழைய குழம்பின் காய்கள், கீரைகளையும் போட்டுக் கொதிக்க வைத்த பழக்கறி (அசைவம் அல்ல) இருக்கும். மேற்சொன்ன பழைய சாதமும், பழங்கறியும் இருக்கிறது என்று கூறி பெரிய மருதுவிற்கு இந்த உணவையும் படுப்பதற்கு பாயும் கொடுத்து உறங்க வைக்கிறார். அவர் பெரிய மருது என்று தெறியாமல், கூடவந்த குதிரைக்காரனுக்கும், குதிரைக்கும் உணவு கொடுக்கிறாள். நன்றாக உறங்கி எழுந்த பெரிய மருது, அந்த பெண்மணியிடம் ஏடும் எழுத்தாணியும் கேட்க, அது கிடைக்காததால் குதிரைக்கானை அழைத்து ஓர் ஓலை, முள்  கொண்டு வரச்சொல்லி சில வரிகளை எழுதிக் கொடுத்து, சிவகங்கை சமஸ்தானத்தில் வந்து இதைக் காண்பிக்கும்படி சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார்.

பின்னர் எம் முப்பாட்டன் வந்து இந்த ஓலையை படித்துச் சொன்னபோதுதான் வந்தது மருதுபாண்டியர் என்று தெரிந்ததாம். பாட்டிக்கு திருப்புத்தூர் கோட்டையாக இருந்தபோது பல ஊர்களில் இருந்து செல்பவர்கள் எங்கள் மூதாதையரின் இல்லத்தின் வழியாகத்தான் செல்லவேண்டும். வழிப்போக்கர்களுக்காக எப்போதும் செம்பிரான்கல் தொட்டி நிறைய பழைய சாதமும், பழகறியும் வைத்திருப்பார்களாம் இவர்களின் இந்தப் பணிக்காக, என் முப்பாட்டனாருக்கு பழஞ்சோற்றுகருநான் என்ற பட்டம் கொடுத்து ஒரு கிராமத்தையே எழுதித் தந்தனர் மருதுபாண்டியர். அந்தக் கிராமம் நம் மாவட்டத்திவ் பழையசோற்றுக்குருனேந்தல் என்ற பெயரோடு விளங்குகிறது. இந்த நாளில் என் பரம்பரையில் நடந்த நிகழ்வும், மருதுபாண்டியரின் கொடையையும் நினைவுகூர்வதில் நெஞ்சம் மகிழ்கிறது.


மத நல்லிணக்க நாயகர்கள்

17ம் நூற்றாண்டில் வாழ்ந்த மருது சகோதரர்கள் அனைத்து மதத்தினரையும் அவணைத்துச் செல்லும் பெருந்தன்மையான மனப்பக்குவத்தைக் கொண்டிருந்தார்கள் என்பதற்கு பல சான்றுகளை எடுத்துக் கூறலாம்.
அவர்களுடைய காலத்தில் இஸ்லாமிய சகோதரர்களுக்கு நரிக்குடியில் தொழுகை நடத்துவதற்காக மசூதி ஒன்றை அவர்களே கட்டிக் கொடுத்திருக்கிறார்கள்.

மேலும் சருகணியில் கிறிஸ்தவ சமுதாய மக்களுக்கு சர்ச் ஒன்றையும் கட்டிக் கொடுத்துள்ளனர் என்பதை வரலாற்றின் மூலம் நாம் அறிய முடிகிறது.
இந்து சமுதாயத்திற்காகவும் அதனுடைய வளர்ச்சிக்கும் பெரும்பங்கு ஆற்றியுள்ளனர். திருப்புத்தூரில் உள்ள திருத்தளிநாதர் ஆலயத்தில் வயிரவர் பெருமானுக்கு மண்டபம் அமைத்தது நமது மருது சகோதரர்களே .அங்கு  மருதுசகோதரர்களின் உருவச்சிலைகள் உள்ளதே அதற்கு சிறந்த சான்றாகும். நமது ஊரில் கான்பாவா மசூதி பராமரிப்பு செலவுக்காக 17 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியதும் மருது சகோதரர்களே!

