Tuesday, 16 October 2018

ஜம்புத் தீவு பிரகடனம்

ஜம்புத் தீவு பிரகடனம் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கிழக்கிந்தியக் கம்பெனி வரிவசூலை ஆற்காட்டு நவாப்பிடமிருந்து பெற்று நேரடியாக வரி வசூலை நடத்திய காலத்தில், தமிழக சிற்றரசர்கள் பரவலாக எதிர்ப்பு தெரிவித்து அங்காங்கே ஆங்கிலேயரை எதிர்த்து போர் நடத்தினர்.

மதுரை நாயக்கர்கள் 72 பாளையங்களாக பிரித்து ஆட்சி செய்த பகுதியில் சிவகங்கைப் பாளையத்தின் பாளையக்காரர் முத்துவடுகநாதர் கொல்லப்பட்ட பின் அவரின் தளபதிகள் மருதிருவர் ஆட்சிப் பொறுப்பேற்றனர்.

அக் காலம், ஆங்கிலேயரின் படைத்தளபதி கர்னல் அக்னியூ விட்ட அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து திருச்சியில் சின்ன மருது வெளியிட்ட மறுப்பு அறிப்புதான் ஜம்புத் தீவு பிரகடனம்.

இந்த அறிக்கை, 1801 ஆம் ஆண்டு சூன் மாதம் 12 ஆம் தேதி திருச்சிக் கோட்டையில் ஒட்டப்பட்டுப் பின், சூன் மாதம் 16 ஆம் தேதி ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டது.

ஜம்புத் தீவு பிரகடனம்ஜம்பு தீபகற்பத்திலுள்ள ஜம்புத் தீவில் வாழும் அந்தணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள், முசல்மான்கள் முதலான அனைத்துச் சாதியார்க்கும் தெரியப்படுத்தும் அறிவிப்பு என்னவென்றால், மேன்மை தாங்கிய நவாபு முகமது அலி அவர்கள் முட்டாள்தனமாக ஐரோப்பியர்களுக்கு நம்மிடையே இடங்கொடுத்து விட்டதன் காரணமாக இப்போது அவர் ஒரு விதவைபோல் ஆகிவிட்டார். ஐரோப்பியர்களோ தங்களுடைய வாக்குறுதிகளை மீறி அவருடைய அரசாங்கத்தையே தங்களுடையதாக ஆக்கிக் கொண்டு நாட்டு மக்கள் அனைவரையும் நாய்களாகக் கருதி ஆட்சியதிகாரம் செய்து வருகிறார்கள். உங்களிடையே ஒற்றுமையும் நட்பும் இல்லாத காரணத்தினால், ஐரோப்பியரின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ள இயலாமல், உங்களுக்குள் ஒருவரை யொருவர் பழிதூற்றிக் கொண்டது மட்டுமின்றி, நாட்டையும் அந்நியரி டம் ஒப்படைத்து விட்டீர்கள். இந்த ஈனர்களால் இப்போது ஆளப்படும் பகுதிகளிலெல்லாம், மக்கள் பெரிதும் ஏழ்மையில் உழல்கிறார்கள்; சோற்றுக்குப் பதில் நீராகாரம்தான் உணவு என்று ஆகிவிட்டது. இப்படித் துன்பப்படுவது தெரிந்த போதிலும் எக்காரணங்களினால் இத்துன்பங்கள் ஏற்பட்டன என்பதைப் பகுத்தா ராயவும் புரிந்துகொள்ளவும் இயலாத நிலையில் மக்கள் இருக்கின்றனர். ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதாக இருந்தாலும் மனிதன் கடைசியில் செத்துத்தான் ஆகவேண்டும்… ஆதலால் பாளையங்களில் உள்ள ஒவ்வொருவரும் போர்க்கோலம் பூண்டு ஒன்றுபட வேண்டும். இந்த ஈனர்களின் பெயர்கள் கூட நாட்டில் மிஞ்சியிருக்காமல் செய்யவேண்டும். அப்போதுதான் ஏழைகளும் இல்லாக் கொடுமையால் அல்லல் படுவோரும் வாழ முடியும். அதே நேரத்தில் இந்த ஈனர்களுக்கு தொண்டூழியம் செய்து நாயைப் போல சுகவாழ்வு வாழ விரும்புகிறவன் எவனாவது இருந்தால் அத்தகைய பிறவிகள் ஒழித்துக் கட்டப்பட வேண்டும்… ஆதலால்….. மீசை வைத்துக் கொண்டிருக்கும் நீங்கள் எல்லோரும், அதாவது இராணுவம் அல்லது மற்ற தொழில்களில் ஈடுபட்டிருக்கும் நீங்கள் அனைவரும் மற்றும் ஈனமான அந்நியன் கீழ்த் தொண்டு புரியும் சுபேதார்கள், அவில்தார்கள், நாயக்கர்கள், சிப்பாய்கள் மற்றும் போர்க் கருவிகளைப் பயன்படுத்தும் அனைவரும் உங்களுக்கு வீரமிருந்தால் அதைக் கீழ்க்கண்டவாறு நீங்கள் வெளிப்படுத்த வேண்டும். ஐரோப்பியர்களாகிய இந்த ஈனர்களை எவ்விடத்தில் கண்டாலும் கண்ட இடத்தில் அவர்களை அழித்து விடவேண்டும்… இந்த ஈனர்களுக்கு எவனொருவன் தொண்டூழியம் செய்கிறானோ அவனுக்கு இறந்தபின் மோட்சம் கிடையாது என்பதை நான் உறுதியாகக் கூறுவேன்… இதை ஏற்றுக் கொள்ளாதவன் வைத்திருக்கும் மீசை என்பது என்னுடைய அடி மயிருக்குச் சமமானது… இதனை ஏற்றுக் கொள்ளாதவனுடைய பிள்ளைகள் ஐரோப்பிய ஈனப்பிறவிகளுக்குத் தன்னுடைய மனைவியைக் கூட்டிக் கொடுத்தவன் பெற்ற பிள்ளைகள் ஆவார்கள். எனவே, உடம்பில் ஐரோப்பியனின் ரத்தம் ஓடாத அனைவரும் ஒன்று சேருங்கள்!…. இதைப் படிப்பவர்களோ கேட்பவர்களோ இதில் கூறியிருப்பதைப் பரப்புங்கள்… எவனொருவன் இந்த அறிவிப்பை ஒட்டப்பட்ட சுவரிலிருந்து எடுக்கிறானோ அவன் பஞ்சமா பாதகங்களைச் செய்தவனாகக் கருதப்படுவான்…

இப்படிக்கு,
மருது பாண்டியன்
பேரரசர்களின் ஊழியன், ஐரோப்பிய ஈனர்களின் ஜென்ம விரோதி.

நாராயண யோகீசுவர்

தமிழ்நாடு சிவகங்கை அருகே உள்ள காளையார்கோயில் பாண்டி நாட்டு சிவத்தலங்களுள் ஒன்று. மேலும் 18ம் நூற்றாண்டு ஆங்கிலேய எதிர்ப்புப் புரட்சிகளுக்கு மையமாக அமைந்த ஊர். சிவன் கோவிலில் 3 சிவலிங்கங்கள் உண்டு. பண்டைத் தமிழ் இலக்கியங்களில் இவ்வூர் திருக்கானப்பேர் என அறியப்ப்டும் சிறப்பை தன்னகத்தே கொண்டிருந்தது.

பொருளடக்கம்

  • 1 சித்தபுருஷர் நாராயண யோகீஸ்வரர்
    • 1.1 கருவறைக்குள் மாமிச பண்டங்கள்
    • 1.2 ஓற்றரை நியமித்தார்
    • 1.3 சிவலிங்கத்திற்கு நிணம் கொண்டு பூஜை
  • 2 மண்ணுக்குள் புதைக்கப்பட்டார்
  • 3 மருதிருவர்களுக்கு சாபம்
  • 4 ஜீவ சமாதி

சித்தபுருஷர் நாராயண யோகீஸ்வரர்

இவ்வூரில் 2000 ஆண்டு காலமாக சித்த நிலை அடைந்த ஒரு யோக புருஷர் ஜீவ சமாதியில் இருந்து வந்தார். அவர் பெயர் நாராயண யோகீஸ்வர் என்பர். 1801ம் ஆண்டு ஜூலை வாக்கில் சிவன் கோயில் அர்ச்சகர்கள் ஒரு புதிரான சம்பவத்தைக் கண்டனர். நள்ளீரவு அர்த்த ஜாம பூஜை முடிந்து கதவுகள் மூடப்படும். வெளியிலிருந்து ஒருவரும் கோவிலிக்குள் செல்ல இயலாது.

கருவறைக்குள் மாமிச பண்டங்கள்

மறு நாள் காலையில் கதவுகள் திறந்ததும் சுவர்ண காளீஸ்வரர் கருவறைக்குள் மாமிசத் துண்டுகள் மற்றும் எலும்புத் துண்டுகள் இறைந்து கிடக்கும். பல நாட்கள் இவ்வாறு நடக்கவே அர்ச்சகர்கள் ஆச்சர்யம், அதிர்ச்சி அடைந்து இதனை ஆட்சி அதிகாரத்திலுள்ள மருது இருவரிடம் தெரிவித்து ஆகம விதிகளுக்குப் புறம்பான கருவறைக்குள் மாமிச பண்டங்கள் சிதறுதலைத் தடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

ஓற்றரை நியமித்தார்

மருதிருவர் ஆச்சரியம் அடைந்தவராக சுவர்ண காளீஸ்வரர் கருவறைக்குள் அர்த்த ஜாம காலத்திற்குப் பின்னர் இருந்து நிகழ்வுகளை ஆராய ஓர் ஓற்றரை நியமித்தார்.

சிவலிங்கத்திற்கு நிணம் கொண்டு பூஜை

மருதிருவரின் ஆணைப்படி கருவறைக்குளிருந்த ஓர் ஓற்றர் கதவுகள் அடைக்கப்பட்டபின்னும் கருவறைக்குள் ஒரு சுரங்கப்பாதை வழியே முதியவர் ஒருவர் வந்து சிவலிங்கத்திற்கு நிணம் கொண்டு பூஜை செய்வதை அந்த ஒற்றர் கண்டு அப்பெரியவைக் கைது செய்து மருதிருவர் முன் நிறுத்தினர். மருதிருவர் அப்பெரியவரின் செயல் பற்றி வினவ அப்பெரியவர் தான் ஒரு சித்தபுருஷர் என்றும் கடந்த 2000 ஆண்டு காலமாக நிண பூஜை செய்து வருவதாகவும் இன்னிண பூஜை முறை சித்தர் சாத்திரப்படி சரியானது என்றும் பதிலளித்தார். அப்பெரியவரின் கூற்றில் சந்தேகமடைந்த அர்ச்சகர்கள் அவர் ஒரு சித்தபுருஷர் என்பதை முறைப்படி நிறுவும்படி கோரவே அப்பெரியவர் அர்ச்சகர்களின் சவாலினை ஏற்றார்.

மண்ணுக்குள் புதைக்கப்பட்டார்

அதன்படி அப்பெரியவர் மண்ணுக்குள் ஆழப்புதைக்கப்படுவார். அதன் பின்னர் அப்பெரியவர் வேறு எங்காவது தோன்றவேண்டும். இதன்படி ஓர் ஒற்றர் ராமேஸ்வரம் அனுப்பப்பட்டார். அப்பெரியவர் மண்ணுக்குள் புதைக்கப்பட்டார். அப்பெரியவரின் கூற்றில் மீண்டும் மீண்டும் சந்தேகமடைந்த அர்ச்சகர்கள் மருதிருவரைக் கொண்டு அப்பெரியவர் புதையுண்ட இடத்தினைத் தோண்டச் செய்தனர். அவ்விடம் தோண்டப்பட்டவுடன் அக்குழிக்குள் அப்பெரியவர் இன்னும் தவ நிலையிலிருந்ததையும் ராமேஸ்வரத்திற்கு அனுப்பட்ட ஒற்றனிடமிருந்து அப்பெரியவர் தற்சமயம் ராமேஸ்வரத்தில் தான் உள்ளார் என்ற செய்தி வந்ததையும் கண்டு திகைப்படைந்த அர்ச்சகர்கள் பின் வாங்கினர்.

மருதிருவர்களுக்கு சாபம்

தவ நிலை கலைந்த அப்பெரியவர் சித்தர் நாராயண யோகீஸ்வரர் தன் கூற்றினை நம்பாத அர்ச்சர்களை நம்பிய மருதிருவர்களுக்கு ஒரு சாபம் இட்டார். அதன்படி அன்றிலிருந்து 90 நாட்கள் கழித்து மருதிருவரின் முடிவு அமையும் என்பது யோகீஸ்வரரின் சாபமாகும். யோகீஸ்வரரின் சாபத்திற்குள்ளான மருதிருவர் மிகச்சரியாக 90 கழித்து 24-10-1801 அதிகாலை ஆங்கிலேயர்களால் திருப்புத்தூரில் தூக்கு மேடையில் வீர மரணம் எய்தினர்.

மருதுபாண்டியர் குடும்பத்து நகைகள்

மருதுபாண்டியர் குடும்பத்து நகைகள் 24, அக்டோபர் 1801இல் ஆங்கிலேயரால் மருதுபாண்டியர் தூக்கிலிடப்பட்ட பின்னர் அவரின் மனைவி வீராயி, மருதுபாண்டியரின் மகன் சிவஞானத்தின் மனைவி மீனாம்பாள் இவர்களது 6600 நட்சத்திர பகோடாப் பெறுமானமுள்ள நகைகள் சிவகங்கை ஜமீந்தாரால் பறித்துக்கொள்ளப்பட்டன.

அவ்விரு பெண்களும் 1803ல் நகைகளைக்கோரி நீதி மன்றத்தில் வழக்குத்தொடுத்தனர். நகைகளை அவர்களிடம் வசம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் ஆணையிட்டது. கீழ்க் கோர்ட் தீர்ப்புக்கு எதிராக ஜமீந்தார் திருச்சியிலுள்ள சதர்ன் பிரொவின்சியல் கோர்ட் ஆஃப் அப்பீல் (Southern Provincial Court of Appeal) இல் மேல் முறையீடு செய்தார்.