ஒரு சமயம், பெரிய மருது அவர்களுக்கு உடலில் ஏற்பட்ட ஒரு கட்டியைக் குணப்படுத்துவதற்காக குன்றக்குடியில் ஒரு சித்தர் மருத்துவம் செய்தார். அவருடைய வைத்தியத்தில் பெரியமருதுவிற்கு இருந்த கட்டி குணமாகியது. அந்த மருத்துவர் ஒரு முருக பக்தர். அவருடைய வேண்டுகோளுக்கிணங்க மருதுசகோதரர்கள் இன்றைக்கு நாம் வழிபடும் குன்றக்குடியில் மலைமீது அமைந்துள்ள எழில்மிகு ஆலயத்தை எழுப்பினார்கள்.

அவர்களுடைய ஆட்சிக்காலத்தில் வீரமும், ஆன்மீகமும் மதநல்லிணக்கமும் பொருளாதாரமும் சிறப்புடன் இருந்ததற்கான மேலே கூறிய சான்றுகளே போதுமானது!

அவர்கள் வாழ்ந்த சிவகங்கைச் சீமையில் வாழுகின்ற நாமும் அவர்கள் கட்டிச் சென்ற வழியில் சென்று நாடும் நாமும் செழிக்க பாடுபடவோம்!
மாமன்னர் மருதுபாண்டியர்கள் நினைவிடம் பற்றியது

திருப்புத்தூர் (சிங்காரத்தோப்பு) சுவிடிஸ் மருத்துவமனை வளாகத்திற்குள் மாமன்னர் மருதுபாண்டியர்களை அடக்கம் செய்த இடத்தில் நினைவு மண்டபம் கட்டுவதற்கு 1990ம் வருடன் ஜூன் மாதத்தில் தமிழக முதல்வராக இருந்த மாண்புமிகு டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி ஆட்சி அறிவித்ததற்குப் பின் நடந்தவை

03.05.1990-ல் மாண்புமிகு அமைச்சர் பொம்முடி அவர்கள் திருப்புத்தூர் சுவிடிஸ் மருத்துவமனை வளாகத்திலுள்ள மருதுபாண்டியர்கள் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செய்து அதன்பின் திரு. தென்னரசு அவர்களிடம் நினைவு மண்டபம் கட்டும் வி­யமாக கலந்து பேசியது.

30-10-90ல் மாண்புமிகு அமைச்சர் துரைமுருகன் அவர்கள் திருப்புத்தூர் வந்து எஸ்.எம்.மருத்துவமணை வளாகத்திலுள்ள மருதுபாண்டியர்கள் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தியபின் திரு. தென்னரசு அவர்களிடம் நினைவு மண்டபம் கட்டுவது சம்பந்தமாக பேசியது.

திருப்புத்தூர் மருதுபாண்டியர்கள் நினைவிடத்தில் மாண்புமிகு அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் முன்னாள் அமைச்சர் திரு.பொன். முத்துராமலிங்கம் அவர்களும் அஞ்சலி செலுத்தியபின் நினைவு மண்டபம் அமைப்பது பற்றி ஆலோசனை நடத்தினார்கள்.

இந்த காலகட்டத்தில் தி.மு.க அரசு கலைக்கப்பட்டு 1991ல் அ.இ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தது.

1991ல் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன்  1990 ஜூன் மாதம் (முந்தைய கஞைர் ஆட்சி) திருப்புத்தூர் எஸ்.எம்.மருத்துவமனை வளாகத்திலுள்ள மருதுபாண்டியர்கள் அடக்கம் செய்த நினைவிடத்தில் மருதுபாண்டியர்கள் நினைவு மண்டபம் கட்டுவது, மண்டபத்திற்குள் மருதுபாண்டியர்களின் முழுஉருவச் சிலை வைக்க வேண்டும் என்று  செய்திருந்தமுடிவை அமுல்படுத்தியது.

தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலதிதா அவர்கள் 21‡10‡92 அன்று சிவகங்கையில் இருந்தபடி மருதுபாண்டியர்களின் நினைவு மண்டபம் திறப்பு விழா செய்து அறிவிக்கப்பட்டு நினைவுக் கல்லும் பதிக்கப்பட்டது.

முன்னாள் மந்திரி திரு.கண்ணப்பன் அவர்களால் திருப்புத்தூர் கோட்டையின் மேற்குத் தளத்தில் தூக்குமரம் உருவாக்கி மருதுVபாண்டியர்கள் இருவரையும் 24‡10‡1801ல் கரரன்ல் அக்னியு தூக்கிலிட்ட இடத்தில் தமிழர்களின் முத்தமிட்ட அந்;த மாவீரர்களுக்கு மத நல்லிணக்கம் ‡ ஒருமைப்பாடு மனித நேயத்துடன் வாழ்ந்து காட்டிய அந் த மாவீரர்களுக்கு நினைவுத்தூண் ஏற்படுத்தி அதன் விVவை 193ம் வருட ஆண்டு நினைவு விழாவாக 24‡10‡1994ம் தேதியை விரவான முறையில் ஏற்பாடு செய்திருந்தார். மேலும், திருப்புத்தூர் எஸ்.எம் மருத்துவமனை வளாகத்திலுள்ள மருதுபாண்டியர்களின் இருவர் சிலைக்கும் முதல் மரியாதையாக மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தபின்தான் தூக்கிலிட்ட இடத்தில் உள்ள நினைவுத்தூண் திறப்பு விழா என்ற அழைப்பிதழ்கள், அச்சடித்து சகலருக்கும் அனுப்பி அதன்படி முறையாக மருதுபாண்டியர்களின் நினைவு மண்டபத்திற்கு அப்போதைய மந்திரி திரு எஸ். .எஸ்.கண்ணப்பன் அவர்களும், தேவர் பேரவைச் செயலாளர்  திரு. இராமதிருஷ்ணன் அவர்களும் தென்மாவட்ட அகமுடையார் சங்கத்தலைவர் கோ. ஜெயப்பிரகாஷ் அவர்களும், கூத்தகுடி சண்முகம் அவர்களும் மக்கள் வெள்ளத்தோடு வந்து இருவர் சிலைகளுக்கும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி அதன்பின்தான் நினைவுத்தூண் திறந்து வைத்தார்கள்.

மாமன்னர் மருதுபாண்டியர்களின் 194வரு வருட ஆண்டு நினைவு விழா அஞ்சில 24‡10‡1995ல் நடைபெற்றது. அன்று முழு சூரியகிரகணம் இருந்தும் தமிழக அரசின் மரியாதையை  முதலில் செய்யவேண்டும் என்பதற்காக, சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே.சண்முகம் அவர்கள் வந்து மரியாதை செலுத்தினார்கள்.

சுவீடிஸ் மி­ன் மருத்துவமனை


இது தமிழ் நாட்டிலுள்ள தலைசிறந்த மருத்துவமனைகளுள் ஒன்று. 1909 டாக்டர் கூகல்பர்க் என்ற சுவீடன் நாட்டு டாக்டர் இங்கு கண் ஆஸ்பத்திரி ஏற்படுத்தினார். கண் மருத்துவத்துறையில் அவர் ஒரு நிபுணர். அவரிடம் பயின்ற பலர் தமிழ்நாடெங்கும் கண் மருத்துவத்தில் புகழும் பொருளும் பெற்றிருந்தனர். இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு சென்னையில் ஏற்பட்ட முதல் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த டாக்டர் குருபாதம் இங்கு பணி புரிந்தவரே. கண் மருத்துவம் தவிர பிற துறைகளிலும் இம்மருத்துவமனை விரிந்திருந்தது. 300 படுக்கைகள் இருந்தன. மருத்துவமனை உள்ள இடம் வரலாறு உடையது.  மருது சமாதிக்கு மக்கள் வாரந்தோறும் சென்று வழிபட்டு, விடுதலை உணர்வும் சிவகங்கைச் சீமையின் உரிமை மருது வழியினருக்கே மீண்டும் வழங்கப் பெற வேண்டுமென்ற எண்ணமும் பெற்றனர். இவற்றைத் தடுக்க, மருதுவின் உடமையைச் சட்ட விரோதமாகப் பெற்ற சிவகங்கை அரசர் சமாதியைச் சுற்றிய 17.5 ஏக்கர் நிலத்தை  மருத்துவமனைக்கு வழங்கினார்.

இம்மருத்துவமனையில் ஆபரே­ன் தியேட்டர் இருந்தது. சுவிடீஷ் டாக்டர்களும் பணிபுரிந்தனர். நர்ஸ் தொழிலுக்குப் பயிற்சி தரும் கல்வி நிலையமும் இயங்கிவந்தது. இன்றும் பார்வையற்றோர்களுக்கான தொழிற்பயிற்சி நிலையமும் இயங்கி வருகின்றன. ஏழை எளியவர்களுக்கு இம்மருத்துவமனை செய்த பணி பாராட்டுக்குரியதாக இருந்தது. காந்தியடிகள் 1927ல் வருகை புரிந்து இம்மருத்துவமனையின் தொண்டினைப் போற்றியது குறிப்பிடத்தக்கது. இப்போது இம்மருத்துவமனை இயங்காமல் இருந்து வருகிறது. தமிழ அரசின் பார்வை இம்மருத்துவமனைக்கு உயிரூட்டுமா?