 3 மார்ச், 1806இல் அப்பீல் கோர்ட் ஸ்மிருதி சந்திரிகா எனும் இந்து நூலை ஆதாரமாகக் கொண்டு, மருதுபாண்டியர் சிவகங்கைச் சீமைக்கு அடிமைகள் ஆகவே அவர்களின் மனைவியரும் அடிமைகள். அடிமைகளுக்குச் சொத்து உரிமை கிடையாது. எனவே ஜமீந்தார் கைப்பற்றிய நகைகளைக் கோரிட உரிமை கிடையாது என ஜமீந்தாருக்கு ஆதரவாகத் தீர்ப்பு உரைத்தது.

உசாத்துணை


    1. 1. Sessional Papers Printed By Order of the House Of Lords 1841 அதில் குறிப்பிட்டுள்ள தீர்ப்பு judgment 363 of Southern Provincial Court of Appeal Trichinopoly dated 17 March 1806
    3.) No 363 Southern Provincial Court of Appeal Trichinopoly dated 17 March 1806.......... as the property appears to have been taken by the Zemindar during the operation of military law in the district........

    சின்ன மருது மகன் துரைச்சாமி

    சின்ன மருது மகன் துரைச்சாமி

    துரைச்சாமி என்பவர் சிவகங்கைச் சீமையில் ஆங்கிலக் கிழக்கந்தியக் கம்பெனியர்க்கு எதிராக 1785 முதல் 1801 வரை போராடிய சின்ன மருதுவின் மகன்.

    பொருளடக்கம்

    • 1 வாழ்க்கைச் சுருக்கம்
    • 2 பினாங்கில் துரைச்சாமி
    • 3 துரைச்சாமியின் இறுதி நாட்கள்

    வாழ்க்கைச் சுருக்கம்

    சின்ன மருது மகன் துரைச்சாமியின் இயற்பெயர் முத்து வடுக நாத துரை. பின்னர் அந்தப் பெயர் துரைச்சாமி என மருவியது என்று சிவகங்கை அம்மானை எனும் நூல் மூலம் அறிய முடிகிறது.

    துரைச்சாமி உட்பட 11 பேரைப் பிடித்துக் கொடுத்தால் 1000 கூலிச் சக்கரங்கள் ( 18ம் நூற்றாண்டு நாணயம்) பரிசாக வழங்கப் படும் என்று ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனித் தளபதி கர்னல் அக்னியூ 1801, அக்டோபர் 1 இல் சிவகங்கை குடிமக்களுக்கு ஒரு பொது அறிவிப்பைப் பிரகடனப் படுத்தினார்.

    மருது சகோதரர்கள் 1801, அக்டோபர் 24 இல் தூக்கிலிடப்பட்டனர். அதன் பின்னர் 15 வயதே ஆன துரைச்சாமி உட்பட 73 பேர் மலேயாவின் பிரின்ஸ் ஆப் வேல்ஸ் தீவிற்கு (இன்றைய பினாங்கு) 1802, பெப்ரவரி 11 இல் நாடு கடத்தப் பட்டனர்.

    பினாங்கில் துரைச்சாமி

    1818 ஆம் ஆண்டு தளபதி வெல்ஸ் (Colonel Welsh) பினாங்கிற்குச் சென்ற போது உடல் நலம் குன்றிய தோற்றத்துடன் காணப் பட்ட துரைச்சாமியைக் காண நேர்ந்தது. துரைச்சாமியின் அந்தத் தோற்றத்தைக் கவனித்த தளபதி வெல்ஸ் தன்னுடைய இதயத்தில் கத்தி பாய்ந்தது போல இருந்தது என குறிப்பிடுகின்றார்

    துரைச்சாமியின் இறுதி நாட்கள்

    1891, மே 18 ஆம் நாள், துரைச்சாமியின் மகன் மருது சேர்வைகாரன் என்பவர் மதுரைக் கலெக்டரிடம் ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்த மனுவில் துரைச்சாமியின் இறுதி நாட்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

    துரைச்சாமி பினாங்கில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப் பட்டார். அவர் ஆங்கில அரசிடம் பாதுகாப்புக் கோரி மதுரையில் தங்கியிருக்க அனுமதி கேட்டு இருந்தார். ஆனால் திடீரென துரைச்சாமி நோய்வாய்ப் பட்டு சிவகங்கைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு அவர் காலமானார் என்று அவருடைய மகன் குறிப்பிடுகின்றார்.

    மருது சகோதரர்களின் நினைவுகள்

    குன்றக்குடியில் அரண்மனை ஒன்ற¨ கட்டியுள்ளனர். மருது பாண்டியர் அவையில் புலவர் குழு ஒன்றை அமைத்து, தமிழ்ச்சங்கம் மூலம் தமிழ் வளர்த்ததாகவும் கூறப்படுகிறது. மயூரி கோவை என்ற கவிதை நூல் அரங்கேற்றப்பட்டுள்ளது. பெரிய மருது பிறந்த நரிக்குடியில் அவர்கள் தாய் பொன்னாத்தாளுக்கு சத்திரம் கட்டப்பட்டுள்ளது. 

    சகோதரர்கள் கலைகளை வளர்த்தனர். நாடகக் கலை வளர்ச்சி பெற்றுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு தேர் வழங்கியுள்ளார்கள். காளையார் கோவில் அருகே உள்ள சருகனியில் தேர் செய்து கொடுத்திருக்கிறார்கள்.

    1799ஆம் ஆண்டு கயத்தாரில் அக்டோபர் 17ஆம் நாள் கட்டபொம்மன் ஆங்கிலேயரால் தூக்கிலப்படுகிறார். அதற்குப் பிறகு, வீரபாண்டிய கட்டபொம்மன் தம்பி ஊமத்துரைக்கு சின்ன மருது அடைக்கலம் தருகிறார். அதற்காகவே 1801 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள், சிவகங்கை மீது தாக்குதல்களை தொடுக்கின்றனர்.

    முதலில் ஆங்கிலேயர்களிடமிருந்து போராடி 3 மாவட்டங்களை மருது சகோதரர்கள் மீட்கின்றனர். மருது பாண்டியர்களுடைய போர் திறமையை அடக்குவதற்காக, ஆங்கிலேயர்கள் இங்கிலாந்திலிருந்து அதிகமான படை பலத்தைப் பெற்று வந்ததாக ஒரு வரலாற்று செய்தி உண்டு. காளையார் கோவிலில் ஆங்கிலேயர்களுடைய படை மருது பாண்டியர்களுடைய படையை சுற்றி வளைத்ததாகவும், ஆனால் மருது சகோதரர்கள் தப்பிவிட்டதாகவும் கூறுகிறார்கள். 
     
    விருப்பாச்சியில் ஆங்கிலேயர் படையுடன் மோதி, சகோதரர்கள் வென்றிருக்கிறார்கள் என்றும் சரித்திரம் இருக்கிறது. போர் வீரர்களாக மட்டுமில்லாமல், நிர்வாகத் திறமையையும் மருது சகோதரர்கள் நிரூபித்திருக்கிறார்கள். 1753லிருந்து 1801 வரை மக்களுக்கான நல்வாழ்வு திட்டங்களை செயல்படுத்தியிருக்கிறார்கள். பல்வேறு ஊரணிகளையும், குளங்¨யும் கட்டியிருக்கிறார்கள். இன்றும் கூட அவை ஆதாரமாக அங்கே இருக்கின்றன.
    ஆனால், இன்றைய நிர்வாகத்தினர், அவற்றை சரியாகப் பராமரிக்காத காரணத்தினாலும், தூர்வாரி ஆழப்படுத்தாத காரணங்களினாலும், அவை நீரை தேக்கி நிறுத்தி, வறட்சிக் காலங்களில் விவசாயிகளுக்கு பயன்படுத்துவதற்கு ஏதுவாக இல்லாமல் ஆகிவிட்டன. மருது சகோதரர்கள் காலங்களில் சிவகங்கை வட்டாரம், பசுமையாக இருந்தது என்று கூறுகிறார்கள். மருது சகோதரர்களும், அவர்களது குடும்ப உறுப்பினர்களும் சோழபுரத்தில் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு, 

    1801 ஆம் ஆண்டில் அக்டோபர் 24ஆம் தேதி தூக்கிலிடப்படுகிறார்கள்.
    அவர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து நடத்திய போர் களங்களை, மனலூர் போர், திருப்புவனம் போர், முத்தனேந்தல் போர், காளையார் கோவில் போர், சிவகங்கை போர், மங்களலம் போர், மானாமதுரை போர், மானாமதுரை போர், திருப்பத்தூர் போர், பார்த்திபனூர் போர், காரான்மலை போர் என்று பட்டியல் போட்டு கூறுகிறார்கள்.

    அக்டோபர் 24ஆம் தேதி தூக்கிலிடப்பட்ட மருது சகோதரர்கள், அவர்களது விருப்பப்படி காளையார் கோவில் கோபுரத்திற்கு எதிரே அடக்கம் செய்யப்பட்டனர்.
    நாட்டிற்காக இன்னுயிர் ஈந்த மன்னர்கள் என்பதாக அவர்கள் வழங்கப்படுகிறார்கள். 2004 ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் நாள் மருது சகோதரர்களின் படம் கொண்ட அஞ்சல் தலை இந்திய அரசால் வெளியிடப்பட்டது.

    1857ஆம் ஆண்டைத்தான் வட இந்தியாவில், சிப்பாய் கலகம் நடந்ததையொட்டி, இந்திய முதல் சுதந்திரப் போர் என்பதாக பதிவு செய்யப்பட்டது.
    ஆனால், அதற்கு 56 ஆண்டுகளுக்கு முன்பே 1801 ஆம் ஆண்டில் ஜூன் மாதம் 10ஆம் தேதி திருச்சியிலுள்ள ஸ்ரீரங்கம் கோவிலில் நின்றுகொண்டு, ஆங்கிலேயர்களுடைய ஆட்சிக்கு எதிராக சுதந்திரப் பிரகடனத்தை, மருது பாண்டியர்கள் அறிவித்தார்கள் என்ற செய்தி முக்கியமான ஒரு நிகழ்வு.

    மேற்கண்ட நினைவு தினம், மருது சகோதரர்களை கதாநாயகர்ளாக்குவதற்கோ, அவர்களை வீரர்களாக்கிவிட்டு, நாம் கோழைகளாக நிற்பதற்கோ எடுத்துக்கொள்வது நியாயமான நினைவேந்தலாக இருக்காது. 
     
    மாறாக, நமது மூதாதையர்கள், தமிழ்நாட்டில் இந்த மண்ணை நேசித்தவர்கள், ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்டு மடிந்த கதைகள், நமக்கு இன்றும் கூட அந்நிய ஏகாதிபத்தியங்களின் ஊடுருவல்களும், ஆதிக்கங்களும் இருக்கின்ற சூழ்நிலையில், மீண்டும் மீண்டும் நினைவேந்தி தொடர்ந்து போராட உணர்வுகளை கூர்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே.
    விவசாயத்தில், நிதி மூலதனத்தில், ராணுவத்தில் நுழைகின்ற அந்நிய கரங்களை, மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்ட உணர்வுகளுடன் கணக்கு பார்க்கத் தயாராக இருக்கிறோமா என்று அந்த நினைவு நாள் நம்மைக் கேட்கிறது.

    திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில்

    வணக்கம்.
    நீண்ட காலப் பழமையும் வரலாறும் கொண்ட ஒரு கோயில் மதுரையில் திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில். சங்ககால தொண்மைச் சிறப்புக்கள் அமைந்த ஒரு கோயில் இது. 
     
    சங்ககாலத்தில் பழையன் என்று சுட்டப்படும்  குறுநில மன்னன் ஒருவன் திருமோகூரை ஆண்டு வந்துள்ள செய்தியை மதுரைக்காஞ்சி வரிகள் இப்படிப் பாடுகின்றன.
     
    பழையன் மோகூர் அவையகம் விளங்க
    நான்மொழிக்கோசர் தோன்றியன்ன
     
    இந்த வரிகளில் குறிப்பிடப்படும் நான்மொழிக்கோசர், குறுந்தொகையில் குறிப்பிடப்படும் நாலூர்க்கோசரே எனக்கருதப்படுகின்றது.  வம்ப மோரியர் தென்னாட்டின் மீது படையெடுத்து வந்த போது பழையன் கோசரின் துணையால், வம்ப மோரியரை வென்றதாக அகநானூறு(261) குறிப்பிடுகின்றது. இச்செய்திகளின் அடிப்படையில் காணும் போது பழையரால் ஆட்சி செய்யப்பட்ட கோகூர், மௌரியர் காலத்துக்கு முந்திய பழமை வாய்ந்த ஓர் ஊர் எனத் தெரிகின்றது.
     
    சங்ககாலம் தொடங்கி மாயோன் வழிவாட்டில் புகழ்பெற்றிருந்த இக்கோயில் ஏறக்குறைய எட்டு, ஒன்பதாம் நூற்றாண்டு வாக்கில் கற்கோயிலாக எழுப்பப்பட்டு வழிபாட்டில் இருந்து வந்துள்ளது. திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம்  செய்யப்பட்டுள்ளார் இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் காளமேகப்பெருமாள் சாமி. மணவாளமாமுனிகளும் காளமேகப்பெருமாளைப் பணிந்து பாடியுள்ளார்.
     
    இக்கோயிலின் முன் வாசலில் மருது மண்டபம் என அழைக்கப்படும் கம்பத்தடி மண்டபத்தைக் காணலாம். இங்கு சின்னமருது, பெரியமருது சிற்பங்கள் தூண்களில் செதுக்கப்பட்டுள்ளன. இப்பகுதியை மருது சகோதரகள் கட்டி விரிவு செய்துள்ளனர். 
     
    இதற்கு அடுத்து வரும் மகாமண்டபம் விஜயநகர கலைப்பாணி கட்டுமானம் கொண்டது. 
    இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் தாயாருக்கு மோகனவல்லி, திருமோகூர் வல்லி நாச்சியார், மேகவல்லி நாச்சியார் என்ற பெயர்கள் வழக்கில் உள்ளன.
     
    இக்கோயிலிலுள்ள சுதர்சனர் சிற்பம் 4 அடி உயரத்தில் அமைந்தது. இங்குள்ள பாண்டியன் சடையவர்மன் சுந்தரபாண்டியனின் கல்வெட்டில், காங்கேயன் என்பவரால் இக்கோயிலில் வைக்கப்பட்டுள்ள திருவாழி ஆழ்வாருக்கு வழங்கப்பட்ட நிலக்கொடை குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும் திருவாழி ஆழ்வாராகச் சக்கரத்தாழ்வாரை அதாவது சுதர்சனரை குறிப்பிடலாம். 
    காளமேகப் புலவரும் காளமேகப் பெருமாள் மீது ஒரு தனிப்பாடல் பாடியிருப்பதாக அறியமுடிகின்றது.
     
    இக்கோயிலின் திருச்சுற்றுச்சுவர் கி.பி.1699-1700 வாக்கில் மதுரை மங்கம்மாள் அரசியின் தளவாயாக விளங்கிய நரசப்பையரின் அனுமதியின் பேரில் வெங்கப்பையர் என்பவரால் கட்டப்பட்டுள்ளமையை இக்கோயிலின் கல்வெட்டிலிருந்து அறிய முடிகின்றது.
    ஏராளமான நீண்ட வாசகங்களில் தமிழ் எழுத்து கல்வெட்டுக்கள் இக்கோயிலில் நிறைந்திருக்கின்றன. ஒரு வரலாற்றுச் சின்னமாக  இந்தத் திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் திகழ்கின்றது.
     
    துணை நூல்:
    மாமதுரை,பொ.இராசேந்திரன், சொ.சாந்தலிங்கம், –  பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் வெளியீடு.

    வளரி

    மருதுபாண்டியரை பார்த்து வெள்ளையன் பயந்த காரணம் இந்த ஆயுதம் தான் #வளரி
     
    நம்மக்களுக்கு எப்படி வெள்ளையரின் துப்பாக்கி புதிதோ அதுபோல வெள்ளையனுக்கு நம் முன்னோர் பயன்படுத்திய வளரி பார்ப்பதற்கு புதிது, வளரியால் பல வெள்ளையனின் தலை உருண்டுள்ளது.

    மருது பாண்டியர் வளரி வீசுவதில் கை தேர்ந்தவர்கள் இந்த ஆயுதம் எதிரியை தாக்கிவிட்டு மீண்டும் எரிந்தவர் கையில் திரும்பி வந்து நிற்கும்.
    மருது பாண்டியர், தனது வளரி வீசும் திறமைய காட்டிய இடம், மதுரை தெப்பக்குளம். அதனாலேயே, மருதுபாண்டியர்களுக்கு மதுரையில் சிலை வைக்க முடிவான போது, மதுரை வண்டியூர் தெப்பக்குளம் தேர்வானது.

    மாமன்னர் மருதுபாண்டியர்களுடன் போரிட்ட ஆங்கிலய தளபதிகள் பட்டியல்

    சுதந்திர போராட்ட தியாகிகள் மாமன்னர் மருதுபாண்டியர்களுடன் போரிட்ட ஆங்கிலய தளபதிகள் பட்டியல்

    1. ஜெனரல் ஸ்மித்
    2.லெப்டினன்ட் கர்னல் பான்சோர்
    3.கர்னல் ஃபுல்லர்ட்டன்
    4.லெ.கர்னல்.ஸ்டூவர்ட்
    5.கர்னல்.மார்ட்டின்ஸ்
    6.காப்டன் வைட்
    7.மேஜர்.க்ரே
    8.மேஜர்.கிரகாம்
    9.லெப்டினன்ட் ரயான்
    10.லெப்டினன்ட் பிளாக்கர்
    11.லெப்டினன்ட் கோல்
    12.லெப்டினன்ட் பார்மின்ட்டர்
    13.லெப்டினன்ட் ஸ்டூவர்ட்
    14.காப்டன்.நாகிள்
    15.காப்டன்.சார்லஸ் காப்ஃப்ரே
    16.காப்டன்.சார்லஸ் திராட்டர்
    17. மேஜர்.ஷெப்பர்டு
    18. லெப்டினன்ட் க்ரீவ்ஸ்
    19.லெப்டினன்ட்.மில்லர்
    20.லெ.கர்னல்.இன்ஸ்
    21.காப்டன்.ஹெர்ட்லான்ட்
    22.லெப்டினன்ட் ஃபிரித்
    23.லெப்டினன்ட் ஃபாரல்
    24.காப்டன் ஜே.டவ்ட்டன்
    25.லெப்டினன்ட் ப்ரூஸ்
    26.மேஜர்.மக்லாயிட்
    27.கொடி அதிகாரி. கூப்பிள்
    28.கர்னல்.டால்ரிம்பிள்
    29.லெ.கர்னல்.அக்னியு
    30. காப்டன்.மாசின்டோஷ்
    31.லெப்டினன்ட் லிட்டில்
    32.லெப்டினன்ட் கிங்
    33.மேஜர்.மக்பெர்சன்
    34.லெப்டினன்ட் ஃபிளெட்ச்சர்
    35.காப்டன்.வெஸ்டன்
    36.காப்டன் பாக்‌ஷா
    37.காப்டன். கோர்டான்
    38.மேஜர்.கிரான்ட்
    39.காப்டன் டாக்டர் தெய்ட்டு
    40.லெப்டினன்ட் காம்ப்பெல்
    41.காப்டன் என்.எம்.ஸ்மித்
    42.லெப்டினன்ட் ஸ்காட்
    43.லெ.கர்னல்.ஸ்ப்ரை
    44.லெப்டினன்ட்.விகோ
    45.லெப்டினன்ட் பெப்பர்
    46.காப்டன் சேம்பர்ஸ்
    47.மேஜர் டவ்ட்டன்
    48.காப்டன் மன்றோ
    49.காப்டன் ஜி.ஏ.ஹக்ஸ்
    50.காப்டன் மெக்காலே
    51.லெப்டினன்ட் போவெல்
    52.லெப்டினன்ட் பால்மெயின்
    53.லெப்டினன்ட் டேவிஸ்
    54.லெப்டினன்ட் ஹாம்ப்ட்டன்
    55.லெப்டினன்ட் லாங்ஃபோர்டு
    56.லெப்டினன்ட் ஸ்மித்
    57.காப்டன் வெசே
    58.காப்டன் லாங்
    59.காப்டன் டாக்டர்.இங்லிஸ்
    60. மேஜர் மெக்காலே
    61.லெ.கர்னல் மக்லாயிட்
    62.கர்னல் ஸ்டூவா்ட்
    63.காப்டன் பிளாக்பர்ன்
    64. லெப்டின்ன்ட் மக்ளீன்
    65. லெப்டினன்ட் ஜென் கொண்டன்


    மேலே கண்ட 65 ஆங்கிலேய இராணுவ அதிகாரிகளும்
    மருது பாண்டியர்களுக்கு எதிராக போரிட்டவர்கள் இருவரின் தலைமையிலான படையை வீழ்த்த இத்தனை தளபதிகள் என்றால்
    அவர்களின் வீரம் பற்றி சிந்தியுங்கள்...!

    மாமன்னர் பெரிய மருதுபாண்டியரின் மனைவிமார்கள் பிள்ளைகள் பட்டியல்

    மாமன்னர் பெரிய மருதுபாண்டியரின் மனைவிமார்கள் பிள்ளைகள் பட்டியல்

    பெரிய பாண்டியருக்கு இராக்காத்தாள், கருப்பாயி ஆத்தாள், பொன்னாத்தாள், ஆனந்தாயி ஆத்தாள், மீனாட்சி ஆத்தாள்* ஆகிய ஐந்து மனைவிகள் இருந்தனர்.

    இவர்கள் அனைவரின் சிலைகளும் நரிக்குடி சத்திரத்தின் பின்புறமுள்ள வளாகத்தில் சிறு சிறு மண்டபங்களில் உள்ளன.

    முதல் மனைவி இராக்காத்தாள் வாரிசுகள் :-

    இவருக்கு குடைக்காதுடையார், முத்துச்சாமி, உடையணன், முள்ளிக்குட்டி சாமி ஆகிய 4 மகன்கள்.

    குடைக்காதுடையார் 1794 ல் பரமக்குடி போரில் கொல்லப்பட்டார்.
    முத்துச்சாமி 1801 விடுதலை போர் தொடங்குவதற்கு முன்னரே இயற்கை மரணம் அடைந்தார்.

    இவரது வாரிசுகள் சிவகங்கைக்கும் மானாமதுரைக்கும் இடையேயுள்ள நெடுங்குளம் புகைவண்டி நிலையம் அருகே உள்ள வேம்பங்குடியில் இன்றும் வசித்து வருகின்றனர்.

    இவ்வூரை சேர்ந்த திரு.ராமச்சந்திரன் சேர்வையிடம் ஒரு செப்பேடும் ‘பெரிய மருது’ என எழுதப்பட்ட 7 1/2 (ஏழரை) அங்குல நீளக்கத்தி ஒன்றும் தந்தத்தால் கைப்பிடி உள்ள எழுத்தாணி ஒன்றும் உள்ளன.

    இராக்காத்தாள் அவர்களின் மூன்றாவது மகன் உடையணனும், நான்காவது மகன் முள்ளிக்குட்டிசாமியும் 1801 ல் நிகழ்ந்த விடுதலைப்போரில் பங்கெடுத்தமைக்காக ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டனர்.

    பெரியபாண்டியரின் இரண்டாவது மனைவி கருப்பாயி ஆத்தாள் வாரிசுகள் :-
    கருப்பாயி ஆத்தாளுக்கு கறுத்த தம்பி என்ற கறுத்த பாண்டியன், காந்தேரி ஆத்தாள், மருதாத்தாள் என்ற 3 குழந்தைகள்.

    கருப்பாயி ஆத்தாள் முத்தூர் அரண்மனையில் வசித்து வந்தார்.
    படம் :- நரிக்குடி சத்திரம் பள்ளி வளாகத்தில் இடியும் நிலையில் உள்ள மாமன்னர் பெரிய மருதுபாண்டியரின் இரண்டாவது மனைவி கருப்பாயி ஆத்தாள் அவர்களின் நினைவாலயம்.

    படம் :- நரிக்குடி சத்திரம் பள்ளி வளாகத்தில் இடியும் நிலையில் உள்ள மாமன்னர் பெரிய மருதுபாண்டியரின் இரண்டாவது மனைவி கருப்பாயி ஆத்தாள் அவர்களின் நினைவாலயம்.

    சிவகங்கை காளையார்கோயில் சாலையில் கொல்லங்குடி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வடக்கே ஒருமைல் தூரம் நடந்து சென்றால் முத்தூரை அடையலாம்.

    முத்துப்போன்ற நெல்மணிகள் விளைவிற்கு பஞ்சமில்லாத ஊர் இதுவென்பதால் இவ்வூருக்கு இப்பெயர் வந்திருக்கலாம் என்று வெள்ளைத்தளபதி வெல்ஷ் தனது இராணுவ நினைவுகள் புத்தகத்தின் VOL 1 பக்கம் 125 ல் எழுதியுள்ளார்.

    முத்தூர் அரண்மனை ஒரு ஓடையின் கரையில் அமைந்துள்ளது.

    அரண்மனை அரை ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டதாக தெரிகிறது.
    பூசை அறைதவிர பிறபகுதிகள் இடிந்து போய்விட்டதால் அந்த இடத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தாய்சேய் நலவிடுதி, சத்துணவுமையம் முதலியன கட்டப்பட்டுள்ளன.

    அக்கட்டட வளாகங்களிடையே அரண்மனையின் பழைய செங்கல் தளவரிசையை காணமுடிகிறது.

    பரமக்குடி போர் முடிந்து திரும்பிய மருதிருவரும் படையினரும் சிறுவயல் சென்றடையும் முன் முத்தூர் அரண்மனையில் ஒரு நாள் தங்கி சென்றதாக வரலாறு உள்ளது.

    அத்தனை பேர் தங்கி செல்லும் அளவுக்கு முத்தூர் அரண்மனை அவ்வளவு பெரியதாய் இருந்திருக்கிறது.

    கருப்பாயி ஆத்தாளின் ஒரே மகனான கறுத்தப்பாண்டியனை 1801 ல் விடுதலைப்போரில் பங்கேற்றதற்காக ஆங்கிலேயர் தூக்கிலேற்றினர்.
    மூன்றாவது மனைவி பொன்னாத்தாளுக்கு பிள்ளைகள் இல்லை.

    பொன்னாத்தாள் அவர்கள் மாமன்னர் மருதுபாண்டியர்கள் பிறந்த நரிக்குடி முக்குலத்தை சேர்ந்த உறவுக்கார பெண் ஆவார்.

    நான்காவது மனைவி ஆனந்தாயி ஆத்தாள் கொல்லங்குடியில் தனக்கென்று கட்டப்பட்ட மாளிகையில் வசித்து வந்தார்.

    இவருக்கு ஒரு மகன் பிறந்து இறந்து போய் விட்டதாகச் சொல்லப்படுகிறது.

    ஐந்தாவது மனைவி மீனாட்சி ஆத்தாள் வாரிசுகள்:-

    மீனாட்சி ஆத்தாளுக்கு கவண்டன் கோட்டை துரை, தங்கம் என்ற பெரியதங்கம் என இரு பிள்ளைகள்.

    மீனாட்சி ஆத்தாள் தனது தந்தையின் அரண்மனை உள்ள கவண்டன் கோட்டையில் தான் தன் மகள் தங்கத்துடன் தங்கி இருந்தார்.

    1794 ல் பரமக்குடி போரில் கவண்டன்கோட்டை துரை அவர்கள் இறந்துவிட்டதாக டாக்டர் ந.சஞ்சீவி அவர்கள் தனது மருதிருவர் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    தன் கணவர் தூக்கிலிடப்பட்டதை அறிந்ததும் மகள் பெரிய தங்கத்துடன் தந்தையின் ஊரைவிட்டு கிளம்பிய மீனாட்சியாத்தாள் நரிக்குடியை அடுத்த வேலங்குடியில் குடியேறிவிட்டார்.

    பெரியதங்கத்திற்கு இருபுதல்வர்களும் ஆதி வீரலட்சுமி என்ற சின்னதங்கமும் பிறந்தனர்.

    ஆதிவீரலட்சுமி இந்த வேலங்குடிக்கு 3 கி.மீ தூரத்தில் உள்ள சீனிக்காரனேந்தலில் குடியேறினார்.

    இவரது வழியினர் வேலங்குடி மற்றும் சீனிக்காரனேந்தலில் இன்றளவும் வசித்து வருகின்றனர்.

    மதுரை மீனாட்சியம்மன் சேர்வைக்காரர் மண்டபம்

    மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் திருக்கல்யாண மண்டபம் எதிரே கிழக்குப் பகுதியில் சேர்வைக்காரர் மண்டபம் மருது பாண்டியர்களால் கட்டப்பட்டது .இதன் தூண்களில் பெரிய மருது உருவச்சிலையும் வடிக்கப்பட்டுள்ளது.மீனாட்சி அம்மன் சுவாமிக்கு 1008 விளக்குகள் கொண்ட திருவாச்சிகளையும் இவர்களே அமைத்து கொடுத்தனர்.

    அகமுடையார் என்பதன் பொருள்

    பொதுவாக அகமுடையார் என்பதன் பொருள் நில உடைமையாளர், நம்பிக்கைக்குரியவர், பரந்த சிந்தனையாளர் என்று பலவாறாக பொருளில் இலக்கியங்கள் ஊடாக அறிந்துகொள்ள முடிகிறது.

    அகம்படியர் என்பதற்கு காவல் என்றே பொருள் உண்டு.தமிழகத்தை பொறுத்தவரையில் முக்குலத்தோர் சமுதாயத்தில் ஒன்றாகவே அகமுடையார் குலம் காணப்படுகிறது. அகமுடையார் குலத்தில் சேர்வை, தேவர், உடையார், பிள்ளை, முதலியார் உள்ளிட்ட பட்டங்களே பெரும்பான்மையான காணமுடிகிறது.

    அகமுடையார்களில் "தேவர்" பட்டம் என்பது தமிழகத்தின் பெரும்பான்மை மாவட்டங்களில் வழங்கப்படுகிறது. குறிப்பாக ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தின் நாகப்பட்டினம் - திருவாரூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வாழும் அகமுடையார்களுக்கு தேவர் பட்டமே வழங்கப்படுகிறது.

    தஞ்சை டெல்டா பகுதிகளில் தேவர் பட்டம் கொண்டுள்ள அகமுடையார் இனத்தினர், ”பதினெட்டு கோட்டை பற்று அகமுடையார்” என்ற குலப்பிரிவை சார்ந்துள்ளனர். மற்றும், ”சித்தர் மரபு அகமுடையார்” மற்றும் ”தஞ்சை ராஜ வம்சத்து அகமுடையார்” போன்றவையும் வேதாரண்யம் - முத்துப்பேட்டை போன்ற தஞ்சை கடலோர பகுதிகளில் வாழும் அகமுடையார் இன மக்கள் கொண்டுள்ளனர்.


    அகமுடையார் குல பிரிவுகள்

    ராஜகுலம் புண்ணியரசு நாடு கோட்டைப்பற்று (பதினெட்டு கோட்டைப்பற்று)இரும்புத்தலை ஐவளிநாடு நாட்டுமங்களம் ராஜபோஜ ராஜவாசல் கலியன் சானி மலைநாடு பதினொரு நாடு துளுவ வேளாளர் அல்லது துளுவன்

    அகமுடையார் குல பட்டங்கள்

    தேவர் சேர்வை பிள்ளை முதலியார் உடையார் தேசிகர் அதிகாரி மணியக்காரர் பல்லவராயர் நாயக்கர் ரெட்டி
    ஏனைய பட்டங்கள்

    வானவர் பொறையர் வில்லவர் உதயர் மலையன் மலையான் வானவன் வானவராயன் வல்லவராயன் பனந்த்தாரன் பொறையான் மலையமான் தலைவன் மனியக்காரான் பூமியன் கோளன் நாகன் பாண்டியன் கொங்கன் அம்பலம் நாட்டான்மை

    தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கோயம்புத்தூர், திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர், திருநெல்வேலி, மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் தேவர் என்ற பட்டப் பெயருடனும்,

    இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் சேர்வை என்ற பட்டத்தோடும்,

    காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம்,கடலூர், சென்னை, பெரம்பலூர், சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் முதலியார், துளுவ வேளாளர், உடையார் என்ற பட்டங்களோடும் அகமுடையார் இனத்தினர் அறியப்படுகின்றனர்.

    மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திர, கேரளா உள்ளிட்ட தென்னிந்தியா முழுவதும் பலவேறு பட்டப்பெயர்களுடன் வசித்து வருகின்றனர்.

    இவைதவிர்த்து, இலங்கை, மலேசியா, பர்மா, சிங்கப்பூர் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பெரும்பாலான அகமுடையார் குலத்தினர் பல தலைமுறைகளாக பூர்வீகமாக வசித்து வருகின்றனர்.

    தமிழகத்தின் அனைத்து பகுதியிகளிலும் அகமுடையார் இனத்தினர் பரந்து விரிந்து வாழ்ந்து வருகின்றனர்.தென் தமிழகத்தில் அகமுடையார்களை முக்குலத்தோர் பிரிவுகளில் ஒன்றாகவும் கருதி வருகின்றனர்.


    வட தமிழகத்தை பொருத்தவரையிலும் அகமுடையார் இனத்தினர் தனித்தே அடையாளப்பட்டு வருகின்றனர். பெரும்பாலும் அகமுடையார் இனத்தினரின் பட்டங்களையும், பட்ட பெயர்களையும் வைத்து பலவாறு தமிழகம் முழுவதும் சிதறிக் காணப்படுகின்றனர்.

    அகமுடையார்களை சேர்வை என்று தென் தமிழகத்திலும், முதலியார், பிள்ளை என்ற பட்டங்களுடன் வட தமிழகத்திலும், தேவர், பிள்ளை, அதிகாரி, உடையார், நாயக்கர், தேசிகர் போன்ற பல பட்ட பெயர்களுடன் மத்தியத் தமிழகத்திலும் காணப்படுகின்றனர்.

    அகமுடைய தேவர்

    தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கோயம்புத்தூர், திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர், திருநெல்வேலி, மதுரை, தேனி போன்ற மாவட்டங்களில் தேவர் என்ற பட்டப் பெயரை தாங்கி அகமுடையார் குலத்தினர் காணப்படுகின்றனர்.

    அகமுடைய சேர்வை

    இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் சேர்வை என்ற பட்ட பெயரை தாங்கி அகமுடையார் குலத்தினர் காணப்படுகின்றனர்.

    அகமுடைய முதலியார், துளுவவேள்ளார், உடையார் மற்றும் பிள்ளை
    காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சென்னை, பெரம்பலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் முதலியார் என்ற பட்ட பெயரை தாங்கி அகமுடையார் குலத்தினர் காணப்படுகின்றனர்.

    சிவகங்கைச் சரித்திரக் கும்மி –

    சிவகங்கைச் சரித்திரக் கும்மி -
    Add caption
     
     
    கும்மியாட்டம் பெண்கள் மட்டும் கலந்து கொண்டு ஆடும் ஆட்டமாகும். ஒற்றைப்படை எண்ணிக்கையில் பெண்கள் கலந்து கொள்வர்.நடுவில் முளைப்பாரி அல்லது வேறு ஏதேனும் சில பொருட்களை நடுவில் வைத்து, பெண்கள் வட்டமாக நின்று கை கொட்டி ஆடும் ஆட்டம் கும்மியாட்டம் எனப்படும். இன்றும் கிராமப்புறங்களில் நடைமுறையில் உள்ளது.

    வெள்ளையரை எதிர்த்து போராடிய மாவீரர்களில், மருது சகோதரர்களின் பெயர் மறக்க முடியாததாகும். 1772ல் ராணி வேலு நாச்சியாருக்கு உதவி புரிந்து, 1780ல் அவரை அரியணை ஏற்றி, மருது சகோதரர்கள் தளபதியாகவும், அமைச்சராகவும் பதவியேற்று சிறப்படைந்தனர்.

    மேலும், 1796ல் ராணி இறக்கும் வரை, மறவர் சீமைக்கும், ஆங்கிலேயருக்கும் ஏற்பட்ட அரசியல் மோதல்களில், மருது சகோதரர்கள் ஆங்கிலேயரை முழுமையாக எதிர்த்து போரிட்டனர்; 1801ல் துாக்கிலிடப்பட்டனர்.

    திருப்பத்துார் முடிவு ஒரு திருப்பத்தை உண்டாக்கியது. மருது பாண்டியர்களை மக்கள் கொண்டாடினர். அதற்கு, கும்மிகளும், அம்மானைகளும் பெரிதும் உதவின. அந்த வகையில் உருவானது தான் சிவகங்கைச் சரித்திரக் கும்மி. இந்த நுால் ஒரு வரலாற்று ஆவணமாக அமைந்துள்ளது.

    இந்நுால், 84 தலைப்புகளில், 4,332 அடிகளுடன் அமைந்துள்ளது. பல்வேறு வரலாற்று நிகழ்வுகள் சுட்டப்பட்டுள்ளன. மருது சகோதரர்களுக்கும், ஆங்கிலப் படைக்கும் நடைபெற்ற போர்,

    ஊமைத்துரைக்கு, மருது இருவரும் அடைக்கலம் கொடுத்த சிறப்பு.போரில் தோற்ற மருது இருவரும் சிறை பிடிக்கப்பட்டு துாக்கிலிடப்படல், கவுரி வல்லவர் சிவகங்கை ஜமீந்தாராக முடிசூட்டப்படுதல் ஆகிய வரலாற்றுச் செய்திகளை இந்த நுால் விரிவாக விளக்குகிறது.

    அரசை ஏற்றுக் கொண்ட கவுரி வல்லவனுக்கு அக்கினீசு துரை, மனு நீதி தவறாமல் அவர் அரசாள வேண்டும் என்றும், 75 ஆயிரம் வராகன் கிஸ்தி செலுத்த வேண்டும் என்றும் அக்கினீசு துரை கூறியதன் மூலம்,

    ஆங்கிலேயர்கள் இந்த மண்ணில் மேலாண்மை செலுத்திய கொடுமையை அறியலாம் (பக்., 332). ஆங்கிலேயருக்கும், மனு நீதிக்கும் என்ன தொடர்பு? இது போன்ற எண்ணற்ற தகவல்களுடன், ஒரு விடுதலை போராட்ட வரலாற்றை கும்மிப்பாடல் வழியாக இந்த நுால் விளக்குகிறது.கும்மிப் பாடல்களும், அதன் விளக்கமும் வாசகர்களை மகிழ்ச்சியூட்டும் வகையில் அமைந்துள்ளன. எல்லாரும் படித்து மகிழ வேண்டிய நுாலாகும்.
    பேராசிரியர் முனைவர் ரா.நாராயணன்

    மருதுபாண்டியர் வரலாறு




    மருதுபாண்டியர்   வரலாறு

    புலவர்தேவரம்பூர் மாணிக்கம்




    விடுதலைக்காக தங்கள் இன்னுயிர்களையே காணிக்கையாக்கிய இந்திய 



    சுதந்திரப் போராட்ட மாவீரர்கள் மருது பாண்டியர்களை நாம் மறக்க இயலாது. 200 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவை விட்டு பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற முறைப்படி பிரகடனம் (ஜூன் 1801) யவியிட்டு, தென்னிந்தியாவில் அனைத்து பிரிடிஷ் எதிர்ப்பு ஆயிதப் போராட்டங்களை தலைமை தாங்கி நடத்தியவர்கள் சிவகங்கைச் சீமையின் மருதுபாண்டியர் சகோதரர்கள். அன்று நம் நாட்டை ஆட்சி செய்த மன்னர்கள் ‡ பாளையங்களின் தலைவர்களிடையே உள்ள ஒற்றுமையின்மையைப் பயன்படுத்தி வெள்ளையர்கள் நயவஞ்சகமாக சூழ்ச்சிகள்மூலம் நம் நாட்டைப் பகுதி, பகுதியாய் ஆக்கிரமிப்பு செய்து நம் மன்னர்களையும் மக்களையும் மிகக் கேவலமாய் நடத்தினர். வாணிபம் செய்து பிழைக்க வந்த இந்த வெள்ளையார்கள் ஆக்கிரமிப்பில், ஆட்சியில் நம் மக்களின் இழிவான, அடிமை வாழ்வைக் கண்டு கொதித்தெழுந்தனர் மருதுபாண்டியர்.
    வெள்ளையர்களை இந்நாட்டை விட்டே வெளியேற்றுவதன்மூலம் நம் மக்கள் சக்தியைத் திரட்ட அந்தக் காலத்திலேயே அமெரிக்க சுதந்திரப் போராட்டத்தினர் வெளியிட்டது போல வரலாற்றுப் புகழ் மிக்க பிரகடனம் வெளியிட்டனர். அதன்மூலம் பிராமணர்கள். இஸ்லாமிய மக்கள், சத்திரியர்கள், ஆதிதிராவிட மக்கள் கிறிஸ்துவர்களை பிரிட்டிஷ் ஏதாகதிப்பதியத்தை எதிர்த்து ஐக்கியமாய்ப் போராட நேர்த்தாஜிவாக். பலபாரைச் சேர்ந்த வர்மா, கன்னத்தின் கிருஷ்ணப்ப நாயக்க, கோயம்புத்தூரைச் சேர்ந்த கான்‡இ‡கான் மற்றும் திண்டுக்கல் போபால் நாயக்கர் போன்ற தீவிர புரட்சியாளர்கள் ஒருங்கிணைந்து தீரமுடன் ஆவேச உணர்ச்சிகளுடன் பிரிட்டிஷ் எதிர்ப்பு ஆயுதப் போராட்டங்களுக்கு தலைமை ஏற்று நடத்தியவர்கள் மருதுபாண்டியர்கள். ஆனால் வெள்ளையார்களின் வெள்ளிக் காசுகளுக்கும், காடு நில குத்தைகளுக்கும்,  கைக்கூலி பரிசுகளுக்கும் ஆசைப்பட்டு நம் நாட்டு மன்னர்கள், மக்கள் துரோகிகள் சிலர் கொடுத்த  சிலர் கொடுத்த துப்புகள், தகவல்கள்மூலம் ஆங்கிலப் படைகளுக்கு  சிலர் கொடுத்த வாய்ப்புகள், தகவல்கள்மூலம் ஆங்கிலப் படைகள் மருதுபாண்டியர்களை கைது செய்தது.

    லெப்டினன்ட் கர்னல் அக்னியுவின் மரண தண்டனை உத்தரவின்பேரில் பெரிய (வெள்ளை) மருது, சின்ன மருது அவர்களிருவரின் ஆண் மக்கள், சந்ததிகள் அனைவரையும் திருப்புத்தூர் கோட்டையில் ஒரே சங்கிலியால் இணைத்து 1801 ம் ஆண்டு அக்டோபர் 4ம் நாள் தூக்கிலிடப்பட்டு வீரமரணம் அடைந்தார்கள். இதன்மூலம் இந்திய சுதந்திரப் போராட்டங்களுக்கு 1801ம் ஆண்டிலேயே வழிவகுத்திட்ட முன்னோடிகள் மருதுபாண்டிய சகோதரர்கள் ஆவர்.

    மருதுபாண்டியர் திருப்புத்தூரில் அடக்கம்:

    மருது சகோதரர்கள் உடல்களை அவர்களின் அடுத்த வாரிசுதாரரான நரிக்குடி பெருமாள் சேர்வை கர்னல் அக்னியூவிடமிருந்து பெற்று, திருப்புத்தூர் சிங்காரத் தோப்பு என்ற இடத்தில் அடக்கம் செய்து அங்கேயே குடும்பத்துடன் தங்கி, அடக்கம் செய்யப்பட்ட இடத்தைப் பாதுகாத்து, பொங்கலிட்டு வழிபட்டு வந்தனர். வழிவழியாய் பரம்பரையாக மருபாண்டியர்கள் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டவிபரங்களை விசாரணை நடத்தி விபரங்களை அறிவிக்குமாறு தமிழ்நாடு அரிசின் தலைமை செயலர் உத்திரவின்படி 1977ல் இராமநாதபுரம் மாவட்டம் கலெக்டர் திருப்புத்தூர் தாசில்தார் அவர்களுடன் இடத்தைப் பார்வையிட்டு விசாரணைகள் செய்து மருதுபாண்டிய சகோதரர்கள் உடல்கள்  திருப்புத்தூரில் அடக்கம் செய்யப்பட்டது.

    இதற்கான அறிக்கை அரசுக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையின்படி தமிழக அரசின் அன்றைய முதல்வர் மு.கருணாநிதி அவர்கள் மருது சகோதரர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சிவகங்கை மன்னர்கள் மருதுபாண்டியர்களுக்கு நினைவு மண்டபம் எழுப்பவும், அந்த மண்டபத்தில் மதுபாண்டியர் உருவச்சிலைகளை அமைத்திடம் 1990 ஜூன் 16ல் அரசாணை பிறப்பித்தார். அதன் பிரகாரம் அதிழக அரசு திருப்புத்தூரில் நினைவு மண்டபம் கட்டி மருதிருவர் சிலைகளையும் நிறுவியது. 24.10.1997ல் அரசு சார்பில் முதன் முறையாக மாலைகள் அணிவிக்கப்பட்டது.

    போர்பயிற்சி பாண்டியர் நாட்டம்

    இன்றைய சிவகங்கை மாவட்டத்தில் அருப்புக்கோட்டை அருகில் உள்ள நரிக்குடி முக்குளம் என்ற கிராமத்தில் வாழ்ந்த மொக்க பழநி என்ற உடையார் சேர்வை தம் மக்களுக்கு முறையே போர்ப் பயிற்சிகளை கற்றுக் கொடுத்து அவர்களை தீரமிக்க வீரர்களாக்கினர். மருதிருவரின் துணிச்சலான செயல்களைப் பாராட்டி முத்து விஜய ரெகுநாத சேதுபதி பாண்டியன் என்ற சிறப்பு பட்டத்தை அவர்களுக்குச் சூட்டினார்.

    தமிழ்ச்சங்கம் அமைத்த மருதுபாண்டியர்

    மருதுபாண்டியர் குறுகிய கால ஆட்சியில் அவர்கள் அரசவையில் 21 தமிழ்ப்புலவர்கள் இருந்ததாகவும், மருதரசரசர்கள் புகழ்பாடும் மயூரகிரிக் கோவை ஆசிரியர் காந்தமுத்துப் புலவர், முத்து வேலுக் கவிராயர் போன்ற பல தமிழ் வித்துவான்கள் இருந்தார்கள் என்பதையும், அவர்களுக்கு மருதரசன் வழங்கிய பல கிராமங்களை நிலக் கொடைகள் போன்ற விபரங்களை வரலாற்று தூண்களில் காணமுடிகிறது.

    ஆன்மீகப் பற்று ஆலயத் திருப்பணிகள்

    பெரிய மருதுபாண்டியர் தெய்வ பக்தி உடையவர். தம் ஆட்சிக்கு உட்பட்ட ஆலயங்களில் மட்டுமல்ல ‡ மதுரை, இராமநாதபுர மாவட்டங்களில் உள்ள பல ஆலயங்களின் திருப்பணிகளையும், சிறப்புறச் செய்து அக்கோயில்களின் நிர்வாக அன்றாட பூஜைகள், திருவிளக்குகள் எரிய எண்ணைக்கான மற்றும் கோயில் பராமரிப்பு செலவுக்கான மேற்படி ஆலயங்களுக்கு ராஜமான்யமாகப் பல கிராமங்களை மருதுபாண்டியர் நலக்கோடையாகத் தாமிர பட்டயங்கள்மூலம் அளித்துள்ளார்கள். குன்றக்குடி, திருப்புத்தூர், காளையார்கோவில், சிவகங்கை, மானாமதுரை, மதுரை, திருமோகூர், திருப்பாசேத்தி, திருப்புல்லாணி, திருக்கோஷ்டியூர் ஆகிய ஊர்களில் உள்ள கோயில்கள் மருதுபாண்டியர் செய்த திருப்பணிகளுக்கு ஓர் எடுத்துக் காட்டு.


    மருதுபாண்டியரின் ஆட்சிகாலத்திலேயே தேசிய ஒருமைப்பாட்டையும் மதச்சார்பின்மையும் கடைபிடித்து செயல்படுத்தினார்.
    பசும்பொன் மாவட்டம் சருகணி புதிய மேரி மாதா சர்ச் மற்றும் இஸ்லாமிய நரிக்குடி பள்ளிவாசல், பெரிய கோட்டை பள்ளிவாசல் பாசிப்பட்டினர் தர்கா, திருப்புத்தூர் காசியா ஒளி தர்க்கா போன்றவற்றை நிறுவியதன்மூலம் இவர்களின் மதச்சார்பின்மை வெளிப்படுகிறது.

    காளையார் கோவில் ரதம்:

    நாம் சொல்வதைக்  குப்பமுத்தாசாரி தட்டிக் கழிப்பார்? நான் அப்படி நினைக்கவில்லை. தம்பி பெரிய மருதுபாண்டியர் தன்னம்பிக்கையுடன் கூறினார்.
    அண்ணாவின் சொல்லைக் கேட்டு அரும்பிய புன்னகையுடன் அமர்ந்திருந்திருந்தார் சின்னமருது பாண்டியர். அவருக்கென்னமோ சிற்பி குப்பமுத்தாசாரி, காளையார் கோவில் ரதத்தை உருவாக்க ஒப்புக் கொள்வார் என்ற நம்பிக்கை எள்ளளவும் இல்லை.

    குப்ப முத்தாசாரி அந்நாளில் கைதேர்ந்த சிற்பி. உண்மை ஊர் அறியும். சிற்பக் கலையின் மாணிக்கமாய் விளங்கிய மரபில் வந்தவர். தந்தையைவிட மிக அற்புதமான கலைஞர். நாடே கூறும். இவையயல்லாம் ஒரு பத்தாண்டுகளுக்கு முன்னே.

    இப்போது? அடங்கி ஒடுங்கி தம்மகத்தே ஆமைபோல் அமைதி தேடிக் கொண்டிருந்தார் அவர். அவருக்குக் கலைவாழ்வு வெறுத்துவிட்டது. தம் தந்தையின் இறப்புக்குப் பின்னர். எனவே, குடிவழியில் தொடர்ந்து வந்த மற்றொரு தொழிலான சோதிடக் கலையைப் பிழைப்பாக மேற்கொள்ளலானார் குப்பமுத்தாசாரி.
    அவர் சிற்பக்கலையில் வெறுப்படைந்ததற்குக் முதல் காரணம் இதுதான். படைத்து வைக்கும் கலைப்  பொருட்கள் அனைத்தையுமே பாவிகள், வெள்ளைப் பரங்கியர்களால் பாழாய் போகின்றன. அப்படி இருக்க ஏன் படைக்க வேண்டும்? எதற்காகப் படைக்க வேண்டும்?
    படைத் தலைவன் நயினப்ப சேர்வை அரண்மனைக்கூடத்துக்குள் நுழைந்தான். கடைசியாகக் குப்ப முத்தாசாரியிடம் அவனைத்தான் தூது அனுப்பி இருந்தனர்.

    பாண்டிய நாட்டுப் பூபதிகளுக்கு என வணக்கும். குப்பமுத்தாசாரியாரை ஒப்புக் கொள்ளச் செய்துவிட்டேன். இதோ அவரையும் அழைத்து வந்திருக்கிறேன் என்றான் சேர்வை.
    அகமும் முகமும் மலர மருதுபாண்டியர்கள் இருவரும் எழுந்து சென்று வரவேற்றனர். இவர்கள் நாட்டுக்குக் காவலர்கள். அந்நாட்டை நாகரிகம் பெறச் செய்து வாழவைக்கும் காலையின் காவலாயிற்றே குப்பமுத்தாசாரி
    ஆசாரியவர்களே! காளையார் கோவிலின் கோபுரத்தைக் கட்டி முடித்த மருதுவின் புகழ் ஒரு புகழல்ல இதோ மருதமரத்தால் காளீநுவரருக்குப் பெரிய ரதம் உருவாக்கப் போகும் தங்களுடைய கபழைத்தான் பெரும்புகழ் என்பேன்! என்னால், என்னுடைய ஆயுள் மிகச் சொற்பம் தாங்கள் படைக்கும் கலையின் ஆயுள் ஆயிரமாயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கும். எனவே, பாறைசாச்சியபடி பல சிற்பிகள் வந்திருக்கின்றனர். மருதமரங்களும் ஏராளமாகக் குவிந்துவிட்டன. இனி தாங்கள் தலைமை தாங்கி உருவாக்க வேண்டியதுதான். என வேண்டுகோளை மறுக்காமல் ஒப்புக் கொண்டதற்கு மகிழ்ச்சி.

    நன்றி மன்னவா ஆனால் என்று தயங்கினார் குப்பமுத்தாசராரி

    சின்ன மருது முன்வந்து செற்றியைச் சுளித்தார். சொல்லுங்கள் சிற்பியாரே!  மேலும் மேலும் சிந்தனை ஒருவாறு முடிவைக் கண்டது. எப்படியும் ரதத்தை உருவாக்கியே தீரவேண்டும் கொடுத்த வாக்கை இதுவரை அவரது மரபினர் மீறியதே கிடையாது. மேலும் நாடி சொன்ன செய்தியை அரசரிடம் கூறுவதும் தகாத ஒன்று. அப்படிக் கூறினாலும் நம்புவோர் போக நம்பாதவர்கள். செயல்பட ஒப்புக் கொள்ளாமைக்காகச் செப்படி வித்தை செய்திறான் இந்த சிற்ப ஆசாரி என்று ஊரறிய ஓலமிடுவார்கள். ஆகவே, ரதத்தை உருவாக்கியே தீரவேண்டும்.


                   தலை வாழட்டும்!

    காளையார் கோவில் ரதம் மிகமிக அற்புதமான முறையில் உருவானது. மருதமரத்தின் மஞ்சள் நிறம். தங்கத்தால் ஆக்கப்பட்ட ரதமோ என வியக்கத்தக்க அளவுக்கு விளங்கியது. சிவகங்கை சீமை மக்கள் ஒருமுகமாகக் குப்ப முத்தாசாரியின் திறமைக்குப் புகழ் மாலை சூட்டினார்.
    சீமையின் சீமான்களான மருதுபாண்டியர்கள் ரதத்தைப் பார்வையிட்டனர். அவர்களுடைய மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. காளீசுவரர்தான் பாக்கியம் செய்தாரா, அன்றிக் காளீசுவரர் அருளால் குப்பமுத்தாசாரிதான் பாக்கியம் பெறப்போகிறாரா? என்று மருது சகோதரர்கள் மனத்துள் வியந்து பாராட்டிக் கொண்டனர்.
    வெள்ளோட்டத்திற்கு நாளும் குறிப்பிட்டாகிவிட்டது.
    குறிப்பிட்ட நாளும் நெருங்கியது. குணதிசையில் கதிர்ச் செல்வனும் கனகனக்க எழுந்தான். மக்கள் கூட்டம் காளையார் கோயிலை நாடிக் கடல்போலத் திரண்டது.
    மருதுபாண்டியர்களும் அவர்களுடைய பரிவாரங்களும் அரச தோரணையில் மெய்சிலிர்க்க வைத்தது.

    காளீசுவரர் கம்பீரமாக ரதத்தில் அமர்ந்தார். அடுத்து மருதுசகோததர்கள் ரதத்தில் ஏறிநின்றனர். பூசனைகள் முடிந்தன.
    சிற்பியாரே! ரதத்தைச் செலுத்தலாமல்லவா?
    பெரிய மருதுவின் மலர்ந்த ரதத்தை இழுத்தது. அப்போது பெருத்த எழுச்சிக் குரல் கிளம்பி வானை அதிரச் செய்தது. அந்தக் குரலில், மருதுய்யா காளீசுவரா என்ற புகழ்ச்சொற்கள் மிதந்தன.
    பலம் கொண்ட மட்டும் ரதத்தை இழுத்துப்பார்த்த மக்களுக்கு வியப்போ பெரிதும் மேலிட்டது. எவ்வளவு பலம் கொண்டு இழுத்தாலும் ரதம் ஓர் அங்குலம்கூட அசைந்தபாடில்லை, அதற்கு காரணம்?
    ரதம் இப்படி நகராமல் அடம் செய்வதைக் கண்ட பெரிய மருது ஆசாரியை வியந்த கண்களுடன் நோக்கிக் காரணம் கேட்டார். ஆசாரியும் அந்தச் சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியவர் போல கூறினார்.
    அரசே! சிற்பிக்கு செலுத்த வேண்டிய காணிக்கையை முதலில் கேட்கிறது ரதம்!

    மருதுபாண்டியர்கள் தம்மை மறந்து கம்பமாயினர்.
    பெரிய மருது சற்றுத் திடம்பொண்டு, மலர்ந்த முகத்துடன் கேளும் சிற்பியரே, கேளும்! எதைக் கேட்டாலும் உம்முடைய கலைத் திறனுக்காக இக்கணமே தருவதற்குச் சித்தமாயிருக்கிறேன். நான் ஏற்கெனவே வாக்களித்தபடி! இது காளையார் அறிய நான் தரும் வாக்கு!  என்று கூறி முடித்தார்.
    கூட்டமெங்கும் ஒரே அமைதி.

    அரசே! என்னுடைய வேண்டுதலை மன்னித்து, பிறகே கேட்பதை அளிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ரதம் பவனி வந்து கோயிலை அடையும் வரை, நான் இந்நாட்டு அரசனாக வேண்டும் இதுவே என் ஆசை. தங்களிடம்கோரும் காணிக்கை!
    மக்கள் ஆசாரியின் கோராசையைக் கண்டு ஆகாரமிட்டனர். ஆனால், அரசர் மட்டும் அமைதியாகவே கையமர்தி, ரதத்தை விட்டிறங்கினார். தொடர்ந்து சின்ன மருது இறங்கினார்.

    கலையரசன் நீர்! எனவே, ரதப் பவனிவரை, நீரே அரசனாக இருக்கலாம் ஆசாரியாரே! இதோ மணிமுடி, மோதிரம், செங்கோல்! என்று மனநிறைவோடு குப்பமுத்தாசரிக்கு மகுடம் சூட்டினார் பெரிய மருது.
    குப்பமுத்தாசாரி அல்ல குப்பமுத்துப் பாண்டியர் வீறு கொண்ட தோரணையில் ரதத்தை நாடிச் சென்றார். சப்பரத்தின் பேரில் தயாராக இருந்த கொட்டாப்புளியை எடுத்தார். அச்சின் நடுப்பாகத்தில் ஏதோ முளையயான்றை ஓங்கியடித்தார். ஒரு புள் தெறித்துக் கீழே விழுந்தது. அடுத்த ரதம் சற்றே அசைந்து கொடுத்தது. அனைவரும் அகன்ற கண்களுடன் குப்பமுத்துப் பாண்டியரை விழுங்கும் மெய்ப்பாட்டில் கவனித்தனர்.

    குப்பமுத்து பாண்டியர் காளீசுவரரை வணங்கி, ரதத்தில் ஏறினார். ரதமும் புறப்பட்டது.

    சிவகங்கைத் தெருக்களில் பவனி வந்து கொண்டிந்தது. பொழுது சாயும் நேரம் ரதம் கோயிலை நாடித் திரும்பிக் பொண்டிருந்தது.
    அப்போது வீதி இறக்ககமாக இருந்ததால் ரதம் சற்றே வேகமாக ஓடிவந்தது கோயிலண்டை நிறுத்தவேண்டி சில முட்டுக்கட்டைகளைச் சக்கரங்களில் பொருத்த முயன்றனர்.

    அப்படிப் பொருத்தவந்தற்கு அமைந்த இரண்டு முட்டுக்கட்டைகளில் ஒன்று வழுக்கி மற்றொன்றில் நிற்க நேர்ந்ததால் ரதம் திடுக்கிடும்படி அசைந்து நின்றது. அச்சமயம் பலர் பலவிதமான பீதிக்குரலெழுப்பி அலறினர். அதற்கேற்றார் போல் ரதத்தின் மேலிருந்து பலர் தரையில் விழுந்து உருண்டனர். அப்படி விழுந்தவர்களுள் குப்பமுத்துப் பாண்டியரும் ஒருவர்.
    எங்கே? எங்கே? அவர்? இரண்டாவது முட்டிக்கட்டையைப் பொருத்தியதில் இடறிவிட்ட சக்கரத்தில் சிக்கிக் கொண்டு குருதித் திருமுழுக்கில் ஆழ்ந்திருந்தார். கூட்டம் சூழ்ந்து கொண்டது. மீட்க முடியும் அவரை? குற்றுயிரும் குலை உயிருமாக கிடந்த ஈடு இணையற்ற கலைஞர் குப்பமுத்துப் பாண்டியரை மீட்கமுடியும் அவர்களால்?

    கூட்டம் ஒரே நெருக்கமாக கூடிவிட்டது. மருது சகோதரர்கள் பதறியடித்துக் கொண்டு ஓடிவந்தனர். அவர்களைக் கண்ட குப்பமுத்துப் பாண்டியர் மோதிரத்தைக் கழற்றிக் கொள்ளுமாறு கண்களால் சைகை காட்டினார்.
    முத்திரை மோதிரம் கழற்றப்பட்டது. சிதறியோடியிருந்த மணி முடியையும் செங்கோலையும் கொண்டு வந்து பெரிய மருதுவிடம் நீட்டினான் படைத்த தலைவன் நயினப்ப சேர்வை. பெரிய மருவும்  கண்கலங்க அவற்றைப் பெற்றுக் கொண்டார்.

    குப்பமுத்தாசாரியின் முகத்தில் தெய்வங்களை தாண்டவமாடியது. திணறி நெளிந்து மடியிலிருந்த கடிதத்தை எடுத்து அரசரிடம் நீட்டினார். அடுத்த இருகரம் கூப்பி வணங்க முயன்றார். முடியவில்லை. காளீசுவரர் அவரை தம்முடன் ஐக்கியமாக்கிக் கொண்டார்.
    பெரிய மருது கண்களைத் துடைத்துக் கொண்டு, கடிதத்தைப் பிரித்தார். அதில் குப்பமுத்தாசாரியின் இறுதிக் குரல் ஒலித்தது.

    அரசே! என்னை மன்னியுங்கள். தங்களிடம் காணிக்கை கேட்கும் எண்ணம் எனக்கு கொஞ்சம் கூடக் கிடையாது. தங்கள் நலமே, என் நலம். மக்கள் நலம்!
    ரதத்தைத் தொடங்கினேன். தொடங்கியதும் முதலில் விநாயகர் சிலை உடைந்தது. அபசகுணம் கண்டு மனமுடைந்து போனேன். பிறகு நாடி போட்டுப் பார்த்தேன் அது கூறியதோ மிகவும் பயங்கரம்!
    இது பற்றித் தங்களிடம் கூற அஞ்சினேன். ஆகவே, ரதத்தை ஓடாமல் செய்து, பிறகு காணிக்கையின் பேரில் ஒரு பொழுது அரசனானேன். ரதத்தில் ஏறினேன். காளையார் திருவுள்ளம் எப்படி என்றுதுVன் பார்ப்போமோ? காத்து விட்டால் அவர் கருணைதான்! ஆனால் நாடி?

    அது ஒருபோதும் பொய்க்காது என்பது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை. ஒருவேளை, அப்படி நேருமானால், என்னை மன்னித்து, இறப்பிலே நான் அமைதி பெற என்னை வாழ்த்துங்கள் ‡ குப்பமுத்தாசாரி
        பெரியமருது குழந்தைபோல் கேவிக் கேவியழுதார்.
                    மருதுவந்தாலும் தேரோடாது ‡ அவன்
                    மச்சினன் வந்தாலும் ஓடாது
                    தேருக்குடையவன் குப்பமுத்தாசாரி
                    தேர்வடம் தொட்டாலே தேரோடும்!
    இந்திய சுதந்திரப் போரில் மாமன்னர் மருதுபாண்டியர்களுக்கென தனி இடமுண்டு. அடைக்கலம் தேடிவந்த நண்பர்களுக்காக (ஊமைத்துரை) ஆங்கிலேயர்களை பகைத்தது மட்டுமில்லாமல், இறுதியில் நாடு மக்களை இழந்தது தங்களையும் விலை கொடுத்தவர்கள்.
    சுதந்திர காலத்திலேயே இந்து, முஸ்லீம் சமுதாய மக்களை ஒருங்கிணைத்து ஆங்கிலேயருக்கு எதிராகத் திருப்பி, மதசார்பற்ற மன்னர்களாகத் திகழந்தனர்.

    இன்றைய விருதுநகர் மாவட்டம் அழகாபுரி முக்குளத்தில் உடையான் சேர்வை என்ற மொக்கப்பப் பழனியப்பன் சேர்வைக்கும், ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள் தம்பதியினருக்கும் பிறந்தவர் பெரியமருது.

    இராமநாதபுரத்தை 1736ல் ஆட்சி செய்த சிவகுமார முத்து விஜயரகுநாத சேதுபதியிடம் தளபதியாக இருந்தார் வெள்ளையன் சேர்வை என்பவர். அவரிடம் சாதாரண சிப்பாய்யாக பணிபுரிந்து வந்தார் மொக்கப் பழனியப்பன் சேர்வை.

    தன் தளபதி வெள்ளையன் நினைவாகவும், சிவகங்கை அருகே கீழ வாணியங்குடியில் உள்ள தங்கள் குலதெய்வம் மருதப்ப சுவாமி நினைவாகவும் மூத்த மகனுக்கு வெள்ளை மருது எனப் பெயர் சூட்டினார் மொக்க பழனியப்பன்.

    தலைமகன் பிறந்து ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு 1753ல் பிறந்தார் சின்ன மருது. இருவரும் ஒரே தோற்றத்துடன் திகழ்ததால், காலப்போக்கில் அவர்கள் பெரிய மருது, சின்ன மருது என அழைக்கப்படலாயினர். படிப்பை பாதியில் நிறுத்திய மருது சகோதரர்கள் , படைகலன்களை கையாள்வதில் ஆவர்வம் செலுத்தினர்.

    சிவகங்கை சீமை ஜனவரி 22இ 1730ல்  உதயமாகி சசிவர்ணதேவர் என்பவர் ஆட்சி செய்து வந்தார். அவருக்கு அடுத்தபடியாக அவரது புதல்வர் முத்துவடுக நாத பெரிய உடையண தேவர் 1750‡1772 வரை ஆட்சி செய்து வந்தார். அவரிடம் பெரிய மருதுவும், சின்ன மருதுவும் அரண்மனை பணியாளர்களாக சேர்ந்தனர். ஒரு சமயம் மன்னர் வேட்டைக்கு சென்ற சமயத்தில் வேங்கை புல ஒன்று அவர்மீது பாய்ந்தது. மன்னருடன் சென்றவர்கள் அலறியடித்து ஓட, துணிவுடன் வேங்கைப் புலியுடன் போராடிக் கொன்று மன்னரைக் காப்பாற்றினர் மருது சகோதரர்கள்.
    அகம் மகிழ்ந்த மன்னர் அவர்களை சேனை தளகர்த்தகர்களாக பதவி நியமனம் செய்தார்.

    நவாப் ஆட்சியினருக்கு கப்பம் கட் ட மறுத்ததற்காக ஜீன் 23.1772 ஏற்பட்ட போரில் கொல்லலப்பட்டார் முத்துவடுகநாதர். இதை அடுத்து முத்துவடுநாதருடைய மனைவியான ராணி வேலுநாச்சியார் மருது சகோதரர்கள் தளவாய் பரதாணி தாண்டவராயன் பிள்ளையுடன் திண்டுக்கல் மாவட்டம் விருப்பாட்சிக்கு தப்பிச் சென்றார்.

    அங்கு எட்டு ஆண்டுகள் தங்கியிருந்து ஆங்கிலேயருக்கு எதிரான சக்திகளை ஒன்றுதிரட்டி 1980ல் மருதுசகோதரர்கள் உதவியுடன் சிவகங்கையை கைப்பற்றினார் வேலுநாச்சியார் ராணி மறைந்த ஓரிரு ஆண்டுகள் சென்றதும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றனர் மருதுசகோதரர்கள்.

    அப்போது தென் பகுதியில் பாஞ்சாலக் குறிச்சியை ஆட்சி செய்த கட்டபொம்மனுக்கும், ஆங்கிலேயருக்கும் போர் மூண்டது. அக்டோபர் 16, 1799ல் கட்டபொம்மனை கயத்தாறில் தூக்கில் போட்டனர் ஆங்கிலேயர்.

    ஆனால் ஆங்கிலேயரிடமிருந்து தப்பிய கட்டபொம்மனின் தம்பியான ஊமைத்துரை அவரது ஆதரவாளர்களுடன் மே 22இ 1801ல் சிவகங்கைக்கு தப்பி வந்தார். ஊமைத்துரையை அரண்மனை சிறுவயலுக்கு அழைத்து சென்று ஆதரவு கொடுத்தார் சின்னமருது.

    இதையறிந்த, ஆங்கிலேய, கம்பெனிபடையினர் சின்னமருவுடன் தொடர்பு கொள்ளக்கூடாது என பிரகடனப்படுத்தினார். அத்துடன் மருது சகோதரர்களுக்கு எதிராக முஸ்லீம் மக்களை தூண்டி விட்டனர்.

    புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டைமானும் தன் பங்குக்கு மருது சகோதரர்களைப் பற்றி போட்டுக் கொடுத்தார். திருமயம், நத்தம், மேலூர் பகுதிகளில் ஆங்கிலேயருக்கு எதிரான பகுதிகளை மருது சகோதரர்கள் கைப்பற்றி வருவதாக தூபம் போட்டார்.

    இதனால், கிளர்ந்தெழுந்த ஆங்கிலேயர் உள்நாட்டில் பிரிவினை சக்திகளை தூண்டிவிட்டனர். ஆனாலும், மனம் தளராத மன்னர் மருது சகோதரர்கள் அதை முறியடித்தனர்.

    சின்ன மருது மே 16. 1801ல் ஸ்ரீரங்கம் கோவிலும், ஆற்காடு நவாப் இடங்களிலும், நும்பு தீ ஹப்பிரதட்சனம் என்று (பிரகடனம்) அறைகூவல் விடுத்தார். ஆங்கிலேயருக்கு எதிராக ஒன்றாகத் திரளும்படி இந்து, முஸ்லீம்களுக்கு வேண்டுகோளும் விடுத்தார்.

    மருது சகோதரர்களை இனியும் விட்டுவைத்தால் தாங்காது எனக் கருதிய ஆங்கிலேயர், புதுக்கோட்டை மன்னர் போன்றவர்களின் ஆதரவுடன் போர் தொடுத்தனர்.

    அக்டோபர் 1801ல் நடந்த கடும் போருக்குப் பிறகு சிவகங்கை சோழபுரம் அருகே  சின்னமருதுவை சுட்டு வீழ்த்தினர். சிங்கம்புணரி காட்டில் பெரி மருதுவையும், மற்றவர்களையும் கைது செய்தனர். கைதான மருது சகோதரர்களையும், மற்றவர்களையும் திருப்புத்தூரில் அக்டோபர் 24. 1801ல் தூக்கிலிட்டனர்.

    நாட்டிற்காகவும், நண்பர்களுக்காகவும் உயிர் துறந்த மருது சகோதரர்கள் வரலாற்றில் நீங்காத இடத்தையும் பிடித்துக் கொண்டனர். மன்னர்கள் மறைந்தாலும் அவர்கள் எழுப்பிய காளையார் கோவில் கோபுரம், அரண்மனைகள் மக்கள் மனங்களில் இன்றும் நிலைத்து நிற்கின்றன.

    மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட திருப்புத்தூரில் அவர்களது நினைவாக தமிழக அரசால் 200வது நூற்றாண்டை முன்னிட்டுதான் சுவிடீஸ் மருத்துமனையயில் நினைவு மண்டபம் எழுப்பப்பட்டுள்ளது.

    மருது சகோதரர்களை மக்கள் மறக்கவில்லை என்பதற்கு காளையார் கோவில் மற்றும் மணிமண்டபத்திற்கு வருபவர்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


    குணக்குன்றேறிய மருதுமன்னர்கள்

    அன்புடைய நண்பர்களே, வணக்கம்,

    ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று ஒரு பழமொழி சொல்வதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இது உணவுக்கு மட்டுமல்ல. உயர்ந்தவர்களை நாம் உற்றுநோக்கும்போது அவர்களின் உன்னதமான செயல்களில் அவர்களை நாம் மதிப்பிட முடியும்.

          குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள்ள
                    மிகை நாடி மிக்க கோளல் என்றும்
                    நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
                    தன்மையால் ஆளப்படும்

    என்றும் வள்ளுவம் பேசும். சிவகங்கைச் சீமையை ஆண்ட மாவீரன் மருது பாண்டியர்கள் செய்த கொடைகள் அவர்களின் சீரிய சிந்தைக்கும் தாயாள குணத்தையும் இன்றுவரை பறைசாற்றிக் கொண்டிருக்கிற அவர்களின் வாழ்வில் நிகழ்ந்த இரண்டு சம்பவங்களை இந்த நினைவு நாளில் சிந்தை செய்வோம்.

    கானப்போர் எயில் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர் இன்றைய காளையார் கோவில். இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் காளீஸ்வரப் பெருமானுக்குச் சிறப்பான தேர் செய்யவேண்டும் என்ற பெருவிருப்பம் நீண்ட நாளாக மனதில் குடிகொண்டிருந்தது. மருதுசகோதரர்கள் அதற்காக சிறந்த தேர் விற்பன்னரான குப்பமுத்து ஆசாரியை அழைத்து தம் விருப்பத்தை வெளியிட்டு தேர் செய்யப் பணித்தனர். ஆனால் குப்பமுத்து ஆசாரி தயக்கத்துடனேயே அந்தப் பணியைத் துவங்கினார்.

    நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக தேர் பணி நிறைவுற்று வெள்ளோட்டம் காணும் நாள் வந்தது. மருதுசகோதரர்களும், மக்களும் ஆலயத்தின் எதிரே குழுமியிருந்தனர்.பலர் தேரை வடம் பிடித்து இழுத்தபோதும்தேர் சிறிதும் நகரவில்லை. மருதுபாண்டியர்களுக்கு மனிதிலே கலக்கம். குப்பமுத்து ஆசாரியை அழைத்து காரணம் கேட்டார் பெரியமருது தேர் செய்ததற்கு தட்சணை தரவேண்டும்  அல்லவா? அதனால்தான் நகர மறுக்கிறது தேர் என்றார் குப்பமுத்தாசாரி. சிறப்பான தேர் செய்த குப்பமுத்தாசாரியே என்ன வேண்டும் கேளுங்கள் தருகிறேன் என்கிறார் பெரிய மருது. மன்னா இன்று ஒருநாள் நான் மன்னனாக இருக்கவேண்டும். இதுதான் நான் கேட்கும் கூலி என்று குப்பமுத்து ஆசாரி கேட்கிறார். மிகுந்த மகிழ்ச்சியோடு தன் செங்கோலையும் மன்னர் தம் பதவியையும் தருகிறார். மருதுபாண்டியர் (இது கதையல்ல , உண்மை சம்பவம்) தேரின் உச்சியில் மன்னராக வீற்றிருக்க தேர் வெள்ளோட்டம் காண்கிறது. தேர் நிலை குத்தும் சமயம் அந்த விபரீதம் நிகழ்கிறது. ஒரே நேரத்தில் அனைவரும் கடை போட, நிலை தடுமாறி குப்பமுத்துப் பாண்டிய மன்னர் தேர் சக்கரத்தில் விழ, அது அவர்மேல் ஏறிச் செல்கிறது. ஓடோடி வந்த மருதுசகோதரர்கள் ஆசாரியின் உயிரைக் காக்க முனையும்போது குப்பமுத்து ஆசாரி பேசுகிறார். மன்னா உங்கள் இராசிப்படி செய்யும் அதிகாரம் உங்களுக்கு இல்லை அப்படியே செய்தாலும் வெள்ளோடத்தன்று மன்னன் இறப்பான் என்று சோதிடம் சொன்னது. அதற்காகவே இன்று ஒருநாள் மன்னர் பதவியை கூலியாகக் கேட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் என்று குப்பமுத்து ஆசாரி சொல்லிக் கொண்டே இறந்துபோகிறார்.
    இதிலே குப்பமுத்து ஆசாரியின் தியாகம் மட்டுமல்ல மக்களுக்கா தன் ஆட்சியை (பதவியை) தந்த மருதுபாண்டியரின் தியாகமும் தெரிகிறது. இன்னொரு சம்பவம்.

    நம் திருப்புத்தூரில் தற்போது நான்கு ரோட்டில் உள்ள பெருமாள் கோவிலின் இடது புறத்தில் உள்ள ஒரு வீட்டில் (தற்போது அந்த இடம் லாட்ஜாக உள்ளது) நடந்த உண்மைச்; சம்பவம். இது என் எள்ளுப் பாட்டனாருக்கும் மருதுபாண்டியர்களுகு;கும் நடந்தது என்பதை பெருமையோடு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

    திருக்கோஷ்டியூர் தரிசனம் செய்துவிட்டு சாதாரண மனிதரைப் போல சத்திரத்திலே உறங்கிக் கொண்டிருந்த பெரிய மருதுவை ஒருவன் அவசரமாக எழுப்பினான்.

    மன்னா தாங்கள் இங்கு இருப்பதை அறிந்த கூலிப்படையினர் நூறுபேர் தங்களைக் கொல்ல வந்து கொண்டிருக்கின்றனர். அதனால் தாங்கள் தயவு செய்து தப்பிச்செல்ல வேண்டும். என்று கூறுகிறார். அப்போது தப்பிச் செல்ல நான் கோழையல்ல என்று கூறி அத்தனைபேருடன் தனி ஒருவராக இரவு 12 மணி வரை ஒரே கையாலே போராடுகிறார் பெரிய மருது (ஒரு கையிலே சிலந்தி புற்படப்டிருந்தது) அத்தனை பேரையும் வீழ்த்திவிட்டு குதிரையில் பயணப்பட, அது ஒரு இல்லத்தின் வாசலிலே சின்றது.

    இரவின் விழிப்பும், பசியும், களைப்பும் மிகுதியாய் இருக்க அந்த வீட்டிலுள்ள வயதான பெண்மணியிடம், உணவு இருக்கிறதா என்று கேட்கிறார். (அது என் முப்பாட்டனின் வீடு) எங்கள் இல்லங்களில் எப்போதும் அவசர காலம் கருதி பழைய சாதமும், பழைய குழம்பின் காய்கள், கீரைகளையும் போட்டுக் கொதிக்க வைத்த பழக்கறி (அசைவம் அல்ல) இருக்கும். மேற்சொன்ன பழைய சாதமும், பழங்கறியும் இருக்கிறது என்று கூறி பெரிய மருதுவிற்கு இந்த உணவையும் படுப்பதற்கு பாயும் கொடுத்து உறங்க வைக்கிறார். அவர் பெரிய மருது என்று தெறியாமல், கூடவந்த குதிரைக்காரனுக்கும், குதிரைக்கும் உணவு கொடுக்கிறாள். நன்றாக உறங்கி எழுந்த பெரிய மருது, அந்த பெண்மணியிடம் ஏடும் எழுத்தாணியும் கேட்க, அது கிடைக்காததால் குதிரைக்கானை அழைத்து ஓர் ஓலை, முள்  கொண்டு வரச்சொல்லி சில வரிகளை எழுதிக் கொடுத்து, சிவகங்கை சமஸ்தானத்தில் வந்து இதைக் காண்பிக்கும்படி சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார்.

    பின்னர் எம் முப்பாட்டன் வந்து இந்த ஓலையை படித்துச் சொன்னபோதுதான் வந்தது மருதுபாண்டியர் என்று தெரிந்ததாம். பாட்டிக்கு திருப்புத்தூர் கோட்டையாக இருந்தபோது பல ஊர்களில் இருந்து செல்பவர்கள் எங்கள் மூதாதையரின் இல்லத்தின் வழியாகத்தான் செல்லவேண்டும். வழிப்போக்கர்களுக்காக எப்போதும் செம்பிரான்கல் தொட்டி நிறைய பழைய சாதமும், பழகறியும் வைத்திருப்பார்களாம் இவர்களின் இந்தப் பணிக்காக, என் முப்பாட்டனாருக்கு பழஞ்சோற்றுகருநான் என்ற பட்டம் கொடுத்து ஒரு கிராமத்தையே எழுதித் தந்தனர் மருதுபாண்டியர். அந்தக் கிராமம் நம் மாவட்டத்திவ் பழையசோற்றுக்குருனேந்தல் என்ற பெயரோடு விளங்குகிறது. இந்த நாளில் என் பரம்பரையில் நடந்த நிகழ்வும், மருதுபாண்டியரின் கொடையையும் நினைவுகூர்வதில் நெஞ்சம் மகிழ்கிறது.


    மத நல்லிணக்க நாயகர்கள்

    17ம் நூற்றாண்டில் வாழ்ந்த மருது சகோதரர்கள் அனைத்து மதத்தினரையும் அவணைத்துச் செல்லும் பெருந்தன்மையான மனப்பக்குவத்தைக் கொண்டிருந்தார்கள் என்பதற்கு பல சான்றுகளை எடுத்துக் கூறலாம்.
    அவர்களுடைய காலத்தில் இஸ்லாமிய சகோதரர்களுக்கு நரிக்குடியில் தொழுகை நடத்துவதற்காக மசூதி ஒன்றை அவர்களே கட்டிக் கொடுத்திருக்கிறார்கள்.

    மேலும் சருகணியில் கிறிஸ்தவ சமுதாய மக்களுக்கு சர்ச் ஒன்றையும் கட்டிக் கொடுத்துள்ளனர் என்பதை வரலாற்றின் மூலம் நாம் அறிய முடிகிறது.
    இந்து சமுதாயத்திற்காகவும் அதனுடைய வளர்ச்சிக்கும் பெரும்பங்கு ஆற்றியுள்ளனர். திருப்புத்தூரில் உள்ள திருத்தளிநாதர் ஆலயத்தில் வயிரவர் பெருமானுக்கு மண்டபம் அமைத்தது நமது மருது சகோதரர்களே .அங்கு  மருதுசகோதரர்களின் உருவச்சிலைகள் உள்ளதே அதற்கு சிறந்த சான்றாகும். நமது ஊரில் கான்பாவா மசூதி பராமரிப்பு செலவுக்காக 17 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியதும் மருது சகோதரர்களே!

    ஒரு சமயம், பெரிய மருது அவர்களுக்கு உடலில் ஏற்பட்ட ஒரு கட்டியைக் குணப்படுத்துவதற்காக குன்றக்குடியில் ஒரு சித்தர் மருத்துவம் செய்தார். அவருடைய வைத்தியத்தில் பெரியமருதுவிற்கு இருந்த கட்டி குணமாகியது. அந்த மருத்துவர் ஒரு முருக பக்தர். அவருடைய வேண்டுகோளுக்கிணங்க மருதுசகோதரர்கள் இன்றைக்கு நாம் வழிபடும் குன்றக்குடியில் மலைமீது அமைந்துள்ள எழில்மிகு ஆலயத்தை எழுப்பினார்கள்.

    அவர்களுடைய ஆட்சிக்காலத்தில் வீரமும், ஆன்மீகமும் மதநல்லிணக்கமும் பொருளாதாரமும் சிறப்புடன் இருந்ததற்கான மேலே கூறிய சான்றுகளே போதுமானது!

    அவர்கள் வாழ்ந்த சிவகங்கைச் சீமையில் வாழுகின்ற நாமும் அவர்கள் கட்டிச் சென்ற வழியில் சென்று நாடும் நாமும் செழிக்க பாடுபடவோம்!
    மாமன்னர் மருதுபாண்டியர்கள் நினைவிடம் பற்றியது

    திருப்புத்தூர் (சிங்காரத்தோப்பு) சுவிடிஸ் மருத்துவமனை வளாகத்திற்குள் மாமன்னர் மருதுபாண்டியர்களை அடக்கம் செய்த இடத்தில் நினைவு மண்டபம் கட்டுவதற்கு 1990ம் வருடன் ஜூன் மாதத்தில் தமிழக முதல்வராக இருந்த மாண்புமிகு டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி ஆட்சி அறிவித்ததற்குப் பின் நடந்தவை

    03.05.1990-ல் மாண்புமிகு அமைச்சர் பொம்முடி அவர்கள் திருப்புத்தூர் சுவிடிஸ் மருத்துவமனை வளாகத்திலுள்ள மருதுபாண்டியர்கள் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செய்து அதன்பின் திரு. தென்னரசு அவர்களிடம் நினைவு மண்டபம் கட்டும் வி­யமாக கலந்து பேசியது.

    30-10-90ல் மாண்புமிகு அமைச்சர் துரைமுருகன் அவர்கள் திருப்புத்தூர் வந்து எஸ்.எம்.மருத்துவமணை வளாகத்திலுள்ள மருதுபாண்டியர்கள் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தியபின் திரு. தென்னரசு அவர்களிடம் நினைவு மண்டபம் கட்டுவது சம்பந்தமாக பேசியது.

    திருப்புத்தூர் மருதுபாண்டியர்கள் நினைவிடத்தில் மாண்புமிகு அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் முன்னாள் அமைச்சர் திரு.பொன். முத்துராமலிங்கம் அவர்களும் அஞ்சலி செலுத்தியபின் நினைவு மண்டபம் அமைப்பது பற்றி ஆலோசனை நடத்தினார்கள்.

    இந்த காலகட்டத்தில் தி.மு.க அரசு கலைக்கப்பட்டு 1991ல் அ.இ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தது.

    1991ல் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன்  1990 ஜூன் மாதம் (முந்தைய கஞைர் ஆட்சி) திருப்புத்தூர் எஸ்.எம்.மருத்துவமனை வளாகத்திலுள்ள மருதுபாண்டியர்கள் அடக்கம் செய்த நினைவிடத்தில் மருதுபாண்டியர்கள் நினைவு மண்டபம் கட்டுவது, மண்டபத்திற்குள் மருதுபாண்டியர்களின் முழுஉருவச் சிலை வைக்க வேண்டும் என்று  செய்திருந்தமுடிவை அமுல்படுத்தியது.

    தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலதிதா அவர்கள் 21‡10‡92 அன்று சிவகங்கையில் இருந்தபடி மருதுபாண்டியர்களின் நினைவு மண்டபம் திறப்பு விழா செய்து அறிவிக்கப்பட்டு நினைவுக் கல்லும் பதிக்கப்பட்டது.

    முன்னாள் மந்திரி திரு.கண்ணப்பன் அவர்களால் திருப்புத்தூர் கோட்டையின் மேற்குத் தளத்தில் தூக்குமரம் உருவாக்கி மருதுVபாண்டியர்கள் இருவரையும் 24‡10‡1801ல் கரரன்ல் அக்னியு தூக்கிலிட்ட இடத்தில் தமிழர்களின் முத்தமிட்ட அந்;த மாவீரர்களுக்கு மத நல்லிணக்கம் ‡ ஒருமைப்பாடு மனித நேயத்துடன் வாழ்ந்து காட்டிய அந் த மாவீரர்களுக்கு நினைவுத்தூண் ஏற்படுத்தி அதன் விVவை 193ம் வருட ஆண்டு நினைவு விழாவாக 24‡10‡1994ம் தேதியை விரவான முறையில் ஏற்பாடு செய்திருந்தார். மேலும், திருப்புத்தூர் எஸ்.எம் மருத்துவமனை வளாகத்திலுள்ள மருதுபாண்டியர்களின் இருவர் சிலைக்கும் முதல் மரியாதையாக மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தபின்தான் தூக்கிலிட்ட இடத்தில் உள்ள நினைவுத்தூண் திறப்பு விழா என்ற அழைப்பிதழ்கள், அச்சடித்து சகலருக்கும் அனுப்பி அதன்படி முறையாக மருதுபாண்டியர்களின் நினைவு மண்டபத்திற்கு அப்போதைய மந்திரி திரு எஸ். .எஸ்.கண்ணப்பன் அவர்களும், தேவர் பேரவைச் செயலாளர்  திரு. இராமதிருஷ்ணன் அவர்களும் தென்மாவட்ட அகமுடையார் சங்கத்தலைவர் கோ. ஜெயப்பிரகாஷ் அவர்களும், கூத்தகுடி சண்முகம் அவர்களும் மக்கள் வெள்ளத்தோடு வந்து இருவர் சிலைகளுக்கும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி அதன்பின்தான் நினைவுத்தூண் திறந்து வைத்தார்கள்.

    மாமன்னர் மருதுபாண்டியர்களின் 194வரு வருட ஆண்டு நினைவு விழா அஞ்சில 24‡10‡1995ல் நடைபெற்றது. அன்று முழு சூரியகிரகணம் இருந்தும் தமிழக அரசின் மரியாதையை  முதலில் செய்யவேண்டும் என்பதற்காக, சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே.சண்முகம் அவர்கள் வந்து மரியாதை செலுத்தினார்கள்.

    சுவீடிஸ் மி­ன் மருத்துவமனை


    இது தமிழ் நாட்டிலுள்ள தலைசிறந்த மருத்துவமனைகளுள் ஒன்று. 1909 டாக்டர் கூகல்பர்க் என்ற சுவீடன் நாட்டு டாக்டர் இங்கு கண் ஆஸ்பத்திரி ஏற்படுத்தினார். கண் மருத்துவத்துறையில் அவர் ஒரு நிபுணர். அவரிடம் பயின்ற பலர் தமிழ்நாடெங்கும் கண் மருத்துவத்தில் புகழும் பொருளும் பெற்றிருந்தனர். இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு சென்னையில் ஏற்பட்ட முதல் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த டாக்டர் குருபாதம் இங்கு பணி புரிந்தவரே. கண் மருத்துவம் தவிர பிற துறைகளிலும் இம்மருத்துவமனை விரிந்திருந்தது. 300 படுக்கைகள் இருந்தன. மருத்துவமனை உள்ள இடம் வரலாறு உடையது.  மருது சமாதிக்கு மக்கள் வாரந்தோறும் சென்று வழிபட்டு, விடுதலை உணர்வும் சிவகங்கைச் சீமையின் உரிமை மருது வழியினருக்கே மீண்டும் வழங்கப் பெற வேண்டுமென்ற எண்ணமும் பெற்றனர். இவற்றைத் தடுக்க, மருதுவின் உடமையைச் சட்ட விரோதமாகப் பெற்ற சிவகங்கை அரசர் சமாதியைச் சுற்றிய 17.5 ஏக்கர் நிலத்தை  மருத்துவமனைக்கு வழங்கினார்.

    இம்மருத்துவமனையில் ஆபரே­ன் தியேட்டர் இருந்தது. சுவிடீஷ் டாக்டர்களும் பணிபுரிந்தனர். நர்ஸ் தொழிலுக்குப் பயிற்சி தரும் கல்வி நிலையமும் இயங்கிவந்தது. இன்றும் பார்வையற்றோர்களுக்கான தொழிற்பயிற்சி நிலையமும் இயங்கி வருகின்றன. ஏழை எளியவர்களுக்கு இம்மருத்துவமனை செய்த பணி பாராட்டுக்குரியதாக இருந்தது. காந்தியடிகள் 1927ல் வருகை புரிந்து இம்மருத்துவமனையின் தொண்டினைப் போற்றியது குறிப்பிடத்தக்கது. இப்போது இம்மருத்துவமனை இயங்காமல் இருந்து வருகிறது. தமிழ அரசின் பார்வை இம்மருத்துவமனைக்கு உயிரூட்டுமா?


    மருது சகோதரர்கள்

    நமது மத்திய அரசு NCERT மூலம் வெளியிட்டுள்ள விடுதலைப் போர் குறித்த விரிவான நூலில் மருது சகோதரர்கள், பாளையக்காரர் புரட்சியின தலைவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    மத்திய அரசின் மாபெரும் விடுதலைப் போராட்ட வரலாற்றுத் தொகுப்பில் ஆரம்பகால புரட்சியின் தலைவர்களாகத் தமிழகம் முழுவதும் அங்கீகரித்திருப்பது மருது சகோதரர் இருவரை மட்டுமே!

    மத்திய அரசின் மாபெரும் விடுதலைப் போராட்ட வரலாற்றுத் தொகுப்பில் ஆரம்பகால புரட்சியின் தலைவர்களாகத் தமிழகம் முழுவதும் அங்கீகரித்திருப்பது மருது சகோதரர் இருவரை மட்டுமே!

    மருது சகோதரர்கள்தான் முதன்முதலாக வெள்ளையனுக்கு எதிராகப் போரை ஒருங்கிணைந்து, ஓர் இயக்கமாக்கி வெள்ளையனை வெளியேறச் சொல்லி முறைப்படி பிரகடனம் வெளியிட்டு, வரலாற்றில் சிறப்பம்சம் பெற்றவர்களாக விளங்குகின்றனர்.

    மருது சகோதரர்கள் இருவருமே மன்னர்களாக விளங்கினர். இருவருக்கும் தனித்தனி அரண்மனைகள் இருந்திருக்கின்றன.
    பெரிய மருதுவுக்கு இராக்காதத்தாள், கருப்பாயி ஆத்தாள், பொன்னாத்தாள், ஆனந்தாயி ஆத்தாள், மீனாட்சி ஆத்தாள் ஆகிய ஐந்து மனைவிகள்.
    இராக்காத்தாள் மூலம் பிறந்தவர்கள் குடைக்காதுடையார், முத்துச்சாமி , உடையனன், முள்ளிக் கட்டிச்சாமி.

    கருப்பாயி ஆத்தாள் மூலம் கறுத்த தம்பி என்ற கருத்துடையாள் என்ற கறுத்த பாண்டியன், காந்தேரி ஆத்தாள், மருதாத்தாள்.
    பொன்னாத்தாளுக்கு பிள்ளை ஏதும் கிடையாது.
    ஆனந்தாயி ஆத்தாளுக்கு மகள் பிறந்து இறந்துவிட்டதாகத் தெரிகிறது.
    நாயக்கர் சமூகத்தினைச் சேர்ந்த மீனாட்சி ஆத்தாளுக்குத் தங்கம் என்ற மகள் உண்டு.

    சின்னமருதுவுக்கு வீராயி ஆத்தாள், மீனாட்சி வைராத்தாள் என்ற மூன்று மனைவிகள்.

    வீராயி ஆத்தாள்மூலம் சிவந்த தம்பி, சிவஞானம், முத்துவடுகு என் துரைச்சாமி.
    2வது 3வது மனவி பிள்ளைகள் விபரம் தெரியவில்லை.

    சிவகங்கைச் சீமையில் கிட்டத்தட்ட எல்லா ஊர்களிலும் சத்திரம் கட்டியிருக்கிறார்கள். திருப்புத்தூரில் கட்டியிருந்த சத்திரம் பிற்காலத்தில் உயர்நிலைப்பள்ளியாக செயல்பட அனுமதிக்கப்பட்டது.

    திருப்புத்தூரில் திருத்தளி நாதர் கோயிலுக்குள் இரண்டடடடடாம் திருச்சுற்றின் வடக்கிள் பைரவர் கோயில் மேற்கு நோக்கியுள்ளது. இப்கோயில் முன்மண்டபத்தை அடுத்துள்ள மண்டபம் மருதுசகோதரர்களால் கட்டப்பட்டது. அங்கு கோயில் கொண்டுள்ள சிலையின் மார்பில் மருதுசேர்வை என்ற பெயர் பொறித்த பதக்கம் உள்ளது.
    மேலும், சிவகங்கைச் சீமையில் காளையார் கோயில், குன்றக்குடி, சிவகங்கை, வாணியங்குடி, மானாமதுரை, திருப்பாச்சேத்தி, சிங்கம்புணரி, உஞ்சனை, ஏரியூர், நாச்சியாபுரம், கோவிலூர், ஒழுகமங்கலம், மறைநாடு, சிறுவயல் ஆகிய ஊர்களில் உள்ள கோயில்களில் மருதுசகோதரர்கள் காலத்தில் கட்டப்பட்டும், சீரமைக்கப்பட்டவையும் ஆகும்.

    திருப்புத்தூர் சமஸ்கான் பள்ளிவாசல் தெரு, சமஸ்கான் சகோப் தர்ஹா, சமஸ்கான் புதுக்கோட்டை ரோடு, கான்பர் ஒலி தர்ஹா, நரிக்குடி ஜமால் ஒலி தர்ஹா, பாசிப்பட்டணம் நயினா முஹம்மது ஒலியுல்லா தர்ஹா, காரா ஊருணிக்கருகே அடங்கியுள்ள இரசூல் சாயபு (இவர் அடங்கியுள்ள இடத்தில் மசூதி) மதுரை கீழவெளிவீதியில் சப்பாணி கோயில், பேருந்து நிறுத்தம் அருகே உள்ள சின்னா நூர்தின் பள்ளிவாசல் ஆகியவற்றிற்கு அவர்களின் மேற்கொண்ட நன்மதிப்பால் இடமும் பொருளுமே தானமாக மருதுசகோதரர்கள் வழங்கி மதச்சார்பின்மையை நிலைநாட்டியுள்ளார்கள்.

    மருதுசகோதரர்கள் சிறுகுறிப்பு


    • 1738ல் (சுமாராக ) பெரிய மருதுவும்
    • 1724ல் சின்ன மருதுவும் பிறந்துள்ளனர்.
    • 1768ல் பெரியமருது விறுவயல் ஜமீன்தாரராகவும், உறுதிக்கோட்டை ஜமீன்தாராகவும் ஆனார்கள்.
    • 1772ல் வேலுநாச்சியாருடன் மருதுசகோரர்கள் திண்டுக்கல் விருப்பாட்சி செல்லல்
    • 1779‡80ல் நபாபிடமிருந்து சிவகங்கையை மீட்டு ¼வேலுநாச்சியார் ராணி முடிசூட்டுதல்
    • பிறகு மருதுசகோதரிடம் சிவகங்கை ஆட்சி    மாறுதல்
    • 1783ல் சிவகங்கைமீது கர்னல் ஃபுல்லர்ட்டன் படையயடுப்பு
    • 1788ல் கர்னல் ஸ்டீவர்ட்டுன் கொல்லங்குடி இரணமலக்கோட்டை, காளையார் கோவிலில் போர்.
    • 1789ல் காளையார்கோவில் கோட்டையை கர்னல் மார்ட்டினிடமிருந்து திரும்பக் கைப்பற்றுதல்.
    • 1792ல் தொண்டைமானுடன் 2வரு எல்லைப்போர்.
    • 1794 முத்துராமலிங்க சேதுபதியுடன் ஆனந்தூர், பரமக்குடியில் மருதுசகோதரர் படை போரிடல்.
    • 1789‡94 (சுமாராக) காளையார் கோயில்   திருப்பணியும், 1790‡94ல்(சுமாராக) குன்றக்குடி கோயில் திருப்பணியும் நடைபெற்றது.
    • 1796 வேலுநாச்சியார் மரணம்
    • 1799ல் கட்டபொம்மன் சிவகங்கைக்கு அடைக்கலம் நாடி வருதல்
    • 1801ல் கமுதி கோட்டை சிவகங்கை வசமானது. அதே ஆண்டில்தான் ஆங்கிலேயருக்கு பெரும் தோல்வி தந்த 32 நாடட்கள் நடைபெற்ற காளையார் கோயில் போர்நடந்தது.
    • 1801 ல்தான் கோயில் கோட்டையை மருதுசகோதரர்கள் படைகள் காலி செய்து
    • காடுகளில் மறைதல், கோட்டையை கும்பினிப் படை கைப்பற்றுதல்
    • 1801 அக்டோபர் 24ல் மருதுசகோதரர்கள் மற்றும் போராளிகள் திருப்புத்தூர் கோட்டையில் தூக்கில் போடப்பட்டார்கள்.
    • 1801 அக்டோபர் 27ல் மருதுசகோரர்கள் உடல் அடக்கம் செய்யப்பட்டது.