மருது சகோதரர்கள்

நமது மத்திய அரசு NCERT மூலம் வெளியிட்டுள்ள விடுதலைப் போர் குறித்த விரிவான நூலில் மருது சகோதரர்கள், பாளையக்காரர் புரட்சியின தலைவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் மாபெரும் விடுதலைப் போராட்ட வரலாற்றுத் தொகுப்பில் ஆரம்பகால புரட்சியின் தலைவர்களாகத் தமிழகம் முழுவதும் அங்கீகரித்திருப்பது மருது சகோதரர் இருவரை மட்டுமே!

மத்திய அரசின் மாபெரும் விடுதலைப் போராட்ட வரலாற்றுத் தொகுப்பில் ஆரம்பகால புரட்சியின் தலைவர்களாகத் தமிழகம் முழுவதும் அங்கீகரித்திருப்பது மருது சகோதரர் இருவரை மட்டுமே!

மருது சகோதரர்கள்தான் முதன்முதலாக வெள்ளையனுக்கு எதிராகப் போரை ஒருங்கிணைந்து, ஓர் இயக்கமாக்கி வெள்ளையனை வெளியேறச் சொல்லி முறைப்படி பிரகடனம் வெளியிட்டு, வரலாற்றில் சிறப்பம்சம் பெற்றவர்களாக விளங்குகின்றனர்.

மருது சகோதரர்கள் இருவருமே மன்னர்களாக விளங்கினர். இருவருக்கும் தனித்தனி அரண்மனைகள் இருந்திருக்கின்றன.
பெரிய மருதுவுக்கு இராக்காதத்தாள், கருப்பாயி ஆத்தாள், பொன்னாத்தாள், ஆனந்தாயி ஆத்தாள், மீனாட்சி ஆத்தாள் ஆகிய ஐந்து மனைவிகள்.
இராக்காத்தாள் மூலம் பிறந்தவர்கள் குடைக்காதுடையார், முத்துச்சாமி , உடையனன், முள்ளிக் கட்டிச்சாமி.

கருப்பாயி ஆத்தாள் மூலம் கறுத்த தம்பி என்ற கருத்துடையாள் என்ற கறுத்த பாண்டியன், காந்தேரி ஆத்தாள், மருதாத்தாள்.
பொன்னாத்தாளுக்கு பிள்ளை ஏதும் கிடையாது.
ஆனந்தாயி ஆத்தாளுக்கு மகள் பிறந்து இறந்துவிட்டதாகத் தெரிகிறது.
நாயக்கர் சமூகத்தினைச் சேர்ந்த மீனாட்சி ஆத்தாளுக்குத் தங்கம் என்ற மகள் உண்டு.

சின்னமருதுவுக்கு வீராயி ஆத்தாள், மீனாட்சி வைராத்தாள் என்ற மூன்று மனைவிகள்.

வீராயி ஆத்தாள்மூலம் சிவந்த தம்பி, சிவஞானம், முத்துவடுகு என் துரைச்சாமி.
2வது 3வது மனவி பிள்ளைகள் விபரம் தெரியவில்லை.

சிவகங்கைச் சீமையில் கிட்டத்தட்ட எல்லா ஊர்களிலும் சத்திரம் கட்டியிருக்கிறார்கள். திருப்புத்தூரில் கட்டியிருந்த சத்திரம் பிற்காலத்தில் உயர்நிலைப்பள்ளியாக செயல்பட அனுமதிக்கப்பட்டது.

திருப்புத்தூரில் திருத்தளி நாதர் கோயிலுக்குள் இரண்டடடடடாம் திருச்சுற்றின் வடக்கிள் பைரவர் கோயில் மேற்கு நோக்கியுள்ளது. இப்கோயில் முன்மண்டபத்தை அடுத்துள்ள மண்டபம் மருதுசகோதரர்களால் கட்டப்பட்டது. அங்கு கோயில் கொண்டுள்ள சிலையின் மார்பில் மருதுசேர்வை என்ற பெயர் பொறித்த பதக்கம் உள்ளது.
மேலும், சிவகங்கைச் சீமையில் காளையார் கோயில், குன்றக்குடி, சிவகங்கை, வாணியங்குடி, மானாமதுரை, திருப்பாச்சேத்தி, சிங்கம்புணரி, உஞ்சனை, ஏரியூர், நாச்சியாபுரம், கோவிலூர், ஒழுகமங்கலம், மறைநாடு, சிறுவயல் ஆகிய ஊர்களில் உள்ள கோயில்களில் மருதுசகோதரர்கள் காலத்தில் கட்டப்பட்டும், சீரமைக்கப்பட்டவையும் ஆகும்.

திருப்புத்தூர் சமஸ்கான் பள்ளிவாசல் தெரு, சமஸ்கான் சகோப் தர்ஹா, சமஸ்கான் புதுக்கோட்டை ரோடு, கான்பர் ஒலி தர்ஹா, நரிக்குடி ஜமால் ஒலி தர்ஹா, பாசிப்பட்டணம் நயினா முஹம்மது ஒலியுல்லா தர்ஹா, காரா ஊருணிக்கருகே அடங்கியுள்ள இரசூல் சாயபு (இவர் அடங்கியுள்ள இடத்தில் மசூதி) மதுரை கீழவெளிவீதியில் சப்பாணி கோயில், பேருந்து நிறுத்தம் அருகே உள்ள சின்னா நூர்தின் பள்ளிவாசல் ஆகியவற்றிற்கு அவர்களின் மேற்கொண்ட நன்மதிப்பால் இடமும் பொருளுமே தானமாக மருதுசகோதரர்கள் வழங்கி மதச்சார்பின்மையை நிலைநாட்டியுள்ளார்கள்.

மருதுசகோதரர்கள் சிறுகுறிப்பு


  • 1738ல் (சுமாராக ) பெரிய மருதுவும்
  • 1724ல் சின்ன மருதுவும் பிறந்துள்ளனர்.
  • 1768ல் பெரியமருது விறுவயல் ஜமீன்தாரராகவும், உறுதிக்கோட்டை ஜமீன்தாராகவும் ஆனார்கள்.
  • 1772ல் வேலுநாச்சியாருடன் மருதுசகோரர்கள் திண்டுக்கல் விருப்பாட்சி செல்லல்
  • 1779‡80ல் நபாபிடமிருந்து சிவகங்கையை மீட்டு ¼வேலுநாச்சியார் ராணி முடிசூட்டுதல்
  • பிறகு மருதுசகோதரிடம் சிவகங்கை ஆட்சி    மாறுதல்
  • 1783ல் சிவகங்கைமீது கர்னல் ஃபுல்லர்ட்டன் படையயடுப்பு
  • 1788ல் கர்னல் ஸ்டீவர்ட்டுன் கொல்லங்குடி இரணமலக்கோட்டை, காளையார் கோவிலில் போர்.
  • 1789ல் காளையார்கோவில் கோட்டையை கர்னல் மார்ட்டினிடமிருந்து திரும்பக் கைப்பற்றுதல்.
  • 1792ல் தொண்டைமானுடன் 2வரு எல்லைப்போர்.
  • 1794 முத்துராமலிங்க சேதுபதியுடன் ஆனந்தூர், பரமக்குடியில் மருதுசகோதரர் படை போரிடல்.
  • 1789‡94 (சுமாராக) காளையார் கோயில்   திருப்பணியும், 1790‡94ல்(சுமாராக) குன்றக்குடி கோயில் திருப்பணியும் நடைபெற்றது.
  • 1796 வேலுநாச்சியார் மரணம்
  • 1799ல் கட்டபொம்மன் சிவகங்கைக்கு அடைக்கலம் நாடி வருதல்
  • 1801ல் கமுதி கோட்டை சிவகங்கை வசமானது. அதே ஆண்டில்தான் ஆங்கிலேயருக்கு பெரும் தோல்வி தந்த 32 நாடட்கள் நடைபெற்ற காளையார் கோயில் போர்நடந்தது.
  • 1801 ல்தான் கோயில் கோட்டையை மருதுசகோதரர்கள் படைகள் காலி செய்து
  • காடுகளில் மறைதல், கோட்டையை கும்பினிப் படை கைப்பற்றுதல்
  • 1801 அக்டோபர் 24ல் மருதுசகோதரர்கள் மற்றும் போராளிகள் திருப்புத்தூர் கோட்டையில் தூக்கில் போடப்பட்டார்கள்.
  • 1801 அக்டோபர் 27ல் மருதுசகோரர்கள் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment